Thursday, August 19, 2021

Online services offered by the Tamil Nadu Pollution Control

 Press release on the online services offered by the Tamilnadu Pollution Control Board to industries / traders / battery dealers

Tamil Nadu Pollution Control Board has been providing following online services to the industries and the local bodies through its online application named Online Consent Management and Monitoring System (OCMMS) since January 2015:

1. Issue of Consent to Establish, Consent to Operate and Renewal of Consent

2. Issue of Authorization and Renewal of authorization under Hazardous Waste Management Rules, Biomedical Waste Management Rules, E-Waste Management Rules and issue of registration under Plastic Waste Management Rules.

3. Filing of Annual Returns under Hazardous Waste Management Rules, Biomedical Waste Management Rules, Plastic Waste Management Rules, E-Waste Management Rules and Solid Waste Management Rules.

Tamil Nadu Pollution Control Board has now developed the online application for the following services in the OCMMS platform for the industries, local bodies, hazardous waste importers, dealers and consumers of Lead acid batteries. These services have been operationalized from 9 th August, 2021 at the website ocmms.tn.gov.in.

1. Issue of authorization under Solid Waste Management Rules, 2016 : 

The local body / agency appointed by them/ operator of facility can apply for authorization under the Rule 15 (y) and can also submit the annual return every year through this service.

2. Issue of authorization under the Construction and Demolition Waste Management Rules, 2016 :

The operator of the facility as specified in the Rules 7 (1) can apply in Form I for authorization and can also submit the annual returns every year using this service.

3. Issue of one time authorization for traders under Hazardous Waste Management Rules :

Traders who import other waste mentioned in Part D of Schedule III of Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules, 2016 can make application for one time authorization through this service.

4. Issue of registration for battery dealers under the Battery (Management and Handling) Rules 2001 as amended :

The dealers as defined under the Rules can apply for registration through this service.

5. Filing of annual returns under the Battery (Management and Handling) Rules 2001:

Battery manufacturer / bulk consumers / importers / recyclers / auctioneers can submit the Annual returns to Tamil Nadu Pollution Control Board through this service.

Read in Tamil<<

Statement from Overseas Manpower Corporation Ltd.

     தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்‌  பெருமளவில்‌ இந்திய பணியாளர்களைக்‌ குறிப்பாகத்‌ தமிழகப்‌ பணியாளர்களை 1978-ஆம்‌ ஆண்டு முதல்‌ பல்வேறு நாடுகளில்‌ வெளிநாட்டு வேலைகளில்‌ பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின்‌ செயல்பாடுகளை மேலும்‌ விரிவாக்கும்‌ பொருட்டு, வெளிநாட்டு நிறுவனர்‌ க்குத்‌ 6 ப்படும்‌ மனித வளத்தினை இந்நிறுவனத்திற்குப்‌ பெற்றுத்‌ தருவதற்கு வெளிநாட்டில்‌ பணியாளர்களைப்‌ பணியமர்த்துவதற்கான நடைமுறைகள்‌ அறிந்த ஆலோசகர்கள்‌/ ஆலோசனை முகவர்கள (Consultant/Consultant Agencies) ஒப்பந்த அடிப்படையில்‌ பணியமர்த்திப்‌ பெருமளவில்‌ வெளிநாட்டு வாய்ப்ட ஏற்படுத்த உள்ளது.


    ஆலோசகர்கள்‌/ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில்‌ பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள்‌ அடங்கிய விவரங்கள்‌ www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

      எனவே, உரிய தகுதி மற்றும்‌ அனுபவம்‌ உள்ள ஆலோசகர்கள்‌ / ஆலோசனை முகவர்கள்‌  (Consultant/Consultant Agencies) இந்நிறுவன வலைதளத்தில்‌ குறிப்பிட்டுள்ள படிவங்களைப்‌ பூர்த்திசெய்து 31.08.2021-க்குள்‌ அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்‌ (தமிழ்நாடு அரசு நிறுவனம்‌) எண்‌.42, ஆலந்தூர்‌ சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படு கிறது.


நிர்வாக இயக்குநர்‌

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்‌

Poll Programme for holding the Bye Election to the Council of States from Tamil Nadu

 The Election Commission of India has announced the poll programme for holding the Bye Election to the Council of States from Tamil Nadu to fill up the vacancy due to Demise of Thiru. A. Mohammedjan on 23.03.2021 as follows:-

1) Issue of Notification : 24.08.2021 (Tuesday)

2) Last date of making nominations : 31.08.2021 (Tuesday)

3) Scrutiny of nominations : 01.09.2021 (Wednesday)

4) Last date for withdrawal of candidatures : 03.09.2021 (Friday)

5) Date of Poll : 13.09.2021 (Monday)

6) Hours of Poll : 9.00 A.M to 4.00 P.M.

