Thursday, October 24, 2013

Award for Individuals or Organisations Worked for the Welfare of Differently Abled Persons.

     மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள், 3.12.2013 மாற்றுத் திறனாளிகள் நாளன்று வழங்கப்படவுள்ளது.


வ.எண்விருதுகள் விவரம்விருதுகள் எண்ணிக்ளைவிருது விவரம்
1)சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர் - கை, கால் பாதிக்கப்பட்டவர்,பார்வையற்றவர், காதுகேளாதவர்,மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தவர்5 விருதுகள்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
2)சிறந்த ஆசிரியர் - பார்வையற்றவர், காதுகேளாதவர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்3 விருதுகள்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
3)சிறந்த சமூகப் பணியாளர்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
4)சிறந்த நிறுவனம் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
5)மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் பணி அமர்த்திய நிறுவனம்1 விருது10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
6)சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்2 விருதுகள்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்;
மொத்தம்13 விருதுகள்10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்


       மேற்காணும் விருதுகள் பெற,
 முதன்மைச் செயலாளர் மற்றும்
 மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், 
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
 கே.கே. நகர்,
 சென்னை - 78 
   அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 4.11.2013க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Co-optex Deepavali Festival Special Exhibition.

     Honble Minister for Handlooms and Textiles Mr.S.Sundararaj inaugurated the newly designed Silk Sarees Sales of Co-optex in Deepavali festival special Exhibition.


Honble Chief Minister Flagged off the New Buses.

        Honble Chief Minister flagged off the new buses and handed over pensionary benefits to the retired Transport Department employees.

         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 23.10.2013 அன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கியும், சிற்றுந்துகள் (Small Buses) மற்றும் புதிய பேருந்துகளைத் துவக்கி வைத்தும் பேருரை ஆற்றினார்.


Monday, October 21, 2013

Advertisement for the Post of Dean.

TAMIL NADU MARITIME ACADEMY, THOOTHUKUDI
 (AN AUTONOMOUS BODY UNDER THE GOVT. OF TAMIL NADU) 

Applications are invited for the post of Dean (Nautical) for Tamil Nadu Maritime Academy at Thoothukudi on contract basis.

Number of Post: - One

Qualifications : - Essential: 

(a) Certificate of Competency as Master (Foreign Going) issued or recognized by the Government of India.
(b) Must have served at least 5 years on Merchant Ships including Master and Mates of 5 years.

Qualifications : - Desirable: 

(a) Member of Nautical Shipping organization/ Association.
(b) Sound Knowledge of STCW/IMO/DGS Rules and Regulations.
(c) Training of Trainers and Assessors Course for faculty members.

Age limit: Maximum of 60 years relaxable on par with the prevailing DGS requirements.

Pay: Consolidated salary of Rs 75,000/- per month on contract basis.

Application and bio-data with copies of documents for qualification and experience may be sent to the address given below so as to reach on or before – 22.11.2013.


The Chairman 
Tamil Nadu Maritime Academy, 
C/O, Tamil Nadu Maritime Board, 
No. 171, South Kesavaperumal Puram, 
Off Greenways Road, Raja annamalai Puram, 
CHENNAI – 600 028 
Tel : 044-24641232/24934481/24951632 
E-mail : tnmb@md5.vsnl.net.in 
Visit us at : http://www.tn.gov.in/tnma

Status of Fare Card Issued and Meter Recalibrated in Auto Rickshaws.

FARE CARD ISSUED AND METER RECALIBRATED IN AUTORICKSHAWS UPTO 19/10/2013



Number of Fare Cards issued :62991
Number of meter calibrated/ tested and sealed :33635
No. of complaints received and redressed :485
No. of vehicles detained :2567
Contact Phone No. for Specific Complaint relating to Autorickshaws
Chennai North Zone :044-2674 4445
Chennai South Zone :044-2474 9001
:






Farm Fresh Consumer Outlets Inauguration in Chennai.


CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali .

Honble Chief Minister Chaired a Meeting on Bonus Disbursement to the Employees of State PSUs for Deepavali Festival  – 21.10.2013 

     மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

     தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இரா. வைத்திலிங்கம், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



      இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

2. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம்  ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

6. மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

 எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 




Wednesday, October 16, 2013

Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவும், சென்னையில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் Electronic Digital Printer உடன் கூடிய மீட்டரை அரசு செலவில் பொருத்தவும் உத்தரவிட்டார்கள். இது மட்டுமல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



    சென்னை மாநகரில் இயக்கப்படும் 71,470 ஆட்டோக்களில், 10.10.2013 நாளைய நிலவரப்படி, 61,235 ஆட்டோக்களுக்கு, திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண அட்டை வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், 24,849 ஆட்டோக்களுக்கு தற்போதுள்ள மீட்டர்களிலேயே கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டோக்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண அட்டைகள் வழங்கும் பணியும், தற்போதுள்ள மீட்டர்களில் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பணிகள் நிறைவுறாத நிலையினைக் கருத்தில் கொண்டும், ஆட்டோ மீட்டர் பழுதுபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், 15.10.2013 வரை உள்ள காலக்கெடுவினை 15.11.2013 வரை ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Honble Chief Minister Announced Special Buses for Deepavali.

      தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 29.10.2013 அன்று 700 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 1000 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1200 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1400 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 4300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

     அதேபோல், சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29.10.2013 அன்று 634 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 950 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1256 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1210 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை 4050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்து 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 8350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 2.11.2013 முதல் 5.11.2013 வரை இயக்கப்படும்.



     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, 300 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், (Online Ticket Reservation System) பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்.24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க எடுக்கப்பட்டுள்ள மேற்காணும் நடவடிக்கைகள், தமிழக மக்கள் தீபாவளித் திருநாளை முன்னிட்டு எவ்வித சிரமுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வழிவகுக்கும்.

Tuesday, October 15, 2013

Statement of the Honble Chief Minister on Awards to Police Officers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை

    இந்து முன்னணிப் பிரமுகர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்ட வழக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை திருமங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திரு. எல்.கே. அத்வானி அவர்கள் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் மதுரையைச் சேர்ந்த ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து துப்பு துலக்கியதன் பேரில், சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக காவல் துறையினர் 5.10.2013 அன்று கைது செய்தனர்.

   இந்தப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரின் வீரதீரச் செயலையும், கடமை உணர்வையும் பாராட்டி, தமிழகக் காவல் துறையின் பெருமையை நிலைநிறுத்தியதற்காக அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை மற்றும் ஒருபடி பதவி உயர்வு அளிக்க நான் உத்தரவிட்டேன்.



    இதன்படி, இந்த வீரதீரச் செயலில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் திரு. எஸ். லட்சுமணன் அவர்களை 9.10.2013 அன்று நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருடைய வீரதீரச் செயலைப் பாராட்டி 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவருடைய மனைவியிடம் வழங்கினேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் திரு. எஸ். லட்சுமணன் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிட தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு நான் அறிவுறுத்தினேன். அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என்பதையும் அறிவித்தேன்.

     இதன் தொடர்ச்சியாக, தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க ஏதுவாக விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறையினரை 9.10.2013 அன்று தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவர்களை கௌரவிக்கும் வகையில், 21 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, உயிரை துச்சமென கருதி வீரதீரத்துடன் செயலாற்றியமைக்காக எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நான் தெரிவித்தேன். இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இன்றியமையாதவை. இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலும், இது தொடர்பான சில வழக்குகளிலும் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ள வேறு பலருக்கும் ரொக்கப் பரிசினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

     1. இதன்படி, 4.10.2013 அன்று போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு முயற்சி செய்த ஆய்வாளர் திரு. லட்சுமணன் மற்றும் திரு. ரவீந்திரன் ஆகியோரை எதிரி தாக்கி தப்ப முயற்சித்த போது அங்கு உடனடியாக வந்து அந்தக் குற்றவாளியை மடக்கி கைது செய்வதற்கு பெரும் துணையாக இருந்த பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரகுமார் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

     2. மேலும், புத்தூரில் வீட்டில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய குற்றவாளிகளை வெளிக் கொணருவதற்கும், வீட்டிலிருந்த பெண் மற்றும் மூன்று குழந்தைகளை உயிருடன் வெளியே கொண்டு வருவதற்கும் குற்றப் பிரிவு கண்காணிப்பாளருக்கு உதவியாக இருந்த மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் திரு. எம். விஜயபெருமாள் மற்றும் மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் திரு. கே. மாரியப்பன் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

