Monday, February 3, 2014

The Director, Information and Public Relations Received the Prize.



     The Director, Information and Public Relations received the prize won by Tamil Nadu Float in the Republic Day Celebration, New Delhi

Tamil Nadu Arasu Cable TV Corporation on Subscription Fees.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.8.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70/- என்ற குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும் இதில் ரூ.20/-ஐ கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்துவார்கள் எனவும் அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2.9.2011 அன்று சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. 20.10.2012 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை மாநகர கேபிள் டிவி சேவையும் துவக்கி வைக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24,706 உள்ளூர் (LCO) மற்றும் பன்முனை (MSO) கேபிள் ஆப்பரேட்டர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஏறத்தாழ 65.62 இலட்சம் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

     மாதாந்திர சந்தா தொகை ரூ.70/-ஐ மாதம்தோறும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உள்ளூர் (LCO) மற்றும் பன்முனை (MSO) கேபிள் ஆப்பரேட்டர்கள் சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்து வருகிறார்கள். மாதம்தோறும் ரூ.70/-ஐ மட்டும் சந்தாதாரர்களிடமிருந்து வசூல் செய்வதை உறுதி செய்ய ஏதுவாக வரிசை எண் இடப்பட்ட அடிக்கட்டையுடன் கூடிய ரசீது புத்தகங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ரசீது புத்தகங்களை மாவட்ட துணை மேலாளர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூர் மற்றும் பன்முக ஆப்பரேட்டர்களுக்கு, அவர்களிடம் உள்ள சந்தாதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவார்கள். உள்ளூர் (LCO) மற்றும் பன்முனை (MSO) கேபிள் ஆப்பரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீது புத்தகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதைத் தவிர வேறு எந்தவிதமான ரசீது புத்தகத்தையும் பயன்படுத்துதல் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசு நிர்ணயம் செய்துள்ள மாதாந்திர கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தாலோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ரசீதினை வழங்க மறுத்தாலோ சம்மந்தப்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப் புதிய நடைமுறை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


     சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்தும் சந்தா தொகைக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதினை கேபிள் ஆப்பரேட்டர்களிடமிருந்து தவறாமல் கேட்டுப் பெறும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகையை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்தாலோ அல்லது வசூல் செய்த சந்தா தொகைக்கு இந்நிறுவனத்தால் அளிக்கப்படும் ரசீதினை வழங்க மறுத்தாலோ,
    அந்தந்த மாவட்ட கேபிள் டிவி துணை மேலாளருக்கு நேரிலோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் மின்னஞ்சல் முகவரியான ArasuCableTvCorp@gmail.com மூலமாகவோ அல்லது 044-28221233 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 044-28253021 என்ற எண்ணிற்கு ஃபேக்ஸ் (Fax) மூலமாகவோ புகாரினை தெரிவிக்கலாம்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ரூ.70/- என்ற குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையினை வழங்கி வரும் இந்நிறுவனத்திற்கு தங்களது சிறப்பான ஒத்துழைப்பினை நல்கும்படி அனைத்து உள்ளூர் / பன்முனை கேபிள் ஆப்பரேட்டர்களும் மற்றும் சந்தாதாரர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 ஜெ.குமரகுருபரன், 
 மேலாண்மை இயக்குநர் 
 தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் லிமிடெட்

Applications Invited From Eligible Persons for Hajj Pilgrimage - 2014.

     The Tamil Nadu State Hajj Committee, Chennai on behalf of Haj Committee of India, Mumbai, invites Hajj applications from the Muslims residing in Tamil Nadu and intending to perform Hajj pilgrimage during Hajj 2014 subject to certain terms and condition s. The application form for Hajj 2014 can be obtained from the Secretary and Executive Officer, Tamil Nadu State Hajj Committee, Rosy Tower, III Floor, No.13,Mahathma Gandhi Road, Nungambakkam, Chennai, from 1st February 2014 or the applications can also be downloaded from the website www.hajcommittee.com. Photocopies of the application form can also be used. The last date for submission of filled in application forms by the intending applicants is 15-03-20 14.

