Wednesday, September 30, 2015

Statement of the Honble Chief Minister on World Blood Donor Day

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தி

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு 8,63,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ரத்த வங்கிகள் மூலம் மட்டும் 3,50,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளில் பெறப்படுகின்ற மொத்த ரத்த அலகுகளில் 99 விழுக்காடு தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் பெறப்படுகின்றன. இதன் காரணமாக தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4118 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஒரு ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும், இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது.

நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காத்திடவும், பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரத்த தானம் செய்திடுவோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!!

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Tuesday, September 29, 2015

Election for 496 Tamil Nadu State Co-op Societies to fill up the vacant places

496 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் அக்டோபர்’5ல் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’14-ல் வாக்குப்பதிவு மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 15 இதர வகை கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுடன் 335 கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காலி இடங்கள் ஆகியவற்றிற்கான தேர்தலும் அக்டோபர் ’14- ஆம் தேதி அன்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’5-ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு.ம.ரா.மோகன், இ.ஆ.ப., (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :-
161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் 161 தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 9 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநுhல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம், கதர் கிராமத் தொழில்வாரிய முதன்மை செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம் மற்றும் மீன்வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 சங்கங்கள் ஆக 161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், இவர்களில் இருந்து 161 தலைவர் மற்றும் 161 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் ‘5-ஆம் தேதியும், வாக்குப்பதிவு அக்டோபர்’14-ஆம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் அக்டோபர் ‘19 ஆம் தேதி அன்று நடைபெறும்.

 இந்த 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 311 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும் , 477 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

335 கூட்டுறவுச் சங்கங்கங்களில் காலி இடங்கள் 

இது தவிர, 335 கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழுவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள 424 உறுப்பினர்கள் மற்றும் 79 தலைவர் மற்றும் 53 துணைத்தலைவர் ஆகிய காலி இடங்களுக்கான தேர்தல்களும் இதே தேர்தல் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல்

 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 05.10.2015 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தாக்கல் செய்யலாம். மறுநாள் 6.10.2015 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வேட்புமனு திரும்பப்பெறுதல்

 தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 07.10.2015 காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 14.10.2015 அன்று காலை 8.00 மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி 15.10.2015 அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர், துணைத்தலைவர் தேர்தல்

தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு 15.10.2015 அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19.10.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

 இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தொடர்புடைய தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின் வலைதளம் www.coopelection.tn.gov.in-ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு. ம.ரா. மோகன், இ.ஆ.ப. (ஓய்வு) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.




Sunday, September 27, 2015

CM Letter to PM on arrest of 15 fishermen from Nagapattinam

Text of the D.O.Letter dated 25.9.2015 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India is reproduced below:-

“I write this letter with a deep sense of anguish that close on the heels of the arrest of 15 fishermen in two fishing boats from Nagapattinam fishing base on 21.9.2015, the Sri Lankan Navy has apprehended six fishermen and their two mechanized fishing boats who went for fishing from Jegathapattinam fishing base of Pudukottai District. These fishermen have been taken to Kangesanthurai and remanded.

These innocent fishermen are the sole breadwinners of their families and engage in fishing in order to eke out a meager livelihood. Their arrest and detention will severely affect their families and dependants. As I have repeatedly pointed out, the right of livelihood of our fishermen to fish in their traditional waters of the Palk Bay to which they have a historical claim is infringed upon repeatedly and effectively by Sri Lanka. This is caused in no small measure due to the Government of India having entered into an ill-advised agreement, which ceded the islet of Katchatheevu, historically part of India’s territory and undisputedly an integral part of India. The constitutionality of the 1974 and 1976 agreements has been challenged on extremely valid and legal grounds in the Hon’ble Supreme Court of India. I had personally filed W.P. (Civil) No.561/2008, in which the Government of Tamil Nadu had also subsequently impleaded itself.

I am also constrained to point out that the Sri Lankan Government is practising a strategy of impounding the boats and other fishing equipment while releasing our fishermen. Needless to say, without their fishing boats and equipment, the poor fishermen are driven into a poverty stricken state. As on date 28 fishing boats are already in Sri Lankan custody.

I request the Government of India to initiate decisive measures to find a permanent solution to this sensitive livelihood issue of our fishermen. I request your immediate and personal intervention to secure the release of the 21 fishermen and the 30 fishing boats in Sri Lankan custody.”


