Sunday, September 29, 2013

Medical Services Recruitment Board.

       The Medical Services Recruitment Board (MRB) under the Government of Tamil Nadu has been established with the objective of making appointments of various categories of staff in the Health and Family Welfare Department. Click Here For The Medical Services Recruitment Board.

Website Address: http://www.mrb.tn.gov.in



S.No Name of the Post
1. Radiographer
2. Assistant Surgeon
a.
Provisional Selection list of  Assistant Surgeon (General/Speciality)
b.
Provisional Selection list of  Assistant Dental Surgeon (General/Speciality)  
c.
Marks obtained by candidates in Assistant Surgeon Examination
d.
Marks obtained by candidates in Assistant Dental Surgeon Examination
e.
Schedule of Certificate Verification
f.


Certificate verification for Reserve List
7th October 2013 - Forenoon   Afternoon
8th October 2013  - Forenoon   Afternoon
9th October 2013 - Forenoon   Afternoon   
10th October 2013 - Forenoon   Afternoon
g
Provisional list of final selected candidates
Assistant Surgeon - General

Assistant Surgeon - Speciality
Assistant Dental Surgeon - General
Assistant Dental Surgeon- Speciality
3. Pharmacist - Selection List
a.
Provisional Selection list of Pharmacist
b.
Provisional Final Selection List of Pharmacist

Agricultural Engineering Department.

"In the process of "Grow More Food Programme" and "Green Revolutions", more importance was given to the Agricultural Engineering activities for increasing the agricultural production. With this objective, the erstwhile Agricultural Engineering wing was separated from the Department of Agriculture and the new "Agricultural Engineering Department" was formed in January 1981, headed by a Chief Engineer as the head of Department.



Functions

The Agricultural Engineering Department is actively engaged in the conservation, development and management of the agricultural land and the water resources. The main focus of the department is on watershed development, water management and agricultural mechanisation with an aim of achieving the following objectives;

Conserving soil fertility by controlling soil erosion.
Harvesting rain water.
Efficient use of available water.
Intensification of farm mechanisation.

About the Organization

Organization Set up of the Agricultural Engineering Department


Click Here for the Agricultural Engineering Department Website.



Thursday, September 26, 2013

Special Summary Revision of Electoral Rolls.

பொதுத் (தேர்தல்கள்-1) துறை செய்தி வெளியீடு 



       1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை கீழ் கண்ட அட்டவணைப்படி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்01-10-2013
பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த மனுக்கள் அளிக்க கால அவகாசம்01-10-2013 முதல்
31-10-2013 வரை
கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்களைச் சரிபார்த்தல்02-10-2013 மற்றும்
05-10-2013
மனுக்கள் பெற சிறப்பு முகாம் நாட்கள்06-10-2013 (ஞாயிற்றுக்கிழமை),
20-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
27-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்06.01.2014

   
      1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல்/திருத்தல்/ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றல் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்யப்படவேண்டியிருந்தால் பெயர் சேர்ப்புக்காக புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகிதப்படிவத்தில் நிரப்பி அளித்தோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட ஏதுவாக தனியார் இணையதள மையங்களோடு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

      வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2014 அன்று வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

      நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-க்கு முன்னோட்டமாக வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 58761-லிருந்து 60418-ஆக உயர்ந்துள்ளது.

       வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம், 2013-ன் இறுதிப்பட்டியல்கள் வெளியிடப்பட்ட 10.01.2013 அன்றுள்ளபடி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,15,69,062 (ஆண்கள் 2,58,56,061 ; பெண்கள் 2,57,10,567 மற்றும் இதரர் 2,434) ஆகும். 01.10.2013 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்போது தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.

      இன்று (25.092013) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துரையாடினார். அக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-ன் கால அட்டவணை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

        வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத பாகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகளை கண்டறிவதிலும் அவற்றை சரிசெய்வதிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களோடு இணைந்து செயலாற்றுவர். ஓவ்வொரு கட்சியும் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களின் விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும்.

 தலைமைத் தேர்தல் அதிகாரி
 தமிழ் நாடு

Monday, September 16, 2013

Cut-off Seniority Dates in Employment Offices for August 2013.

Amma Water.

          Honble Chief Minister inaugurated the mineral water bottling unit through Video Conference

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (15.9.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி (ஏனைநடி ஊடிகேநசநnஉiபே) மூலமாக திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன் பெறும் வகையில் “அம்மா குடிநீர்” விற்பனையைத் துவக்கி வைத்தார்கள். 

      பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 21.6.2013 அன்று அறிவித்தார்கள்.



 அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.


     பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று (15.9.2013) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அம்மா குடிநீர் விற்பனையைத் துவக்கி வைத்ததன் அடையாளமாக அடையாளமாக டையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாட்டில் அம்ம மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாட்டில் அம்மா குடிநீரை 10 ரூபாய் செலுத்தி மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 பயணிகளுக்கு பயணிகளுக்கு பயணிகளுக்கு அம்மா குடிநீர் பாட்டில்களை அம்மாகுடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் திரு பிராஜ் கிஷோர் பிரசாத், இ.ஆ.ப., அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு கூ. ரங்கராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 
நாள்: 15.9.2013

Wednesday, September 11, 2013

Precautionary Actions to Avoid Flood Situation Due to Rain.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 11.9.2013 

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஒட்டிய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (11.9.2013) எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் திரு. ஆர். விஸ்வநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு திரு. என்.டி. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் திரு. டி.எஸ். ஸ்ரீதர், வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில், சாலைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும்; சுரங்கப் பாதைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும்; எந்த நிலைமையையும் எதிர்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

1. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

2. நீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், மின்சார கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. கழிவுநீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையில், போதுமான ஜெனரேட்டர்களை இருப்பில் வைத்துக்கொள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நகராட்சி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

6. சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், நெரிசல் மிகுந்த சாலைகளில் தேங்கும் நீரை உடனடியாக கனரக பம்பு செட்டுகள் மூலம் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நீரினால் பரவும் நோய்களான டெங்குக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படா வண்ணம் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முழுவீச்சில் மேற்கொள்ளும். இதற்கென போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

8. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குகைப் பாதையில் நீர் தேங்காதவாறு தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குத் தேவையான கனரக பம்பு செட்டுகளை தயார் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வைத்துக் கொள்ளும்.

9. எந்த நிலையையும் எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாராக உள்ளது.

10. வடபழனி சந்திப்பு, ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

11. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பொதுப் பணித் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

12. கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதாலும்; கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதையும் கருத்தில் கொண்டு, வீராணம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பொதுப் பணித் துறையினரால் தனிக் கவனம் செலுத்தப்படும். காவேரிக் கரையோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்வர்.

13. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12.9.2013) விடுமுறை அளிக்கப்படும். நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும்.

      சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நேற்று இரவு பெய்த மழை காரணமாக எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. வெள்ளத்தினால் இனி ஏதேனும் பாதிப்பு ஏற்படின் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

     வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க ஏதுவாக சென்னை, வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 1070 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும், சென்னை மாநகராட்சியில் 1913 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும், இதர மாவட்டங்களில் 1077 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும் செயல்படும்.

    எந்த நிலையையும் எதிர்கொள்ள எனது தலைமையிலான அரசு தயாராக உள்ளது என்பதையும், வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் களைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும், மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Tuesday, September 10, 2013

Tourism Minister visited INS Kurusura Submarine Museum.

The Hon’ble Minister for Tourism, Thiru S.P.Shanmuganathan Visit INS Kurusura Submarine Museum, Visakhapatnam on the instructions of Hon’ble Chief Minister of Tamil Nadu 

    Under the orders of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Puratchi Thalaivi Amma, the Hon’ble Tamil Nadu Minister for Tourism S.P.Shunmuganathan and Principal Secretary, Tourism, Dr.R.Kannan on (04.09.2013) Wednesday visited the Kurusura Submarine Museum on the Beach Road here. The visit was made to learn from the experience of setting up the submarine museum, as Tamil Nadu is also coming up with a submarine museum at Mahabalipuram.

   The Tamil Nadu Tourism Development Corporation had taken delivery of a decommissioned submarine ex INS VAGLI and it was to be converted into a museum, Mr.Shanmuganathan said.





    In order to use the learning curve to do things better and quicker, this visit was made. The Hon’ble Minister and the Principal Secretary later visited the National Maritime Museum on the Beach Road.

   An Officer in the Indian Navy Commander N.Rajesh and Curator Phaniraj explained the history of the submarine and how it was hauled up the shore to make it a major tourist attraction in Visakhapatnam. Secretary of VUDA G.C.Kishore Kumar, who accompanied the Minister and the official, said VUDA would share its experience with Tamil Nadu Government. VUDA maintains the submarine museum with technical support from the Eastern Naval Command.

