Sunday, September 29, 2013

Agricultural Engineering Department.

"In the process of "Grow More Food Programme" and "Green Revolutions", more importance was given to the Agricultural Engineering activities for increasing the agricultural production. With this objective, the erstwhile Agricultural Engineering wing was separated from the Department of Agriculture and the new "Agricultural Engineering Department" was formed in January 1981, headed by a Chief Engineer as the head of Department.



Functions

The Agricultural Engineering Department is actively engaged in the conservation, development and management of the agricultural land and the water resources. The main focus of the department is on watershed development, water management and agricultural mechanisation with an aim of achieving the following objectives;

Conserving soil fertility by controlling soil erosion.
Harvesting rain water.
Efficient use of available water.
Intensification of farm mechanisation.

About the Organization

Organization Set up of the Agricultural Engineering Department


Click Here for the Agricultural Engineering Department Website.



Thursday, September 26, 2013

Special Summary Revision of Electoral Rolls.

பொதுத் (தேர்தல்கள்-1) துறை செய்தி வெளியீடு 



       1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை கீழ் கண்ட அட்டவணைப்படி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்01-10-2013
பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த மனுக்கள் அளிக்க கால அவகாசம்01-10-2013 முதல்
31-10-2013 வரை
கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்களைச் சரிபார்த்தல்02-10-2013 மற்றும்
05-10-2013
மனுக்கள் பெற சிறப்பு முகாம் நாட்கள்06-10-2013 (ஞாயிற்றுக்கிழமை),
20-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
27-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்06.01.2014

   
      1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல்/திருத்தல்/ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றல் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்யப்படவேண்டியிருந்தால் பெயர் சேர்ப்புக்காக புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகிதப்படிவத்தில் நிரப்பி அளித்தோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட ஏதுவாக தனியார் இணையதள மையங்களோடு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

      வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2014 அன்று வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

      நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-க்கு முன்னோட்டமாக வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 58761-லிருந்து 60418-ஆக உயர்ந்துள்ளது.

       வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம், 2013-ன் இறுதிப்பட்டியல்கள் வெளியிடப்பட்ட 10.01.2013 அன்றுள்ளபடி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,15,69,062 (ஆண்கள் 2,58,56,061 ; பெண்கள் 2,57,10,567 மற்றும் இதரர் 2,434) ஆகும். 01.10.2013 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்போது தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.

      இன்று (25.092013) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துரையாடினார். அக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-ன் கால அட்டவணை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

        வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத பாகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகளை கண்டறிவதிலும் அவற்றை சரிசெய்வதிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களோடு இணைந்து செயலாற்றுவர். ஓவ்வொரு கட்சியும் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களின் விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும்.

 தலைமைத் தேர்தல் அதிகாரி
 தமிழ் நாடு

Monday, September 16, 2013

Cut-off Seniority Dates in Employment Offices for August 2013.

Amma Water.

          Honble Chief Minister inaugurated the mineral water bottling unit through Video Conference

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (15.9.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி (ஏனைநடி ஊடிகேநசநnஉiபே) மூலமாக திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன் பெறும் வகையில் “அம்மா குடிநீர்” விற்பனையைத் துவக்கி வைத்தார்கள். 

      பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 21.6.2013 அன்று அறிவித்தார்கள்.



 அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.


     பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று (15.9.2013) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அம்மா குடிநீர் விற்பனையைத் துவக்கி வைத்ததன் அடையாளமாக அடையாளமாக டையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாட்டில் அம்ம மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு பாட்டில் அம்மா குடிநீரை 10 ரூபாய் செலுத்தி மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 பயணிகளுக்கு பயணிகளுக்கு பயணிகளுக்கு அம்மா குடிநீர் பாட்டில்களை அம்மாகுடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் திரு பிராஜ் கிஷோர் பிரசாத், இ.ஆ.ப., அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு கூ. ரங்கராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 
நாள்: 15.9.2013