Condolence Message of the Honble Chief Minister on Mecca incident

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 25.9.2015

மெக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, 24.9.2015 அன்று சவூதி அரேபியாவின், மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 700க்கும் மேற்பட்ட புனித ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பதையும், 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக புனித யாத்திரை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்



Wednesday, September 23, 2015

Bakrid Festival Greetings message from CM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.



இத்தியாகத் திருநாளில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள், எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும், தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று கூறி, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Sunday, September 20, 2015

Direct Recruitment for the Directorate of Tamil Etymological Dictionary Project


The Directorate of Tamil Etymological Dictionary Project is proposed to appoint following posts by direct recruitment. This Directorate comes under the administrative control of the Tamil Development and Information Department.

Sl.No. Name of the post and number Scale of Pay Minimum Educational Qualification Communal rotation of appointment
1. Record Clerk – 1 post Rs. 4,800-10,000 + Grade Pay 1,400 Must possess a completed S.S.L.C. Open Competition – Priority
2. Computer Operator – 1 post. Monthly Rs. 5,000/- Consolidated Pay S.S.L.C. Passed, Higher grade in Tamil & English typewriting and Certificate in DTP course Open Competition 

 Priority means Intercaste Marriage, Destitute Widows, Physically Handicapped, Ex-servicemen, etc., Maximum age limit is 30 for O.C., 35 for Scheduled Castes, 32 for Backward Communities and Most Backward Communities-Denotified Communities as on 1.7.2015. Age relaxation will be given as per Tamil Nadu Govt. rules.

 Those who are qualified and interested, can apply in White Paper contains Name, Date of Birth, Religion and Community, Priority Category with self attested Xerox copy of Certificates and affix a Passport size Photo. Duly filled up application must be sent by Regd. Post or in Person, on or before 06-10-2015 at 5.30 p.m. to the Director (Full Addl. Charge), Directorate of Tamil Etymological Dictionary Project, C-48, 1st Floor, T.N.H.B. Office Complex, 2nd Avenue, Anna Nagar, Chennai – 600 040. For further details contact 044-26215023 during Office hours.

 Director (Full Addl. Charge),
 Directorate of Tamil Etymological
 Dictionary Project, Chennai-6000 040.

Friday, September 18, 2015

Arasu Cable TV Corporation Ltd, Chennai on e-service

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பத்து ரூபாய் செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப்புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

From the Overseas Manpower Corporation Ltd., Chennai -  Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

செய்தி வெளியீடு

குவைத் நாட்டில், இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவைப்படுகிறார்கள்.


மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் 1பெற்று குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு இரண்டு வருடங்கள் முடிவுற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.

இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் ஜிசிசி (GCC) கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு தகுதியுடையவர் ஆவர். இருப்பினும், குவைத் நாட்டில் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரை அவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் 19.09.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு எண் 42, ஆலந்துhர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-22502267 /22505886/8220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.









Statement of CM on Release of Water from Amaravathi Dam for Irrigation

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 18.9.2015

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பிரதானக் கால்வாய் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 19.9.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Tuesday, September 15, 2015

Vinayakar Chathurthi Greetings message from CM


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி

“முன்னவனே யானை முகத்தவனே” என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடல் கருமம் ஆதலால்
 கணபதி என்றிடக் கவலை தீருமே”



என்ற திருமந்திரத்தில், கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகர் பெருமான் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, முதன்மை கடவுளான விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

பிரணவப் பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமான், அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Special Summary Revision of Electoral Rolls Schedule

As per the schedule announced by the Election Commission of India, the draft rolls of Special Summary Revision of Electoral Rolls with reference to 01.01.2016 as the qualifying date have been published in all the 234 Assembly Constituencies of Tamil Nadu today (15.09.2015) The rolls have been hosted on the website: elections.tn.gov.in

2. The total electors as per the final rolls of Special Summary Revision, 2015 published on 10.01.2015 were 5.62 crores.

3. Now, as per the draft electoral rolls of Special Summary Revision, 2016,the total electorate in Tamil Nadu is 5.66 crores.

4. The relevant part /section of the Electoral Roll will be read in the Grama Sabha / Local Bodies and Residents’ Welfare Association Meetings on 16.09.2015 and 30.09.2015 for verification of names.

