Thursday, October 8, 2015

Honble Minister inaugurated the Workshop on Smart Solutions for Service Delivery in Cities in Chennai

Honble Minister for Municipal Administration,Rural Development,Law,Courts and Prisons inaugurated the Workshop on Smart Solutions for Service Delivery in Cities in Chennai


Honble Chief Minister on financial assistance to the Sports Person

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 8.10.2015

விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் உயரிய நோக்கில், தமிழ்நாட்டில் பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி சி.ஏ. பவானி தேவி, 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது செல்வி சி.ஏ. பவானி தேவி, 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், செல்வி சி.ஏ. பவானி தேவி இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று எனக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் செல்வி சி.ஏ. பவானி தேவி கலந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், செல்வி சி.ஏ. பவானி தேவி, வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Wednesday, October 7, 2015

Health Minister inaugurated the Mission Indradhanush State Level Media Sensitization Workshop


Honble Minister for Health inaugurated the Mission Indradhanush State Level Media Sensitization Workshop


Honble Minister for Health inaugurated the 2nd phase of Indradhanush Immunisation camp



CM Text To PM on Kudankulam Nuclear Power Plant issues

Text of the D.O. Letter dated 7.10.2015 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India is reproduced below:

“I am writing to bring to your kind attention the delay in recommencing the operations in Kudankulam Unit-I.

Tamil Nadu has been allotted about 563 MW of power from the total of 1000 MW produced by Unit-I of Kudankulam Nuclear Power Plant. The Kudankulam Nuclear Power Plant which had started commercial operations on 31.12.2014, has been shut down for maintenance for the past 90 days. The Nuclear Power Corporation of India Limited is yet to clearly indicate when the Kudankulam Nuclear Power Plant Unit-I will recommence production. As the wind season for Tamil Nadu has drawn to a close, it is crucial for the Kudankulam Unit-I to resume power generation immediately.



I, therefore, request you to kindly instruct the concerned officials in the Nuclear Power Corporation of India Limited to immediately take necessary action to recommence power generation in Kudankulam UnitI. Further, we have been informed that Kudankulam Unit-II is undergoing final stages of commissioning activities and awaiting approval from the Atomic Energy Regulatory Board (AERB) for full commercial production. I request you to kindly instruct the concerned officials to expedite the commercial operation of Kudankulam Unit-II, so that another 563 MW of power can be added to the Tamil Nadu Grid at the earliest.

May I request an immediate response in this matter?”

Tuesday, October 6, 2015

District level competitions for National Bal Shree Award - 2015

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம்
 சென்னை-8

2015 ஆம் ஆண்டிற்கான தேசிய பாலஸ்ரீ விருதுக்கான சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள்

கலைகளில் புதுமை படைத்திடும் குழந்தைகளை ஊக்கப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் பாலஸ்ரீ (NATIONAL BAL SHREE AWARD) எனும் தேசிய விருது புதுதில்லியில் உள்ள தேசிய பாலபவனால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது மேடைக்கலை (Creative Performance), அறிவியற்கலை (Creative Scientific Innovation), படைப்புக்கலை (Creative Art) மற்றும் எழுத்துக்களை (Creating Writing) ஆகிய நான்கு முதன்மைப் பிரிவுகளில் இடம்பெறும் 16 உபபிரிவுகளில், புதுமைகள் படைத்திடும் கற்பனை திறமையுடைய 10 லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படுகிறது. பாலஸ்ரீ (NATIONAL BAL SHREE AWARD) விருது தெரிவு மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.



2015 ஆம் ஆண்டிற்கான பாலஸ்ரீ விருதுக்கான (Under Revised National Bal Shree Selection-2015) முதற்கட்ட தெரிவுகள், சென்னை மாவட்ட அளவில், சென்னை-28, இராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் 10.10.2015 மற்றும் 11.10.2015 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது. 10.10.2015 அன்று காலை 9.30 மணி முதல் மேடைக்கலையில் (Creative Performance)கருவியிசை/தாளவாத்தியம், குரலிசை, நாட்டியம், நாடகம் மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளிலும் மற்றும் அறிவியல் கலையில் (Creative Scientific Innovation) அறிவியல் மாதிரி உருவாக்கம், அறிவியல் செயல்முறை திட்டம், அறிவியலில் புதிர்களுக்கு தீர்வு காணுல், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. அதே போன்று 11.10.2015 அன்று காலை 9.30 மணி முதல் படைப்புக்கலையில் (Creative Art) வரைகலை (டிசைனிங் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் ஆர்ட்), ஓவியம், சிற்பம், கைவினை உள்ளிட்டவற்றிலும் மற்றும் எழுத்துக்கலையில் (Creating Writing) கவிதை, கதை, கட்டுரை, வசனம் மற்றும் நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவ, மாணவியர்கள் தங்களது பிறப்புச் சான்று (Birth Certificate) மற்றும் பள்ளியில் பயின்று வருவதற்கான சான்றிதழ் (School Bonafide Certificate) சமர்ப்பித்தல் வேண்டும். 1.4.1999-31.3.2005-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். போட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், கருவிகளையும் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளே கொண்டு வர வேண்டும்.

உள்ளூர் அளவிலான இத்தேர்வில் தெரிவு செய்யப்படுவோர், அடுத்து சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தெரிவில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.044-28192152.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9