Showing posts with label Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.. Show all posts
Showing posts with label Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.. Show all posts

Wednesday, October 16, 2013

Honble Chief Minister Extended Time for Auto Meters Recalibration.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவும், சென்னையில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் Electronic Digital Printer உடன் கூடிய மீட்டரை அரசு செலவில் பொருத்தவும் உத்தரவிட்டார்கள். இது மட்டுமல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.



    சென்னை மாநகரில் இயக்கப்படும் 71,470 ஆட்டோக்களில், 10.10.2013 நாளைய நிலவரப்படி, 61,235 ஆட்டோக்களுக்கு, திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண அட்டை வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், 24,849 ஆட்டோக்களுக்கு தற்போதுள்ள மீட்டர்களிலேயே கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டோக்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண அட்டைகள் வழங்கும் பணியும், தற்போதுள்ள மீட்டர்களில் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பணிகள் நிறைவுறாத நிலையினைக் கருத்தில் கொண்டும், ஆட்டோ மீட்டர் பழுதுபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், 15.10.2013 வரை உள்ள காலக்கெடுவினை 15.11.2013 வரை ஒரு மாதம் கால நீட்டிப்பு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.