5. Special Campaigns will be conducted on 20.09.2015 and 04.10.2015 which are Sundays, at the Designated Locations (generally the polling stations). Forms for inclusion/ deletion/ modification/transposition of entries in the Electoral Rolls will be available at the Designated Locations. Filled in Forms can be submitted there.

6. The Election Commission of India has appointed the following officers of the State Government to monitor the implementation of the Special Summary Revision of Electoral Rolls, 2016:

Sl.No. Name and Post held Districts assigned
Thiru R.Kirlosh Kumar, IAS Director of Town & Country Planning Madurai
2 Thiru S.Nagarajan, IAS Director & Chief Executive Officer, TN e-Governance Agency Villupuram, Tiruvannamalai, Vellore
3 Thiru C.Samayamoorthy, IAS Director of Employment & Training Ariyalur, Perambalur, Tiruchirappalli
4 Thiru Anil Meshram, IAS Member Secretary,State Planning Commission. Thanjavur, Tiruvarur
5 Thiru M.A.Siddique, IAS Commissioner, Archives and Historical Research. Namakkal, Karur
6 Thiru T.N.Venkatesh, IAS Managing Director, Co-optex. Dindigul, Theni, Virudhunagar
7 Dr.K.Manivasan, IAS State Commissioner for the Welfare of Differently Abled. Ramanathapuram,Sivaganga,Pudukkottai
8 Thiru A.Karthik, IAS Member Secretary, CMDA Kancheepuram
9 Tmt. Pooja Kulkarni, IAS State Project Director, Sarva Shiksha Abhiyan, Tiruvallur
10 Thiru Rajendra Ratnoo, IAS Managing Director, Poompuhar Shipping Corporation Ltd. Coimbatore
11 Tmt. R.Vasuki, IAS Commissioner of Survey & Settlement. Cuddalore,Nagapattinam
12 Thiru M.S.Shanmugham, IAS Additional Secretary to Government, Industries Department. Dharmapurai, Krishnagiri, Salem
13 Thiru R.Lalvena, IAS Director of Social Defence. The Nilgiris, Tiruppur,Erode
14 Tmt. Reeta Harish Thakkur, IAS Addl. Commissioner of Industries & Commerce. Thoothukkudi,Tirunelveli, Kanniyakumari
15 Tmt. Jayashree Muralidharan, IAS, Registrar of Cooperative Societies. Chennai

Invite Institution/ Organization for training Disabilities

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வளிப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சகமும் இணைந்து புதுடெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான தேசிய செயல் திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்படி அடுத்த 7 வருடத்திற்குள் 2.5 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான தொழிற்பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி திட்டங்கள், பயிற்சி முறைகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் ஆகியவற்றை நவீன தகவல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இரண்டு கட்ட தேசிய செயல் திட்டம்

1. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க முகமைகள் மற்றும் அனுபவமும் திறமையும் மிக்க நிறுவனங்களிடமிருந்து இத்திட்டத்தில் பங்கு கொள்ளும் ஆர்வத்தினை அறியும் பொருட்டு மத்திய அமைச்சகத்தில் தங்களுடைய நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

2. இரண்டாவது கட்டமாக, அவ்வாறு பதிவு செய்து கொண்ட முகமைகள் தனியாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான நிதியுதவியினை கருத்துருவாக அனுப்ப வேண்டும். இது சம்மந்தமாக முழுவிவரம் இணையதளத்தில் முகவரியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சமஉரிமை பாதுகாப்பு சட்டம் 1995 பிரிவு 52ன் கீழ் பதிவு செய்த தொண்டு நிறுவனங்கள் இத்திட்டம் தொடர்பாக மேலும் முழு விவரங்கள் பெற இத்துறையின் இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்.

 இணை செயலாளர்
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான அமைச்சகம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பகிர்வளிப்பு அமைச்சகம்
5வது தளம், பரியாவரன்பவன், சி, ஜி, ஒ, வளாகம்,
லோடி சாலை, புதுடெல்லி – 110 003.
மின்னஞ்சல்: disabilityskilltraining@gmail.com

Department of Empowerment of Persons with Disabilities, Ministry of Social Justice and Empowerment has in collaboration with Ministry of skill Development and Entrepreneurship launched a “National Action Plan” (NAP) for Vocational Training of Persons with Disabilities at Vigyan Bhavan New Delhi. The vocational Training plan has an ambitious target for providing skill training to 2.5 million PWD’s in next 7years and proposes to use Information Technology for content generation, training delivery and monitory of training.

