Monday, November 25, 2013

CM Handed Over Prizes in the FIDE World Chess Championship.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (25.11.2013) சென்னையில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டி – 2013-ல் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சார்ந்த திரு மேக்னஸ் கார்ல்சன் அவர்களுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்கள். மேலும், இரண்டாமிடம் பெற்ற திரு விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வெள்ளிப் பதாகையும், 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்கள்.



No comments :

Post a Comment