Monday, October 12, 2015
Sunday, October 11, 2015
Job Mela at R.K.Nagar
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 17.10.2015 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை ஆர்.கே.நகர் சென்னை துறைமுக மைதானம்(ஆஞகூ), தண்டையார்பேட்டை, சென்னை-81-ல் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கு கொண்டு 20,000 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிப்போர் கோரும் சிறப்புத் திறன்களை அறிந்து அதற்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்க்க விரும்புபவர்கள் பயனுறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுயவேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விரும்புவோர் தங்களது பெயர்களை www.tnvelaivaaippu.gov.in/jobMela.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Saturday, October 10, 2015
CM on the release of water for irrigation from Thirumurthi Dam
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்காகவும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்காகவும் 12.10.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
Subscribe to:
Posts
(
Atom
)