Monday, October 21, 2013

Advertisement for the Post of Dean.

TAMIL NADU MARITIME ACADEMY, THOOTHUKUDI
 (AN AUTONOMOUS BODY UNDER THE GOVT. OF TAMIL NADU) 

Applications are invited for the post of Dean (Nautical) for Tamil Nadu Maritime Academy at Thoothukudi on contract basis.

Number of Post: - One

Qualifications : - Essential: 

(a) Certificate of Competency as Master (Foreign Going) issued or recognized by the Government of India.
(b) Must have served at least 5 years on Merchant Ships including Master and Mates of 5 years.

Qualifications : - Desirable: 

(a) Member of Nautical Shipping organization/ Association.
(b) Sound Knowledge of STCW/IMO/DGS Rules and Regulations.
(c) Training of Trainers and Assessors Course for faculty members.

Age limit: Maximum of 60 years relaxable on par with the prevailing DGS requirements.

Pay: Consolidated salary of Rs 75,000/- per month on contract basis.

Application and bio-data with copies of documents for qualification and experience may be sent to the address given below so as to reach on or before – 22.11.2013.


The Chairman 
Tamil Nadu Maritime Academy, 
C/O, Tamil Nadu Maritime Board, 
No. 171, South Kesavaperumal Puram, 
Off Greenways Road, Raja annamalai Puram, 
CHENNAI – 600 028 
Tel : 044-24641232/24934481/24951632 
E-mail : tnmb@md5.vsnl.net.in 
Visit us at : http://www.tn.gov.in/tnma

Status of Fare Card Issued and Meter Recalibrated in Auto Rickshaws.

FARE CARD ISSUED AND METER RECALIBRATED IN AUTORICKSHAWS UPTO 19/10/2013



Number of Fare Cards issued :62991
Number of meter calibrated/ tested and sealed :33635
No. of complaints received and redressed :485
No. of vehicles detained :2567
Contact Phone No. for Specific Complaint relating to Autorickshaws
Chennai North Zone :044-2674 4445
Chennai South Zone :044-2474 9001
:






Farm Fresh Consumer Outlets Inauguration in Chennai.


CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali .

Honble Chief Minister Chaired a Meeting on Bonus Disbursement to the Employees of State PSUs for Deepavali Festival  – 21.10.2013 

     மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

     தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இரா. வைத்திலிங்கம், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



      இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

2. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம்  ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

6. மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

 எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 




Wednesday, October 16, 2013

Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவும், சென்னையில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் Electronic Digital Printer உடன் கூடிய மீட்டரை அரசு செலவில் பொருத்தவும் உத்தரவிட்டார்கள். இது மட்டுமல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



    சென்னை மாநகரில் இயக்கப்படும் 71,470 ஆட்டோக்களில், 10.10.2013 நாளைய நிலவரப்படி, 61,235 ஆட்டோக்களுக்கு, திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண அட்டை வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், 24,849 ஆட்டோக்களுக்கு தற்போதுள்ள மீட்டர்களிலேயே கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டோக்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண அட்டைகள் வழங்கும் பணியும், தற்போதுள்ள மீட்டர்களில் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பணிகள் நிறைவுறாத நிலையினைக் கருத்தில் கொண்டும், ஆட்டோ மீட்டர் பழுதுபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், 15.10.2013 வரை உள்ள காலக்கெடுவினை 15.11.2013 வரை ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.