“National Action Plan” – A two stage process:-

In the First stage, Department is seeking Expression of interest from training providers, having experience and expertise in providing training to PWD’S for getting empanelled with DEPwD as training partners.

In the Second stage, the empanelled training partners would submit specific proposals for skill training of PWD’s to seek financial assistance from the Department. The detailed guidelines for financial assistance are available on the Department webside, www.disabilityaffairs.gov.in

The Interested organizations / institutions Registered under section 52 of PWD Act 1995 / may contact the following with detailed proposal, as per the Guidelines available on the Department’s websites:

Joint Secretary
National Action Plan for Skill Development
Department of Empowerment of Persons with Disabilities (DEPWD)
Ministry of Social Justice & Empowerment
5th Floor, Paryavaran Bhavan, CGO Comples, Lodi Road
New Delhi – 110003
Email : disabilityskilltraining@gmail.com

Tamilnadu Text Book Corporation on Book Distribution


2015-16ம் கல்வியாண்டின் இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதை முன்னிட்டு 2015-16ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ இலவசப் பாடநுhல்கள் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 14 செப்டம்பர் 2015 அன்று துவங்கி அடுத்த இரு வாரங்களில் முழுமையாக விநியோகம் செய்யப்பட உள்ளது. பாடநுhல் விநியோகம் 01.10.2015-க்குள் முடிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களது தேவைக்கேற்ப தமிழ்நாடு பாடநுhல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்களிலிருந்து பள்ளிகள் இணையளதளம் மூலம் பதிவு செய்து, நேரடியாக பாடநுhல்களை பெற்றிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விநியோகம் முடித்த பின்பு உரிமம் பெற்ற தனியார் கடைகளுக்கு அவர் தேவைப்பட்டியலின்படி சில்லறை விற்பனைக்கு பாடநுhல்கள் வழங்கப்படும்.

As 2nd Trimester for Academic year 2015-16 is scheduled to commence from October first week, the textbooks for Std 1 to 9 will be distributed during the next fortnight, commencing from 14th Sep.2015. The Government and Government Aided Schools have received complete supply of books for distribution to the children. The distribution will be completed before 1st Oct.2015.

Similarly the private schools have been instructed to place their indent online and collect the textbooks from 22 Regional Office of Tamilnadu Textbook and Educational Services Corporation, where the stocks are kept ready. After completion of supply of textbooks to schools, copies of textbooks will be issued to licensed Private Retailers for sale as per their indent.

Text Book Online






Monday, September 14, 2015

Army Recruitment-Results of Common Entrance Exam -Aug 2015

Award of medals to 130 Officers on birth Anniversary of Perarignar Anna

HON’BLE CHIEF MINISTER AWARDS ANNA MEDALS TO 130 OFFICERS/MEN IN POLICE & OTHER UNIFORMED SERVICES ON THE OCCASION OF DR. ANNA’S BIRTHDAY

In recognition of the Outstanding Devotion to Duty of the Police, Fire & Rescue Service, Prison Service, Home Guards and Finger Print Science personnel in the State and also to encourage them, the Tamil Nadu Chief Minister’s Medals are announced and awarded on the occasion of Dr.Anna’s Birthday on 15th September, every year.


Accordingly, this year 100 Police personnel from the rank of Superintendent of Police to the rank of Grade-I Police Constables, 10 Fire and Rescue Service personnel from the rank of District Officer to Fireman, 10 Prison Service personnel from the rank of Superintendent to Grade II Warder, 8 Home Guards personnel in the ranks of Section Leader, Company Commander, Home Guard and Platoon Commander and also two Deputy Superintendents of Police in police Finger Print Science for their excellence service, totally 130 personnel have been awarded the “Tamil Nadu Chief Minister’s Anna Medal” in recognition of their outstanding devotion to duty. The recipients of the above Medal are eligible for a bronze medal and a lumpsum grant according to the ranks as specified in the Medal Rules.
These Medals will be presented by the Hon’ble Chief Minister of Tamil Nadu to the recipients in a Ceremonial Medal Parade to be held in due course.

 APURVA VARMA
 Principal Secretary to Government,
 Home, Prohibition and Excise Department,
 Chennai-9.




