Monday, August 31, 2015

Sunday, August 30, 2015

Election for 267 Tamil Nadu State Cooperative Societies

Election for 267 Tamil Nadu State Cooperative Societies to fill up the vacant places

செய்தி வெளியீடு எண்:426
 நாள் :27.08.2015
267 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல்

செப்டம்பர்’1-ல் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர்’8 –ல் வாக்குப்பதிவு மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 253 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 14 இதர வகை கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் செப்டம்பர்’8 - ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர்’1-ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு.ம.ரா.மோகன், இ.ஆ.ப., (ஓய்வு) தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

267 கூட்டுறவுச் சங்கங்களில் 2913 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் 267 தலைவர் மற்றும் 267 துணைத் தலைவர்களுக்கான தேர்தல்



தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் தற்போது புதியதாக துவக்கப்பட்டுள்ள 253 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 8 கூட்டுறவுச் சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநுhல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 கூட்டுறவுச் சங்கங்கள் , மீன்வளத்துறை ஆணையர் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 கூட்டுறவுச் சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி)-யின் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 கூட்டுறவுச் சங்கம் ஆக 267 கூட்டுறவுச் சங்கங்களில் 2913 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், இவர்களில் இருந்து 267 தலைவர் மற்றும் 267 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இச்சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர்’ 1-ஆம் தேதியும், வாக்குப்பதிவு செப்டம்பர்’ 8-ஆம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் செப்டம்பர்’ 14-ஆம் தேதி அன்று நடைபெறும்.

இந்த 2913 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 524 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும், 799 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 01.09.2015 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாக்கல் செய்யலாம். மறுநாள் 02.09.2015 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வேட்பு மனு திரும்பப்பெறுதல்

 தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 03.09.2015 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு

போட்டி இருப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 08.09.2015 அன்று காலை 8.00 மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி 09.09.2015 அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள்அறிவிக்கப்படும்.

தலைவர், துணைத்தலைவர் தேர்தல்

தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்அறிவிப்பு 09.09.2015 அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 14.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் விபரங்கள் குறித்து அந்தந்த சங்கங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின் வலைதளம்  www.coopelection.tn.gov.in  -ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச்சங்கங்களின் பெயர் விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு. ம.ரா. மோகன், இ.ஆ.ப. (ஓய்வு) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9


Thursday, August 27, 2015

Job Opportunity in Saudi Arabia for Doctors.

P.R. No. 425
Date:26.08.2015

PRESS RELEASE

A delegation from Ministry of Health, Kingdom of Saudi Arabia is arriving India to conduct interview for the recruitment of Allopathy Doctors in all Specialities at Delhi on 30.8.2015 & 31.8.2015 and at Bangaluru on 2.9.2015 & 3.9.2015.

Two years experience for Consultant/Specialist Doctors below the age of 55 years, Resident Doctors (MBBS + Diploma) below the age of 45 years are eligible.



The selected Resident Doctors with degree from Developing Nation, will be given the salary from Rs.75,000/- to Rs.1.20 lakhs, Specialist Doctors with degree in Advanced Nations will get Rs.2.53 lakhs to Rs.4.20 lakhs and Degree in developing Nations will get Rs.1.52 lakhs to Rs.2.50 lakhs, Consultant Doctors with degree in Advanced Nations will get Rs.4.11 lakhs Rs.6.24 lakhs and with degree in developing Nation will get Rs.2 lakhs to Rs.3.26 lakhs. Further, free food, accommodation, airticket, family visa and other benefits as per Saudi Law.

Interested Doctors may send their detailed resume by email to ovemcldr@gmail.com immediately.

For more details please contact 044-22502267/22505886/Mobile: 08220634389 and also refer our website: www.omcmanpower.com

MANAGING DIRECTOR
OVERSEAS MANPOWER CORPORATION LTD
 CHENNAI

Issued By: DIPR, Secretariat, Chennai 9 

Onam Festival Greetings From Honble Chief Minister.

செ. கு. எண்:076
நாள் :27.08.2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தி

 பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட வாமன அவதாரம் பூண்ட திருமால், அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய தலையை காண்பிக்க, திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் வீழ்த்தினார். அச்சமயம் ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வேண்டுமென்ற மகாபலி சக்கரவர்த்தியின் விருப்பத்தினை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓண விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

திருவோணத் திருநாளான இந்நன்னாளில், இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்
வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Tuesday, August 25, 2015

Job Opportunities in Animal Husbandry Department Tamil Nadu

Job Opportunities in Animal Husbandry Department Tamil Nadu

Animal husbandry contributes significantly in supplementing the income of small, marginal farmers and landless labourers and in generating gainful employment opportunities especially self-employment to a substantial number of rural and urban population many of whom are women who play a major role in the care and management of livestock. It serves as a vital source for providing nutritious protein rich balanced food in the form of milk, egg, meat and value added products. Moreover, they are also intricately associated with the social, cultural and traditional values of the region.



Animal Husbandry Department - AH Assistant    

Animal Husbandry Department - Electrician  

Animal Husbandry Department - Laboratory Attender   

Animal Husbandry Department - Laboratory Technician

Animal Husbandry Department - Livestock Inspector - Grade II  

Animal Husbandry Department - Office Assistant  

Animal Husbandry Department - Radiographer