Civil Supplies and Consumer Protection Department Grievances Redressal Camps are being held in Chennai city every month for the redressal of public grievances regarding changes in the family cards, deficiencies in the functioning of Fair Price Shops or PDS commodities supplied or regarding unfair trade practices or deficiencies in the goods sold by the private sector in the market. Accordingly, Civil Supplies Grievances Redressal camps for the month of November 2013 will be held on 09.11.2013 at 10.00 am at the places given in the Annexure. Officials from Civil Supplies and Consumer Protection Department, Co-operative Department and TamilNadu Civil Supplies Corporation would participate in the camps. General Public around this location can avail this opportunity to get their grievances redressed. Speedy action will be taken on the petitions received during this meeting to redress the grievances. Cardholders in the respective Zones in Chennai City are requested to avail this opportunity.
Thursday, November 7, 2013
CM flagged off the trial run of Chennai Metro Rail.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (6.11.2013) கோயம்பேடு பணிமனையில், சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. (K.V.) உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள்.
விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23.085 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாம் வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் புனித தோமையார்மலை வரையிலான 21.961 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 14,600 கோடி ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலைக் கடனாக 5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும், சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகிதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து (Japan International Cooperation Agency) கடனாகப் பெறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மொத்தம் 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரயில் பெட்டித் தொடர்கள் பிரேசில் நாட்டில் உள்ள ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயிலில் குளிர்ச்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றை மெட்ரோ ரயில் தொடரின் பெட்டிக்குள் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பார்வையிட்டார்கள்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கோயம்பேடு பணிமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. (K.V.) உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் குழு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் திரு க. இராஜாராமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டம்) திரு ஆர். ராமநாதன், இயக்குநர் (இயக்கம்) திரு எல். நரசிம் பிரசாத், இயக்குநர் (நிதி) திருமதி விஜயா காந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23.085 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாம் வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் புனித தோமையார்மலை வரையிலான 21.961 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 14,600 கோடி ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலைக் கடனாக 5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும், சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகிதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து (Japan International Cooperation Agency) கடனாகப் பெறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மொத்தம் 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரயில் பெட்டித் தொடர்கள் பிரேசில் நாட்டில் உள்ள ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயிலில் குளிர்ச்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றை மெட்ரோ ரயில் தொடரின் பெட்டிக்குள் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பார்வையிட்டார்கள்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கோயம்பேடு பணிமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. (K.V.) உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் குழு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் திரு க. இராஜாராமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டம்) திரு ஆர். ராமநாதன், இயக்குநர் (இயக்கம்) திரு எல். நரசிம் பிரசாத், இயக்குநர் (நிதி) திருமதி விஜயா காந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, November 5, 2013
Tamil Nadu Cooperative Union.
Tamil Nadu Cooperative Union.
Website Link : http://www.tncu.tn.gov.in
Tamil Nadu Legislative Assembly
Tamil Nadu Legislative Assembly
The First Legislature of the erstwhile Madras State under the Constitution of India was constituted on 1st March 1952, after the first General Elections held in January 1952 on the basis of adult suffrage.
Website Link : http://www.assembly.tn.gov.in/
Thursday, October 24, 2013
Award for Individuals or Organisations Worked for the Welfare of Differently Abled Persons.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள், 3.12.2013 மாற்றுத் திறனாளிகள் நாளன்று வழங்கப்படவுள்ளது.
வ.எண் | விருதுகள் விவரம் | விருதுகள் எண்ணிக்ளை | விருது விவரம் |
1) | சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர் - கை, கால் பாதிக்கப்பட்டவர்,பார்வையற்றவர், காதுகேளாதவர்,மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தவர் | 5 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
2) | சிறந்த ஆசிரியர் - பார்வையற்றவர், காதுகேளாதவர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் | 3 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
3) | சிறந்த சமூகப் பணியாளர் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
4) | சிறந்த நிறுவனம் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
5) | மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் பணி அமர்த்திய நிறுவனம் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
6) | சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் | 2 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்; |
மொத்தம் | 13 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் | |
மேற்காணும் விருதுகள் பெற,
முதன்மைச் செயலாளர் மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே. நகர்,
சென்னை - 78
அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 4.11.2013க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)