7) Counting of Votes : 13.09.2021 (Monday) at 5.00 P.M.

8) Date before which election shall be completed : 15.09.2021 (Wednesday)



      The Election Commission of India has notified the Secretary, Tamil Nadu Legislative Assembly Secretariat, Chennai-9 and the Additional Secretary, Tamil Nadu Legislative Assembly Secretariat, Chennai-9 as the Returning Officer and the Assistant Returning Officer respectively for the above Bye Election to the Council of States from Tamil Nadu. Nomination papers along with other documents can be filed before the Returning Officer or the Assistant Returning Officer in their offices at Secretariat, Chennai-9 between11 a.m. and 3 p.m. from 24.08.2021 to 31.08.2021, except on 28.08.2021 (Saturday), 29.08.2021 (Sunday) and 30.08.2021 (Krishna Jayanthi) which is declared as a public holiday under the Negotiable Instruments Act, 1881. The poll, if necessary, will be held on 13.09.2021 at the "LEGISLATURE COMMITTEE ROOM" in the Main Building, Ground Floor, Secretariat, Chennai-9.

CHIEF ELECTORAL OFFICER.

 TAMIL NADU. 

Financial Assistance to eminent Adi Dravidar writers

 சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை

      தமிழக அரசின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கலை, இலக்கிய மேம்பாட்டுப்‌ பணிக்கான (ADATA FOUNDATION) நிதியிலிருந்து 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும்‌ சேர்த்து சிறந்த  ஆதிதிராவிடர்‌/ஆதிதிராவிட கிருத்துவர்‌/பழங்குடியினர்‌ பிரிவைச்‌ சார்ந்த 20 எழுத்தாளர்கள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லாத இருவர்‌ (ஆண்டிற்கு11 எழுத்தாளர்கள்) ஆக மொத்த‌ம்‌ 22 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்‌. இதற்கான நூல்‌ வெளியிட ரூ.50,000/- (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) நிதியுதவி அளிக்கப்படும்‌. பெயர்‌, முகவரி, படைப்பின்‌ பொருள்‌ போன்ற விவரங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இதுகுறித்த விவரங்களை தமிழக அரசின்‌ tn.gov.in என்ற இணைய தளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌. மேலும்‌, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலகத்திலும்‌ விண்ணப்பம்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

முறையான விண்ணப்பத்துடன்‌ படைப்பினை எழுத்து வடிவில்‌ 2 (இரண்டு) பிரதிகள்‌, விண்ணப்பதாரரின்‌ கைப்பேசி எண்கள்‌ குறிப்பிட்டு அரசுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்‌ 20. 09..2021.


ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்‌.


விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி:-

ஆணையர்‌,

ஆதிதிராவிடர்‌ நலத்துறை ஆணையரகம்‌,

சேப்பாக்கம்‌,

சென்னை-05.

Thursday, August 12, 2021

White Paper on Tamil Nadu Government's Finances

Link to Download the White Paper on Tamil Nadu Government's Finances.

Tamil <<

English <<


Purpose of this White Paper

 To enable the Members of the Legislative Assembly and the people to understand the true status of their government’s finances.

To provide an accurate and detailed statement of the present fiscal position of Tamil Nadu, the challenges posed, and the fiscal risks and vulnerabilities we face.

This White Paper analyzes the trends in State’s fiscal position, current economic scenario and summarizes the findings, impact & implications for the State and also the actions to be taken in the conclusion sections.

List of selected candidates – Medical Services Recruitment Board

 Medical Services Recruitment Board – Temporary Post of Physician Assistant – List of provisionally selected candidates –Published.

The list of candidates selected provisionally for appointment to the temporary post of Physician Assistant in the Level 11 – Rs.35,400- 1,12,400 is as follows:


NOTE:
a) Any claims preferred by the candidates should reach within 10 days from the date of issue of this provisional selection list notification and appeals if any received after 10 days will not been entertained.

b) The reservation to the posts has been made as per section 27 of Tamil Nadu Government Servants (Conditions of service) Act, 2016 and G.O(Ms.)No.75 Human Resources Management (K) Department Dated:26.07.2021.

c) The selection is purely provisional. The provisional selection and consequent appointment are subject to the outcome of the writ petitions / writ appeals if any pending on the files of the Hon’ble High Court of Madras / Madurai Bench of the Madras High Court.

d) The appointment and posting orders will be issued separately by the Director of Medical Education, Kilpauk, Chennai – 10.