     3. போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு ஆய்வாளருக்கு தகவல் அனுப்பி உதவி செய்த பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் செல்வி ராதிகா அவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், மேற்படி வழக்குகளில் தக்க தகவலை தகுந்த சமயத்தில் அளித்த மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. எஸ். ராமமூர்த்தி மற்றும் திருநெல்வேலி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. பி. பண்டரிநாதன் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

    4. இது தவிர, சென்னையில் பெரியமேடு காவல் ஆய்வாளருக்கு உதவி செய்த ஐந்து காவல் அலுவலர்கள், புத்தூரில் வெடிப் பொருட்களை கைப்பற்றி செயலிழக்கச் செய்த ஆறு பேர் மற்றும் பல்வேறு வழக்குகளில் எதிரிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவி செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள்; மேலும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (Special Division), சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigation Division), சிறப்பு நுண்ணறிவுக் குழு ((Special Intelligence Cell), சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) ஆகிய பிரிவுகளில் பணியாற்றி பயனுள்ள தகவல்கள் சேகரித்தும், விசாரணைகளில் உதவி செய்தும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்கள் மொத்தம் 245 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் காவல் துறையினர் தங்கள் கடமையை மேலும் சிறப்புற செய்ய வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 


Bakrid Greetings of the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி 

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள்அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.



       தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Thursday, October 10, 2013

DA Announcement for Government Servants and Teachers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 10.10.2013 

    “மக்களின் குரலே மகேசனின் குரல்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் “மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி” என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.



    அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்.


ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 

Wednesday, October 9, 2013

Funds for Construction of Modern Facility Godowns for Agriculture Department.

     உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சேமித்து வைக்க அதிக அளவிலான நவீன கிடங்குகளை தமிழகம் முழுவதும் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பதப்படுத்துவதன் மூலமே, அவைகள் கெடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றம், வருமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

     எனவே உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 
      இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கும் 49 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       இந்த பயிற்சி நிலையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்தல், பாதுகாப்பாக கையாளுதல், சிப்பமிடுதல் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உணவுப் பதப்படுத்தலில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் வேலைப் பளுவை குறைத்தல், விவசாய கழிவுகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களை தயாரித்தல், கால்நடை தீவனம், எரிபொருள் போன்றவைகளை உற்பத்தி செய்வது போன்ற நடைமுறைகளை பண்ணை அல்லது கிராம அளவில் செயல்படுத்த பயிற்சி அளித்தல், மருத்துவ குணமுள்ள உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குதல், மேம்படுத்தப்பட்ட சிப்பமிடுதல் முறைகளினால் பொருட்களின் சேமிப்புக் காலத்தை நீட்டித்தல், எதிர்கால பயன்பாட்டிற்கும் உலகச் சந்தைப்படுத்தலுக்கு பயன்படும் வகையிலும் உணவு பதனிடுதலையும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல், விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளியிலிருந்து இடையில் நின்றவர்கள் ஆகியோருக்கு பயிற்சி மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய சுயதொழில் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமையும். 

Tuesday, October 8, 2013

Funds for Infrastructure Development of Schools in State.

    தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வியை அளித்து, தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாணாக்கர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கிரேயான், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.



     பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும். எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

    அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எடுத்து வருகின்றார்கள்.

    அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20' X 20') SMART CLASS ROOM ஆக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.

    ஒவ்வொரு பள்ளியிலும் SMART CLASS ROOM அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

Tuesday, October 1, 2013

Gandhi Adigal Police Medal 2014.

AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FOUR POLICE OFFICIALS

          The Hon’ble Chief Minister has ordered the award of Gandhi Adigal Police Medal to

(1) Thiru. T.P. Sureshkumar, Additional Superintendent of Police, Crime (i/c), Prohibition Enforcement Wing, Erode District.

(2) Thiru. A.V. Mathi, Deputy Superintendent of Police, Central Investigation Unit (South), Chennai.

(3) Thiru. S. Periyasamy, Inspector of Police, Central Investigation Unit, Salem Zone, Salem.

(4) Thiru. R. Devaraj, Head Constable, Appakoodal Police Station, Erode District for their outstanding work in curbing illicit liquor.



The Medals will be given by the Hon’ble Chief Minister on the occasion of Republic Day, 2014. A cash award of Rs.20,000/- to each of the awardees will also be presented along with the Medal.

 (NIRANJAN MARDI)
 PRINCIPAL SECRETARY TO GOVERNMENT