     2. Haj Committee of India has been implementing the policy of “Haj once in alife time” through Haj Committee of India. The intending pilgrims should possess valid International Passport issued on or before 15-03-2014 and valid atleast upto 31-3-20 15. The applicants must give details of their account in a bank having IFS code.
    For details about Hajj 2014, the pilgrims should go through the guidelines for Hajj2014 or access the Haj Committee of India’s website www.hajcommittee.com.

     3. The filled in applications should be submitted to Tamil Nadu State Hajj Committee along with the copy of pay-in-slip of Rs.300/- per pilgrim towards non-refundable processing fee deposited in the Haj Committee of India’s Account No.33564923057 maintained with State Bank of India through Core Banking system on or before 15-03-20 14.

K. ARULMOZHI,
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Monday, January 13, 2014

Milad-un-Nabi wishes of the Honble Chief Minister

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்  மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி 

     அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் “மீலாதுன் நபி” என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உண்மையை பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

    அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

    இப்புனித மிக்க பொன்னாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “மிலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர்

List of Award Winners.

      தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

      விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-

திருவள்ளுவர் விருது :                             கவிஞர் யூசி (தைவான்) 
தந்தை பெரியார் விருது :                     திருமதி சுலோச்சனா சம்பத் 
அண்ணல் அம்பேத்கர் விருது :           பேராயர் முனைவர் எம்.பிரகாஷ் 
பேரறிஞர் அண்ணா விருது :               திரு பண்ருட்டி ச. இராமச்சந்திரன் 
பெருந்தலைவர் காமராசர் விருது : திரு. கி. அய்யாறு வாண்டையார் 
மகாகவி பாரதியார் விருது :              முனைவர் கு. ஞானசம்பந்தன் 
பாவேந்தர் பாரதிதாசன் விருது :     முனைவர் திருமதி. இராதா செல்லப்பன் 
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது :  திரு. அசோகமித்ரன் முத்தமிழ்க்காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது :           பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் 

      மேற்காணும் விருதுகளை 15.1.2014 அன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

       விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்.

Pongal wishes from the Honble Chief Minister.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பொங்கல் திருநாள்” வாழ்த்துச் செய்தி 

      உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

       “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.



“மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ  வழங்கும் குணமுடையோன் விவசாயி” 

        -- என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாக்கிற்கிணங்க, பிறர்வாழ பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்கென “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”; வேளாண் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு; சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், ஏனைய விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்; உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் பயறு வகை, சிறுதளை, விதைப் பைகள் விநியோகம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலான கொள்முதல் விலை; வறட்சி ஏற்படின் உடனடி நிவாரணம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

        பொங்கல் பண்டிகையைத் தமிழர்கள் இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்திட எனது தலைமையிலான அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்

Friday, January 10, 2014

Pongal Bonus for Public Sector Undertaking Employees.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 10.1.2014 

     நாட்டின் இன்றியமையாத் தேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், குறைந்த விலையில் நிறைவான சேவையை அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டவை பொதுத் துறை நிறுவனங்கள்.

     இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் நன்கு செயல்பட வேண்டுமானால், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய பயன்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.

     எனவே தான், எனது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 1965 ஆம் ஆண்டு போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி போனஸ் வழங்கி வருகிறது. போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் வராத பணியாளர்களுக்கு பொங்கல் தினத்தை ஒட்டி, சிறப்பு போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் (Ad hoc Bonus) தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


 இதன்படி,

1) தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு  2 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

2) 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் (Ad hoc Bonus) தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.

3) சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

    எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மூலம், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாட வழிவகை ஏற்படும்.

ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர்

Wednesday, January 8, 2014

Free Training Programme on Skill Development.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ATI, கிண்டி, சென்னையுடன் இணைந்து வழங்கும் இலவச திறன் எய்தும் பயிற்சித் திட்டம் 

இன்றைய தொழிற்வளார்ச்சியின் காரணமாக புதுயுக இயந்திரங்களை இயக்கும் திறன்பெற்றவார்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ATI, கிண்டி பயிற்சி நிலையத்துடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பின்வரும் குறுகியகால திறன் எய்தும் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

1. ஆட்டோமொபைல் வாகன பGதுபார்த்தல்
2. சி.என்.சி மெதன் புரோகிராம் மற்றும் இயக்குதல்.
3. பற்றவைப்பு (வெல்டிங்).
4. எலெக்ட்ரிகல் மெதன் மற்றும் டிரான்ஸ்பார்மார் பராமரிப்பு
5. டார்னார், மில்லிங், கிரைண்டிங் இயந்திரங்களை இயக்குதல்.
6. தொழிற்சாலை கருவிகள் அளவெடுத்தல் மற்றும் கட்டுபாடு பற்றி அறிதல்.
7. வெப்ப சோதனை மற்றும் உலோகங்களை சோதித்தல்.