Details of the marks obtained by the candidates - Tamil Nadu Construction Workers Welfare Board

 தமிழ்நாடு தொழிலாளர்‌ துறையின்கீழ்‌ இயங்கும்‌ தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியத்தில்‌ கணினி இயக்குபவர்‌ காலிப்பணியிடங்களுக்கு 17.11.2019 அன்று நடைபெற்ற எழுத்து தேர்வு, 30.11.2019 அன்று நடைபெற்ற கணினித்‌ திறன்‌ தேர்வு மற்றும்‌ 18.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத்‌ தேர்வின்‌ ஒருங்கிணைந்த மதிப்பெண்‌ பட்டியலும்‌, இளநிலை உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு 01.12.2019 அன்று நடைபெற்ற எழுத்துத்‌ தேர்வு, 20.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத்‌ தேர்வு ஆகியவற்றின்‌ ஒருங்கிணைந்த மதிப்பெண்‌ பட்டியலும்‌, தமிழ்நாடு அமைப்புசாராத்‌ தொழிலாளர்கள்‌ நலவாரிய இணையதளத்தில்‌  https://tnuwwb.tn.gov.in  06.08.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது எனத்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



Applications are invited for Awards from Directorate of Tamil Etymological Dictionary Project

Directorate of Tamil Etymological Dictionary Project - Bestowing of  Awards - Last date for submission of application - 31st August 2021

அகரமுதலி இயக்ககத்தின்‌  விருதுகள் - விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன!

விருதுபெறத்‌ தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனத்தார்‌ சொற்குவை.காம்‌ (https://www.sorkuvai.com/) என்ற வலைத்தளத்தில்‌ உள்ள விண்ணப்பத்தைப்‌ பதிவிறக்கம்‌ செய்து, நிரப்பி மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்புவதுடன்‌, கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல்‌ வழியாகவோ 31.08.2021 மாலை 5.௦0 மணிக்குள்‌ கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்‌.

'இயக்கக முகவரி : இயக்குநர்‌, செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்ட

இயக்ககம்‌, நகர்‌ நிருவாக அலுவலக வளாகம்‌, முதல்‌ தளம்‌, எண்‌. 75,

சாந்தோம்‌ நெடுஞ்சாலை. எம்‌.ஆர்‌.சி. நகர்‌, சென்னை - 600 028.


M.G.R Film and Television Institute - Admission Notification for the year 2021-2022

 தமிழ்நாடு அரசு எம்‌. ஜி.ஆர்‌ இரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்‌ப்‌ பயிற்ச நிறுவனம்‌ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத்‌ தமிழக அரசின்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ கழ்‌ இயங்க வரும்‌ ஓரே கல்வி நிறுவனம்‌ ஆகும்‌. இந்நிறுவனம்‌ திரைப்படத்துறை மற்றும்‌ தொலைக்காட்‌9த்‌ துறையில்‌ மிகச்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, இயக்குநர்களையும்‌ உருவாக்‌ வரும்‌ தனித்துவம்‌ மிக்க நிறுவனமாகும்‌.

இந்நிறுவனம்‌ மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவிற்இணங்க, 2016-2017ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்‌ கலை பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்று, கல்லூரியாகத்‌ தரம்‌ உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன்‌ முறையாகத்‌ திரைப்படத்‌ தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை- காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும்‌ நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளைப்‌ பயிற்றுவித்து வருகிறது.


தற்போது, 2021-2022ஆம்‌ கல்வி ஆண்டில்‌ ழ்க்கண்ட பிரிவுகளில்‌ பட்டப்படிப்பிற்கான மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுஇன்றன.

1. இளங்கலை- காட்சிக்கலை  -. Bachelor of Visual Arts (Cinematography) ( ஒளிப்பதவு) 

2. இளங்கலை- காட்சிக்கலை  -Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை Bachelor of Visual Arts (Audiography) (ஓலிப்பஇவு) 

4. இளங்கலை- காட்சிக்கலை Bachelor of Visual Art (Direction and Screenplay writing) (இயக்குதல்‌ மற்றும்‌ இரைக்கதை

5. இளங்கலை - காட்‌சக்கலை Bachelor of Visual Arts (Film Editing) (படத்தொகுப்பு)

6. இளங்கலை- காட்சிக்கலை Bachelor of Visual Arts (Animation and Visual Effects) (உயிர்ப்பூட்டல்‌ மற்றும்‌ காட்‌டப்பயன்‌ ) 

எனவே, கலை ஆர்வம்‌ உள்ள அனைத்து மாணவ/மாணவியரும்‌ மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில்‌ சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுஒறார்கள்‌.