Sunday, September 13, 2015

Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd on the performance of e-Services Centres



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் , அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவை மையங்கள் மூலமாக, இதுவரை 13,28,647 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் ஆகிய 281 இடங்களில் உள்ள அரசு  இ- சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் மேற்கூறிய அரசு இ- சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்கு பதிவு எண்ணைக் காண்பித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ. 40/- கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ஆதார் எண் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணைக் காண்பித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.30/- கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவரை 3,77,153 நபர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம் 38,014 நபர்கள் சொத்து வரியினை செலுத்தி உள்ளனர். இதுவரை 15,83,97,169 ரூபாய் சொத்து வரி இம்மையங்கள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்


Civil Supplies Grievances Redressal camps - Sep 2015



குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் செப்டம்பர் 2015 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 12.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அப்பகுதியை சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 16 மண்டல பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Civil Supplies Grievances Redressal Camps are being held in Chennai city every month for the redressal of public grievances regarding changes in the family cards, deficiencies in the functioning of Fair Price Shops or PDS commodities supplied or regarding unfair trade practices or deficiencies in the goods sold by the private sector in the market. Civil Supplies Grievances Redressal camps for the month of SEPTEMBER 2015 will be held on 12.09.2015 at 10.00 am at the places given in the Annexure. Officials from Civil Supplies and Consumer Protection Department, Co-operative Department and TamilNadu Civil Supplies Corporation would participate in the camps. General Public belonging to Fair Price Shops around this location can avail this opportunity to get their grievances redressed. Speedy action will be taken on the petitions received during this meeting to redress the grievances. Cardholders in the respective Zones in Chennai City are requested to avail this opportunity.

 Principal Secretary/ Commissioner

Thursday, September 10, 2015

Notification From Health and Family Welfare Department Tamil Nadu



ISO Certified Town Panchayats


ISO Certified Town Panchayats 





Public Information From Transport Commissioner

        It is hereby informed that a Toll free No.1800 425 5430 in the Office of Commissioner of Transport, Tamilnadu has been made operational. In this number, complaints from the public regarding overcharging etc., by any Auto rickshaw driver who has not charged as per the fares declared by the Government can be made from anywhere in the State of Tamilnadu.




State Transport Authority cum Transport Commissioner
Government of Tamilnadu.

Issued By:
DIPR, Secretariat, Chennai 9 

Special Summary Revision of Electoral Rolls


செய்தி வெளியீடு எண்: 440
நாள் : 10.09.2015


பொதுத் (தேர்தல்கள்-1) துறை

செய்தி வெளியீடு

1.1.2016-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2. 15.09.2015 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். elections.tn.gov.in  என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.

3. 05.01.2015 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2015-ன் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 5.62 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.



4. 06.01.2015 முதல் நாளது வரையிலான தொடர் திருத்தக் காலத்தில் 9.25 இலட்சம் படிவம்-6 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன (இவற்றில் 4.20 இலட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் 5.05 இலட்சம் இடம்பெயர்ந்தோர் ஆவர்). இறப்பு, இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு போன்ற காரணங்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரையறைகளுக்குட்பட்டு 3.15 இலட்சம் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

5. 15.09.2015 அன்று வெளியிடப்படவுள்ள 2016 சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

6. 16.09.2015 மற்றும் 30.09.2015 ஆகிய நாட்களில் கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் / பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

7. 20.09.2015 மற்றும் 04.10.2015 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தல்/இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

8. இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் மனுக்கள் அளிக்கும் காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் மாற்றம் செய்யவோ விரும்பும் ஒரு வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 7, 8 மற்றும் 8ஏ ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்:

(1) அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் / வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

(2) சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.

(3) அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

நமது மாநிலத்தில் தற்போது 28,850க்கும் அதிகமான நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்கள் உள்ளன.

9. பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை / வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம் / ஓட்டுநர் உரிமம் / கடவுச் சீட்டு / தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது / ஆதார் கடிதம் போன்றவற்றை முகவரிச் சான்றாகச் சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்கவேண்டியது கட்டாயமாகும்.  elections.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

10. 1.1.2016 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரை (அதாவது 18-25 வயதிலுள்ள மனுதாரர்கள்)த் தவிர, ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும். இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலுங்கூட, தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் (அல்லது)  தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம் 6-ன் பாகம் IV-ஐ பூர்த்திசெய்ய வேண்டியது கட்டாயமாகும்.

11. வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, ஆனால் அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர்/மண்டல அலுவலகத்தில் படிவம் 001-ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

12. வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படவேண்டும் - அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டுச் சரிபார்த்து அப்போதே திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6A தபாலில் அனுப்பப்படும்போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்படவேண்டும்.

 தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழ் நாடு


வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Sunday, September 6, 2015

CM Writes Letter to PM on Willful Default in Releasing TN's Shares of Cauvery

Text of the D.O. Letter dated 04.09.2015 addressed by Honble Chief Minister to Honble Prime Minister on the willful default by the Government of Karnataka in not adhering to the schedule of release of Cauvery water

PRESS RELEASE

Text of the D.O. Letter dated 04.09.2015 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India is reproduced below:-

I write this letter to bring to your kind attention, the wilful default by the Government of Karnataka in not adhering to the schedule of release of Cauvery water as stipulated by the Cauvery Water Disputes Tribunal in its Final Order dated 5.2.2007.

The Government of Karnataka, which is the upper riparian State, is duty bound to ensure the stipulated monthly flows in 10 daily intervals during every water year, as per the Final Order of the Cauvery Water Disputes Tribunal, dated 5.2.2007. As you are aware, the Final Order of the Cauvery Water Disputes Tribunal has been notified by the Government of India on 19.2.2013, giving it the status of a decree of the Supreme Court.



On account of Karnataka’s default, Mettur Reservoir could not be opened on the scheduled date of 12th June, 2015, during this year for the farmers to raise the Kuruvai Crop in the Cauvery Delta.

However, the Mettur Reservoir was opened on 9.8.2015 with the available quantity of 60.411 TMC ft to enable the farmers to raise at least one single Samba Crop and the agricultural operations are in full swing. Therefore, water has to be continuously supplied in the Cauvery fed Districts in Tamil Nadu till January, 2016, for the sustenance of the Samba crop. The storage in Mettur Reservoir as on 4.9.2015

is only 50.552 TMC ft. and the inflow continues to dwindle. However, Karnataka has enough storage in its 4 major Reservoirs and has been releasing water from July, 2015, for its irrigation.

I would like to bring to your notice that, as against the quantity of 94 TMC ft. of water due to Tamil Nadu at Billigundulu as per the Final Order of the Cauvery Water Disputes Tribunal, as on 31.8.2015, only a meagre quantity of 66.443 TMC ft. has been realised. Thus, there is a huge shortfall of 27.557 TMC ft.

Instead of releasing our legitimate share as per the Final Order of the Cauvery Water Disputes Tribunal, Karnataka continues to utilise all the water in its Reservoirs as if it owns the Cauvery river with scant regard to the plight of the farmers in Tamil Nadu.


I, therefore, seek your personal intervention in the matter and request you to advise the Government of Karnataka to make good the shortfall of about 27.557 TMC ft. of water up to 31.8.2015, and also to ensure that Karnataka releases water in conformity with the Final Order of the Cauvery Water Disputes Tribunal in the coming months.

In this context, I would also like to point out that my repeated requests for the formation of the Cauvery Management Board and the Cauvery Water Regulation Committee have not yet been acceded to by the Government of India.

May I request an immediate positive response on these issues which are of vital importance to Tamil Nadu?


Issued by: Director of Information and Public Relations, Chennai – 9
Dated: 05.09.2015

Thursday, September 3, 2015

Medical Services Recruitment Board - Selection List

Medical Services Recruitment Board 

The Medical Services Recruitment Board (MRB) has been established with the objective of making direct recruitment to various categories of staff in the Health and Family Welfare Department, Government of Tamil Nadu.





Provisional Selection List for the post of Assistant Surgeon (General), 2014 (Additional List 2)

Corrigendum to the Consolidated Provisional Selection List for the post of Nurses, 2015


Wednesday, September 2, 2015

Job opportunity in Oman for Machine Operators

செய்தி வெளியீடு எண்: 429
நாள் : 02.09.2015

செய்தி வெளியீடு

ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்களுக்கான (Machine Operators) நேர்முகத் தேர்வு 4.9.2015 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும்.



எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள இயந்திரம் இயக்குபவர்கள் (Machine Operators) ஒரிஜினல் பாஸ்போர்ட், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படத்துடன், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை 600 0032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்விற்கு 4.9.2015 அன்று காலை 9.00 மணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

 நிர்வாக இயக்குநர்
வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Statement of CM on release of water from Keezhanai and Veeranam Lake for irrigation

செ. கு. எண்: 079
நாள் : 02.09.2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 2.9.2015

கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 3.9.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Announcements of Higher Education Department 2015-16

  • Modernisation of B.M.Birla Planetarium with State-of-the–Art Technology Digital Planetarium System at Periyar Science and Technology Centre, Chennai.
  • All campuses and newly constructed buildings in University of Madras to be illuminated with solar energy.
  • Introduction of Skill based B.Voc Programme for Textile and Food Science Courses in Periyar University, Salem.
  • Construction of Academic Block in Tamil Nadu Open University, Chennai.
  • Construction of Swimming Pool in Bharathiar University, Coimbatore.
  • Construction of Women’s Hostel in Bharathiar University, Coimbatore.
  • Construction of Men’s Hostel in Bharathiar University, Coimbatore.
  • Construction of Fitness Centre with Sports Science Backup at Bharathidasan University, Tiruchirappalli.
  • Construction of Women’s Hostel at Khajamalai Campus of Bharathidasan University, Tiruchirappalli.
  • Establishment of DDU Centre for KAUSHAL in Bharathidasan University, Tiruchirappalli Deen Dayal Upadhyay–Knowledge Acquisition and Upgradation of Skilled Human Abilities and Livelihood.
  • Establishment of National Repository for Microalgae and Cyanobacteria.

Statement of the Honble Chief Minister on Onion price issues

செய்தி வெளியீடு எண்:428
நாள் : 02.09.2015
 செய்தி வெளியீடு

மக்கள் நலன் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு பல முன்னோடி திட்டங்களைத் தீட்டி, சிறப்பான முறையில் செயல்படுத்துவது தான் மக்கள் நலன் பேணும் அரசின் கடமை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழக முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.



வெளிச்சந்தையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் செல்லும் காலங்களில், வெளிச்சந்தை விலை உயர்வினை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாகவும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், நுகர்வோர்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஒரே சீராக கிடைக்கவும், வழி செய்யும் வகையில் “விலை நிலைப்படுத்தும் நிதியம்” ஒன்று 100 கோடி ரூபாய் நிதித் தொகுப்புடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவின்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி மற்றும் நல்லெண்ணெய் போன்ற அத்தியவாசியப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக இந்த நிதியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் வெளிச்சந்தை விலையினை கட்டுப்படுத்தும் வகையில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் விற்கும் ஒரு விற்பனை திட்டம் 24.5.2015 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

வெளிச் சந்தையில் உயர்ந்து வந்த காய்கறிகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் வகையிலும், விவசாயிகள் தமது விளை பொருள்களுக்கு நல்ல விலை பெற்றிடவும், ஏழை எளிய நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறும் வகையில், விவசாயிகளையும் நுகர்வோர்களையும் இணைக்கக் கூடிய மக்கள் சேவைத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களல் 20.6.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 58 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக தரமான காய்கறிகள் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளன.

2013- ஆம் ஆண்டு வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்த போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவின்படி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து அதிக அளவில் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளின் வாயிலாக குறைந்த விலையில் தரமான வெங்காயம், தங்கு தடையின்றி நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, பருவநிலை மாறுதலால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த விலையேற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் வெங்காய விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில், நுகர்வோர்களுக்கு தேவையான அளவு வெங்காயம் வெளிச் சந்தையை விட குறைந்த விலையில் தங்கு தடையின்றி வழங்குவதற்காக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா மாநிலம் லாசல்கான் பகுதியிலிருந்தும் கூடுதலாக பெரிய வெங்காயம் கொள்முதல் செய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 42 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவின்படி செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை மூலம் தனியார் விற்பனை நிலையங்களில் 70 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காயத்தின் விலையை விட குறைவான விலையில் வெங்காயம் பொதுமக்களுக்கு கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கையின் காரணமாக வெங்காயம் குறைந்த விலையில் நுகர்வோர்களுக்கு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும், தேவைக்கு ஏற்ப, கூடுதல் வெங்காயம் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*******
வெளியீடு:- இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
நாள் : -2.9.2015.