இத்திறன் எய்தும் பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும். பயிற்சி நேரம் தினசாரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ATI கிண்டி, சென்னையில் நடைபெறும். பயிற்சியின் முடிவில் திருப்திகரமாக பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளார்களுக்குஅரசு சான்றிதழ் வழங்கப்படும்.

 இப்பயிற்சிகளில் சேர 8ம் வகுப்பு தோர்ச்சி, 10ம் வகுப்பு தோர்ச்சி, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்விதகுதிகளுக்கு ஏற்ப தொழிற்பிரிவுகள் ஓதுக்கீடு செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவார்களின் வயது வரம்பு 18 முதல் 45க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.அரசு விதிகளின் படி இனசுழற்சி பின்பற்றப்படும். தங்குமிட வசதி விருப்பத்தின் போ¤ல் கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்து தரப்படும்.

விண்ணப்பதாரார்கள் தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச் சான்று, இருப்பிட முகவா¤க்கான சான்று மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் (passport size)ர் கொண்டு வர வேண்டும். மேலும், இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன், பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 08.01.2014, 09.01.2014 மற்றும் 10.01.2014 ஆகிய நாட்களில் அட்வான்ஸ்டு பயிற்சி நிலையம்(ATI), ஆலந்ழார் சாலை, திரு.வி.க.தொழிற் பூங்கா, கிண்டி, சென்னை - 32ல் வழங்கப்படும்.


 பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவார்கள் இயக்குநார், அட்வான்ஸ்டு பயிற்சி நிலையம்(ATI), (DGET, Ministry of Labour & Employment, Government of India), கிண்டி தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில், கிண்டி, சென்னை (தொலைபேசி எண்கள்: 044 - 22501460, 22500252, 22501211 இணையதள முகவா¤: www.atichennai.org.in) அவார்களை மேற்கூறிய தினங்களில் நோரில் அμகுமாறு முனைவார் பூ.முத்துவீரன் , இயக்குநார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அவடிகள் கேட்டுக் கொள்கிறார். 

Minister for Rural Industries participated in the 2nd Edition Tamil Nadu MSME summit of CII.

      மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. ப. மோகன் அவர்கள் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில்...
• தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்கியவர்கள் 2.25 இலட்சம் நபர்கள்
• மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 2 1/2 ஆண்டு ஆட்சி காலத்தில் ரூ.228 கோடி மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது
• தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி



   மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில் செயல்படும் தமிழக அரசு அளித்துவரும் அனைத்து சலுகைகளையும் துய்த்து தொழில்வளம் செழிக்கச் செய்து வேலைவாய்ப்பினை பெருக்கி, பொருளாதாரத்தில் ஏற்றம் காண வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் திரு. மு. தனவேல், இ.ஆ.ப., CII கன்வீனர் ஜெயக்குமார் ராமதாஸ், CII கோ-கன்வீனர் திரு. மு.ஞ. கோபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Special buses for Pongal festival dated 8th January 2014.



        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சௌகரியமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 10.1.2014 அன்று 600 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 1325 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 1175 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். 14.1.2014 அன்று பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



     இதே போன்று சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10.1.2014 அன்று 345 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

     மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை 6,514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை உறவினர்கள், நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிட வசதியாக, இதே அளவிலான சிறப்புப் பேருந்துகளை 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     பொங்கல் பண்டிகையை ஒட்டி 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு, இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், Online Ticket Reservation System www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

     இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

      பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அரசின் மேற்காணும் மக்கள் நல நடவடிக்கைகள், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வழிவகை செய்யும்.

Friday, January 3, 2014

Extension of time for applying - Honble Chief Minister Kanini Tamil Award - 2013.

      தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

       தற்போது, விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20.1.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

      விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org)  இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

தமிழ் வளர்ச்சி இயக்குநர், 
தமிழ் வளர்ச்சி இயக்ககம், 
ஆல்சு சாலை, எழும்பூர், 
சென்னை – 600 008. 


PR From Tamil Nadu Arasu Cable TV Corporation Limited.


Competitions for School Students.

பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள் 

      தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான கலைகளில் ஈடுபடும் வகையில் பல கலைகளில் பயிற்றுவிக்கிறது. சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக, குழந்தைகளிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில், போட்டிகள் நடத்தியும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கிடையே மாநிலஅளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 வயது வகைகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் சவகர் சிறுவர் மன்றச் செலவுகளிலேயே கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.7,500/- மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.


      சென்னை மாவட்ட கலைப் போட்டிகள் முறையே, 8.1.2014 அன்று பரதநாட்டிய போட்டி மற்றும் கிராமிய நடனப் போட்டியும், 9.1.2014 அன்று குரலிசைப் போட்டியும், 10.1.2014 அன்று ஓவியப் போட்டியும் நடைபெறவுள்ளது. 5-8, 9-12, 13-16 என்ற மூன்று வயது வகைப் பிரிவுகளில் போட்டிகள் சென்னை-28, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

     போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறந்த தேதி (Birth Certificate / Bonofide ) சான்றிதழ் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வயது வகைக்கும், ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்சம் 5 குழந்தைகள் ஒரு பள்ளியிலிருந்து அனுமதிக்கப்படுவர். பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய போட்டிகள் 5-8, 9-12 வயது வகை மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிகள் அனைத்து வயது பிரிவு மாணவர்களுக்கும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்,

      போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. மாவட்ட போட்டியில் 9-12, 13-14 வயது வகைப் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாணவர்களுக்கிடையே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசின் செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள்

1. பரதநாட்டியம் பரதநாட்டியம் 

 பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)

 தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக்கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

3. குரலிசை 

       கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், குழுப்பாடல்கள், அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.

 4. ஓவியம் 

      40X30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

5. வயது விவரம்

 (1.6.2013 அன்று உள்ளபடி 16 வயது)

 அ. 5 முதல் 8 வயது பிரிவு – 1.6.2005 முதல் 31.5.2008 வரை
 ஆ. 9 முதல் 12 வயது பிரிவு - 1.6.2001 முதல் 31.5.2005 வரை
 இ. 13 முதல் 16 வயது பிரிவு – 1.6.1997 முதல் 31.5.2001 வரை



 மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 044- 28192152, 29103195  
அரசுச் செயலாளர் / ஆணையர்(பொ) 



Wednesday, January 1, 2014

Honble Chief Minister Statement on EB Settlement.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை – 1.1.2014 

      தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்; சுமுகமான தொழில் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதிலும்; தொழிலாளர் சட்டதிட்டங்களின்படி அவர்களுக்குரிய பயன்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதிலும்; புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதிலும் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.


     பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதில் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் காலத்தே அளித்து வருகிறது.

     அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன்.அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று 16.12.2011 அன்று அமைக்கப்பட்டது.

    இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கீழ்க்காணும் ஊதிய உயர்வினை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி:

1) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும்.

2) இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13,160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

3) பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

4) தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் 22.7.2013-ன்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.


5) காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு (Stagnation increment) வழங்கப்படும்.
 
6) தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் (Scale of Pay and Grade Pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.


7) தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம் (Allowances and Special pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.

8) தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு (Increment) தொடர்ந்து வழங்கப்படும்.

9) பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும். பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தற்போது ஓராண்டிற்கு குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் (ஊதியம் மற்றும் தர ஊதியம்) வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

10) இந்த ஊதிய உயர்வு 1.12.2011 முதல் நடைமுறைக்கு வரும். 1.12.2011 முதல் 31.12.2013 வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும்.

11) இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் 1.12.2011 முதல் 30.11.2015 வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.

     இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70,820 பணியாளர்கள் மற்றும் 10,160 அதிகாரிகள் என மொத்தம் 80,980 பணியாளர்கள் பயன் பெறுவர்.

     இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்.

     எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, அவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழிவகுக்கும்.


 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்