இதற்கான விண்ணப்பங்களை 12.08.2021 முதல்‌ 06.09.2021 வரை தபால்‌ மூலமாகவோ அல்லது தமிழக அரசின்‌ www.tn.gov.in எனும்‌ இணையதள முகவரியிலிருந்து பஇவிறக்கம்‌ செய்தோ விண்ணப்பிக்கலாம்‌ என்றும்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன்‌ முதல்வர்‌ (பெர, தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ இரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்‌ நிறுவனம்‌, சி.ஐ.டி. வளாகம்‌, தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு 09.09.2021 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ என்றும்‌, 09.09.2021 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுஇறது.

மேலும்‌ மாணவர்கள்‌ விண்ணப்பங்களைப்‌ பெற நேரடியாக வரவேண்டாம்‌ எனவும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுஇறது.

Election of members to the Tamil Nadu Waqf Board

ELECTION FOR THE MEMBERS OF THE TAMIL NADU WAQF BOARD 

Following Election programme for election of members to the Tamil Nadu Waqf Board from the electoral college consisting of Muslim Members of State Legislature has been notified in the Tamil Nadu Government Gazette Extraordinary dated: 11.08.2021.


If poll is necessary, polling will be held on 26.08.2021 (Thursday) between 10.00 A.M to 4.00 P.M. at the Office of the Tamil Nadu Wakf Board, No.1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar, Chennai – 600 001 and results will be declared on 27.08.2021 (Friday).


Tuesday, August 10, 2021

CM handed over Educational Assistance to the School Students of Various Schools

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌ துறையின்‌ கீழ்‌ 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்‌, கொளத்தூர்‌ தொகுதிக்குட்பட்ட 1,330 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களையும்‌ வழங்கினார்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (8.8.2021) கொளத்தூர்‌, குருகுலம்‌ பள்ளியில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌” துறையின்‌ கீழ்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி, முதியோர்‌, கைவிடப்பட்டோர்‌, விதவைகள்‌ உதவித்‌ தொகைகளுக்கான ஆணைகள்‌, மூன்று சக்கர சைக்கிள்கள்‌, சிறப்பு சக்கர நாற்காலிகள்‌, தையல்‌ இயந்திரங்கள்‌, சலவைப்‌ பெட்டிகள்‌, வீடு புனரமைப்புத்‌ திட்ட ஆணைகள்‌, புதிய வீட்டிற்கான ஆணைகள்‌ ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.



முத்தமிழறிஞர்‌" கலைஞர்‌ அவர்களின்‌ நினைவு நாளையொட்டி, கொளத்தூர்‌ சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பந்தர்‌ கார்டன்‌, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 305 மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ லூர்து பெண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 309 மாணவிகளுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌. மேலும்‌, கொளத்தூர்‌, எவர்வின்‌மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 148 மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ டான்‌ பாஸ்கோ ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 279 மாணவர்களுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களையும்‌ வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, கொளத்தூர்‌, ஜி.கே.எம்‌. காலனி விளையாட்டுத்திடலில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மார்க்கெட்‌ தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 210 மாணவிகளுக்கும்‌ மற்றும்‌ ஜி.கே.எம்‌. காலனி 12வது தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியைச்‌ சார்ந்த 79 மாணவர்களுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

இன்று (8.8.2021) கொளத்தூர்‌ சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ மொத்தம்‌ 1,330 மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்‌ உதவித்‌ தொகையாக தலா $5,000/- ரூபாயும்‌ மற்றும்‌ கல்வி உபகரணங்கள்‌ என மொத்தம்‌ ரூபாய்‌ 80 இலட்சம்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ திரு. பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. தாயகம்‌ கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ திரு. ககன்தீப்‌ சிங்‌ பேடி, இ.ஆ.ப. சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌. ஜெ.விஜய ராணி, இ.ஆ.ப. ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Statement from Managing Director of Aavin

 ஆவின்‌ நிறுவனம்‌ நுகர்வோர்‌ சேவையில்‌ எந்தவித குறைபாடுகளும்‌ இன்றி அனைவரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவையாற்றிவருகின்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களால்‌ 16.05.2021 முதல்‌ ஆவின்‌ பால்‌ விலை லிட்டர்‌ ஒன்றுக்கு ரூ. 3/- குறைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகின்றது.