    The Kalvari class submarine Indian Museum Ship Kurusura was decommissioned in 2001 and was hauled up the shore in a joint venture between Indian Navy and National Ship Design Research Centre. The museum was inaugurated in 2002.

Issued By:- DIPR, Secretariat, Chennai - 9

Sunday, September 8, 2013

Vinayagar Chathurthi wishes from the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி 

       முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும் மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



“வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம்; மாமலராள்
 நோக்கு உண்டாம், மேனி நுடங்காது – பூக்கொண்டு
 துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
 தப்பாமல் சார்வார் தமக்கு”

      -- என்ற பாடலில், தமிழ் மூதாட்டியாம் ஒளவைப் பிராட்டியார், தும்பிக்கையுடன் கூடிய திருமேனி கொண்ட விநாயகரை வணங்கி அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என்று கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல்லோடு எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் சூட்டி கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றைப் படைத்து பயபக்தியுடன் வழிபட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

      வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய்நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து அனைவருக்கும்எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Friday, September 6, 2013

Funds for Social Welfare and Nutritious Noon Meal Programme Department.

     Honble Chief Minister sanctioned funds for various schemes of Social Welfare and Nutritious Noon Meal Programme Department.

 பெண் கல்வி நாட்டில் எந்த அளவுக்கு உயருகிறதோ அந்த அளவுக்கு நாடு மேம்பாடு அடையும். பெண்களுக்கு முறையான கல்வி அறிவு கிடைத்தால் சமுதாயம் உயர்வதற்கும் சந்ததிகள் வாழ்க்கை சீர்பெறுவதற்கும் மெத்தப் பயனுடையதாக இருக்கும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண நிதியுதவித் திட்டங்கள், பெண்களுக்கென சுகாதார வளாகங்கள், சுயஉதவிக் குழுக்கள் என பெண்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.



     ஏழை பெற்றோர்களின் பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என பெண்கள் நலனுக்காக 5 விதமான திருமண நிதியுதவித் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

     இந்த திட்டங்களில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனைய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு குறைவாக உள்ளதால், அதிக அளவில் ஏழை எளிய மக்களால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற இயலவில்லை.

    இதனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் நிதி உதவி பெற தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்கள். இதன்படி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுகின்றது.

     பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை அகற்றுதல், பள்ளி செல்லும் 2குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல், இடைநிற்றல் அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், புதிய வகை உணவுகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் அறிமுகப்படுத்துவதற்கு ஆணையிட்டார்கள். இந்த உணவு வகைகளை தயாரிக்க இம்மையங்களில் பணிபுரிபவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த உணவுகளை தரமாகவும், உரியநேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு கலவை இயந்திரம் (மிக்சி)வழங்க ஏற்கெனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், இந்த மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் உள்ள 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு தலா ஒரு (எவர்சில்வர்) கரண்டி 66 ரூபாய் விலையிலும், ஒரு (இண்டோலியம்) கடாய் 495 ரூபாய் விலையிலும் என மொத்தம் 561 ரூபாய் வீதம் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய் செலவில் வாங்கி வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 *******
வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 

Wednesday, September 4, 2013

State Level National Talent Search Examination.

      The State Level National Talent Search Examination for the Academic Year 2013-2014 will be held on 17th November 2013 for all the students currently studying in Std .X in any recognized school located in the State.








Tuesday, September 3, 2013

Recruitment of Tamil Nadu Special Police Youth Brigade - TNUSRB.

RECRUITMENT OF TAMILNADU SPECIAL POLICE YOUTH BRIGADE (MALE) 2013-2014



      Instructions pamphlet for the Recruitment of Tamil Nadu Special Police Youth Brigade is available for downloading. The application format can also be downloaded by clicking the District/City in which the candidate wants to be recruited.


                                        Instructions to Candidates ( Tamil )


Teachers Day Greetings Message From The Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ஆசிரியர் தின” வாழ்த்துச் செய்தி 

      எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
 காமுறுவர் கற்றறிந் தார்”

        -- என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர் வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.



     ஆசிரியர் பணியின் அருமை பெருமைகளைக் குன்றாது, குறையாது போற்றிப் பாதுகாக்கும் எனது தலைமையிலான அரசு, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளித்திடும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1660 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

       ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும். இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்திடும் ஒரு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, ஆசிரியர் தினத்தினை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்