மாதாந்திர பால்‌ அட்டைதாரர்களுக்கு மானிய விலையில்‌ 1985 முதல்‌ பால்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது. ஆவின்‌ நுகர்வோர்கள்‌ இந்த பால்‌ அட்டை திட்டத்தின்‌ கீழ்‌ 4.5 லட்சம்‌ உறுப்பினர்கள்‌ பயனடைந்து வருகின்றனர்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நுகர்வோர்கள்‌ மாத தொகையை முன்கூட்டியே செலுத்துவதால்‌ ஆவின்‌ நிர்வாகத்திற்கு முன்வைப்புத்‌ தொகையாக பெறப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நுகர்வோர்களுக்கு ரூ. 2 முதல்‌ ரூ. 3 வரை லிட்டருக்கு குறைந்த விலையில்‌ வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர பால்‌ அட்டை பால்‌ வாங்கும்‌ நுகர்வோர்கள்‌, தங்களுடைய பணியிட மாற்றம்‌ மற்றும்‌ இதர காரணங்களால்‌ வசிக்கும்‌ இடத்தை விட்டூ வேறு &டத்திற்கு சென்று விடுகின்றனர்‌. ஆனால்‌ அவர்களுடைய பெயரிலேயே சில பால்‌ விநியோகம்‌ செய்யும்‌ நபர்கள்‌ தொடர்ந்து மாதாந்திர பால்‌ அட்டைகளை புதுப்பித்து வருகின்றனர்‌. அட்டைதாரர்களுக்கு மானிய விலையில்‌ வழங்கப்படும்‌ பாலை ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ. 2 முதல்‌ ரூ. 3 வரை கூடுதலாக விற்பனைசெய்யப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம்‌ முதல்‌ மேற்கண்ட நுகர்வோர்கள்‌ விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்‌ தற்போது 80,000 பால்‌ அட்டைதாரர்கள்‌ குறிப்பிட்ட முகவரியில்‌ வசிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்‌ சுமார்‌ 40,000 லிட்டர்‌ பால்‌ விற்பனையில்‌ மாதம்‌ 36 லட்சம்‌ நஷ்டம்‌ தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில்‌ உள்ள படிவத்தில்‌ கல்வித்தகுதி, தொழில்‌ விவரம்‌, மாத வருமானம்‌, ஆதார்‌ விவரம்‌ எதுவும்‌ பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம்‌ இல்லை.

தற்போதுள்ள புதிய படிவம்‌ தங்களின்‌ பார்வைக்கு இத்துடன்‌ இணைக்கப்படுகிறது. மேலும்‌ நுகர்வோர்களின்‌ வசதிக்காக பால்‌ அட்டைதாரர்களின்‌ விவரங்ககளை சமர்ப்பிக்க மேலும்‌ 3 மாத கால அவகாசம்‌ வழங்கப்பட்டுள்ளது எனவே நுகர்வோர்கள்‌ புதிய விண்ணப்பத்தில்‌ தங்களின்‌ அடிப்படை விவரங்களை மட்டும்‌ பூர்த்தி செய்து பால்‌ அட்டையை புதுப்பிக்கலாம்‌.

Statement from Tamil Nadu Civil Supplies Corporation

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, கடந்த 5.08.2021 அன்று வேலூர்‌ மாவட்டத்தில்‌ மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உணவுப்‌ பொருள்‌ விநியோகம்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

 இந்த ஆய்வுக்‌ கூட்டத்தின்‌ போது விவசாயிகளிடமிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ மிக அதிகமாக நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌, வியாபாரிகளிடமிருந்து நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌ சில சமயங்களில்‌ நெல்‌ மூட்டைகள்‌ லாரிகளில்‌ கொண்டுவரப்பட்டு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களுக்கு வராமலேயே, நேரடியாகச்‌ சேமிப்புக்‌ கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்புகாரின்‌ மீது மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களி உத்‌ "டி, இணை மேலாண்‌ இயக்குநர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ராணிப்பேட்டை மாவட்டம்‌, ஆற்காடு வட்டத்தில்‌ உள்ள சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இணை மேலாண்‌ இயக்குநரின்‌ முதற்கட்ட விசாரணையில்‌ சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நில உடைமை ஆவணங்களைச்‌ சரியாக ஆய்வு செய்யாமல்‌ ஒருவருக்குச்‌ சொந்தமான நிலத்தில்‌ அதிகபட்சமாகக்‌ கிடைக்கக்‌ கூடிய நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ பல மடங்கு கூடுதலான அளவு நெல்‌ ஒரு சில நபர்களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றாமல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே இத்தகைய தவறுகளுக்குக்‌ காரணமான வேலூர்‌ மண்டலத்தைச்‌ சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்கழகப்‌ பணியாளர்களான மண்டல மேலாளர்‌, துணை மேலாளர்‌ (கணக்கு), 3 கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ 3 பட்டியல்‌ எழுத்தர்கள்‌ என மொத்தம்‌ 8 நபர்கள்‌ தற்காலிகப்‌ பணிநீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. இவ்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ விவசாயிகள்‌ தாங்கள்‌ விளைவித்து அறுவடை செய்த நெல்லை எளிதில்‌ விற்பனை செய்து பயனடையும்‌ வகையில்‌ பல்வேறு நடவடிக்கைகளைத்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


Thursday, August 5, 2021

CM inaugurated the Scheme - Makkalai Thaedi Maruthuvam

Honble Chief Minister inaugurated the Scheme - Makkalai Thaedi Maruthuvam and COVID-19 vaccination for One Lakh workers at Krishnagiri District. 

"மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌” மற்றும்‌ “ஒரு இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ திட்டம்‌” ஆகிய திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரியில்‌ தொடங்கி வைத்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரி ஊராட்சி ஒன்றியம்‌, சாமனப்பள்ளி கிராமத்தில்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தைத்‌ தொடங்கி வைத்தார்‌. பொதுமக்களின்‌ வீட்டிற்கே நேரடியாகச்‌ சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச்‌ செய்தல்‌, தேவைப்படும்‌ மருந்துகளை வழங்குதல்‌, இயன்முறைச்‌ சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம்‌, ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச்‌ சேவைகள்‌ அளிக்கப்படும்‌.


இத்திட்டத்தின்‌ கீழ்‌, மாநிலத்தில்‌ தொற்றா நோய்களின்‌ சுமையை எதிர்கொள்ளும்‌ விதமாக நோயாளிகளின்‌ இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச்‌ சேவைகள்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ நோக்கத்தினைச்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை மூலம்‌ "மக்களைத்‌ தேடி மருத்துவம்‌" என்ற புதிய திட்டம்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினைத்‌ தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இரண்டு பயனாளிகளின்‌ இல்லங்களுக்கு நேரில்‌ சென்று, மருத்துவச்‌ சேவை அளிப்பதைப்‌ பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்‌.

More to know...


Revenue Statement From Registration Department.

 பதிவுத்துறையில்‌ ஜுலை 2௦21 மாதத்தில்‌ வருவாய்‌ ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில்‌ ஜுலை 2020 மாத வருவாயை காட்டிலும்‌ ரூ.598 கோடி அதிகமாகும்‌.

மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையிலும்‌, பதிவுத்துறை அரசு செயலாளர்‌ மற்றும்‌ பதிவுத்துறை தலைவர்‌ அவர்கள்‌ முன்னிலையிலும்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ பணி சீராய்வு கூட்டம்‌ நடைபெற்றது. கூட்டங்களில்‌ அரசின்‌ வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்றும்‌, நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின்‌ உடன்‌ விடுவித்தல்‌, தணிக்கை இழப்புகளை வசூலித்தல்‌ சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல்‌ முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அறிவுறுத்தப்பட் டது. இதன்‌ அடிப்படையில்‌ அலுவலர்கள்‌ செயல்பட்டதின்‌ பேரில்‌, இம்மாதத்தில்‌ வருவாய்‌ ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கொரானா நோய்‌ தொற்று காரணமாகவும்‌ மற்றும்‌ அரசின்‌ ஊரடங்கு காரணமாகவும்‌ பதிவுத்துறையில்‌ கடந்த மாதங்களில்‌ வருவாயானது 2019-20 நிதியாண்டை காட்டிலும்‌ குறைந்துள்ள நிலையிலும்‌, ஜுலை 2021 மாத வருவாயானது மேலே கண்டுள்ள முயற்சிகளால்‌ பேரிடர்‌ ஏதும்‌ இல்லாத காலத்திற்கான வருவாயினை நெருங்கியுள்ளது.



Ms Bhavani Devi, Sabre Fencer called on CM

 Ms Bhavani Devi, Sabre Fencer, who had participated in the Olympics, Japan called on the Honble Chief Minister.



Statement of the Honble Minister for Law on ban for the Online Rummy

“ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டுக்களைத்‌ தடைசெய்யும்‌ புதிய சட்டம்‌ விரைவில்‌ கொண்டு வரப்படும்‌”- மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்‌ திரு எஸ்‌. ரகுபதி அவர்கள்‌ அறிக்கை.

“ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டைத்‌ தடைசெய்ய வேண்டும்‌” என த்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, முன்பு எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத்‌ தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர்‌ 21ஆம்‌ தேதி “ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டிற்குத்‌ தடை விதித்து” அவசர கதியில்‌ சட்டம்‌ ஒன்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது.


அ.தி.மு.க. அரசின்‌ சட்டத்திற்கு எதிராகத்‌ தொடரப்பட்ட வழக்கில்‌, தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ தலைமை வழக்கறிஞர்‌ வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும்‌, “இந்த விளையாட்டுகள்‌ ஏன்‌ தடை செய்யப்படுகிறது என்பது குறித்துப்‌ போதுமான காரணங்களைச்‌ சட்டம்‌ நிறைவேற்றும்‌ போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும்‌ உரிய விதிகள்‌ இல்லாமல்‌ ஆன்லைன்‌ விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத்‌ தடை விதிக்க முடியாது” என்று கூறி, தமிழ்நாடு அரசின்‌

ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டினைத்‌ தடை செய்யும்‌ சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்‌ தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும்‌, உரிய விதிமுறைகளை உருவாக்கிப்‌ புதிய சட்டம்‌ கொண்டு வருவதற்குத்‌ தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்‌ இதே தீர்ப்பில்‌ தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொதுநலன்‌ மிக முக்கியம்‌ என்பதால்‌, உரிய விதிமுறைகள்‌ மற்றும்‌ தகுந்த காரணங்களைத்‌ தெளிவாகக்‌ குறிப்பிட்டு, எவ்விதத்‌ தாமதமுமின்றி, ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டுகளைத்‌ தடைசெய்யும்‌ சட்டத்தைக்‌ கொண்டுவர வேண்டும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நேற்றையதினம்‌ தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டி ருக்கிறார்‌.

ஆகவே, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில்‌ ஆன்லைன்‌ ரம்மி போன்ற விளையாட்டுகளைத்‌ தடைசெய்யும்‌ சட்டம்‌ விரைவில்‌ கொண்டு வரப்படும்‌ என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

Monday, August 2, 2021

CM reviewed the activities of Human Resources Management Department

அரசு அலுவலர்களின்‌ பணித்திறன்‌ உயர்த்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌; மக்கள்‌ பயன்பெறும்‌ ப அரசு சே ர்‌ அமைய வேண்டும்‌” - மேலாண்மைத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (31.07.2021) மச்‌ செயலகத்தில்‌, மனிதவள மேலாண்மைத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌, அரசு அலுவலர்களுக்குச்‌ சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன்‌ மூலம்‌, அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவைகளின்‌ தரத்தை உயர்த்த வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ நமது மாநில மாணவர்கள்‌ அதிக அளவில்‌ தேர்ச்சி பெறும்‌ வண்ணம்‌ பல்வேறு வகைப்பட்ட சிறப்புப்‌ பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள்‌ மூலம்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌. தமிழ்நாட்டுப்‌ மாணவர்களிடையே, மாநில மற்றும்‌ ஒன்றிய அரசுப்பணிகள்‌ தொடர்பான போட்டித்‌ தேர்வுகள்‌ / தகுதிகள்‌ / தேவையான பயிற்சிகள்‌ குறித்த விழிப்புணர்வை முதலில்‌ ஏற்படுத்தவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, குடும்பத்தில்‌ முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணியிடங்களில்‌ முன்னுரிமை வழங்கவும்‌, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ அனைத்துத்‌ துறைகளிடமும்‌ இணையதளம்‌ மூலம்‌ தகவல்‌ பெறும்‌ வசதிகளை மேம்படுத்தவும்‌ அறிவுறுத்தினார்‌.

அரசு அலுவலர்களின்‌ மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும்‌, தமிழக இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெருக்குவதற்கும்‌, அண்ணா மேலாண்மைப்‌ பயிற்சி மையம்‌ மற்றும்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை உயர்த்திடவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

பவானிசாகரில்‌ உள்ள அடிப்படைப்‌ பயிற்சி மையத்தால்‌ அரசுப்‌ பணியாளர்களுக்கான பயிற்சியினைக்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.பழனிவேல்‌ தியாகராஜன்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ,ஆ.ப., மனிதவள மேலாண்மைத்‌ துறைச்‌ செயலாளர்‌ திருமதி.மைதிலி கே.ராஜேந்திரன்‌, இ,ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


CM to Ministers and high level officers on preparation of Budget 2021-2022

 விவசாயிகள்‌ மற்றும்‌ துறை வல்லுநர்கள்‌, பல்வேறு சங்கப்‌ பிரநிதிகளைக்‌ கலந்தாலோசித்து மக்களுக்கும்‌ பொருளாதாரத்துக்கும்‌ பயன்தரத்‌ தக்க வகையில்‌ இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும்‌ விவசாயத்‌ துறைக்கான முதல்‌ தனி நிதிநிலை அறிக்கையும்‌ அமைய வேண்டும்‌ - மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌. 

திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ அளித்த தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில்‌ முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை சார்பாகத்‌ தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படவுள்ளது.


வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள்‌, விவசாய நிபுணர்கள்‌ மற்றும்‌ விவசாயசங்கங்கள்‌ ஆகியோரைக்‌ கலந்தாலோசித்து விவசாயம்‌ செழிக்கவும்‌ விவசாயிகள்‌ அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப்‌ பெறும்‌ வகையில்‌ சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களையும்‌ அரசு உயர்‌ அலுவலர்களையும்‌ அறிவுறுத்தினார்‌.

Statement of the Honble Chief Minister on containment of COVID-19

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வேண்டுகோள்‌

நாட்டு மக்கள்‌ அனைவருக்கும்‌ என்னுடைய அன்பான வணக்கம்‌!

கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும்‌ நாட்டு மக்களையும்‌ வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌; அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக்‌ கட்டமைப்புகள்‌; ஊரடங்குக்‌ கட்டுப்பாடுகள்‌; நம்முடைய மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியர்களின்‌ தன்னலம்‌ கருதாத சேவை ஆகியவற்றின்‌ காரணமாக கொரோனாவின்‌ இரண்டாவது அலையைக்‌ கட்டுப்படுத்தி இருக்கிறோம்‌. கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.


கொரோனா என்பது ஒருவரிடம்‌ இருந்து மற்றொருவருக்கு தொற்றும்‌ நோயாக இருப்பதால்‌ அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும்‌ முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக்‌ கருதப்பட்ட நாடுகளில்‌ கூட மீண்டும்‌ பரவத்‌ தொடங்கி இருக்கிறது.

கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில்‌ மீண்டும்‌ தொற்றுப்‌ பரவல்‌ அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும்‌ கூடுதலாகி வருகிறது. மக்கள்‌ தொகை அதிகமாகவும்‌, நெரிசலாக வாழும்‌ சூழலும்‌ உள்ள நாட்டில்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதில்‌ பல்வேறு சிரமங்கள்‌ இருந்தாலும்‌ மக்களைக்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பு அரசின்‌ கையில்‌ இருக்கிறது என்பதை நான்‌ உணர்ந்துள்ளேன்‌. அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும்‌ வருகிறோம்‌.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனா பரவல்‌ கட்டுப்பாட்டுக்கு வந்தது. தளர்வுகள்‌ அறிவிக்கப்படும்‌ போது லேசாகப்‌ பரவத்‌ தொடங்குகிறது. இதனைக்‌ கவனத்தில்‌ வைத்து மக்கள்‌ செயல்பட வேண்டும்‌ என்று மன்றாடிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

Read More...

Final Electoral Roll of the Muslim Members of the State Legislature to select member of WAQF Board

 FINAL ELECTORAL ROLL OF MUSLIM MEMBERS OF THE STATE LEGISLATURE FOR ELECTION OF MEMBERS OF TAMIL NADU WAQF BOARD

    The Final Electoral Roll of the Muslim Members of the State Legislature, who will vote to elect members of the Tamil Nadu Waqf Board have been finalized and it will be published on 03.08.2021. The Electoral roll will be published in the Offices of the Election Authority and Principal Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, Namakkal Kavingar Maaligai, Second Floor, Secretariat, Chennai-600 009, the Chief Executive Officer, Tamil Nadu Waqf Board, Chennai –600 001 and all Offices of Zonal Superintendents of Waqfs.


2. The schedule for conduct of election will be issued shortly and the Election Notification will be published by the Election Authority in the Tamil Nadu Government Gazette.

Read More in Tamil...

On release of water from Thirumoorthy Dam for irrigation

       பரம்பிக்குளம்‌ ஆழியாறு திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத்‌ திட்டக்குழு விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று, திருப்பூர்‌ மாவட்டம்‌, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்‌ ஆழியாறு திட்டத்தில்‌ பாலாறு படுகை நான்காம்‌ மண்டலப்‌ பாசனப்‌ பகுதிகளில்‌ உள்ள பாசன நிலங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 03.08.2021 முதல்‌ 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம்‌ 9500 மி.க. அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி கிணத்துக்கடவு, சூலூர்‌ வட்டங்கள்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌, உடுமலை, மடத்துக்குளம்‌, பல்லடம்‌, திருப்பூர்‌, காங்கேயம்‌ மற்றும்‌ தாராபுரம்‌ வட்டங்களில்‌ உள்ள 94068 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌.