Friday, June 11, 2021

CM has Formed Committee to Examine Impact of NEET

 Honble Chief Minister has formed a committee headed by retired Justice Thiru A K Rajan to examine impact of NEET on socially deprived aspirants.

செய்தி வெளியீடு எண்‌:256 நாள்‌: 10.06.2021

செய்தி வெளியீடு

     தமிழ்நாட்டில்‌ மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வின்‌ தாக்கம்‌ குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ தலைமையில்‌ உயர்நிலைக்‌ குழு அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணை

     மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வு முறையானது சமுதாயத்தின்‌ பின்தங்கிய நிலையில்‌ உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும்‌, அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள்‌ ஏற்பட்டிருந்தால்‌, அவற்றை சரி செய்யும்‌ வகையில்‌, இம்முறைக்கு மாற்றாக அனைவரும்‌ பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்‌ சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்‌ பற்றியும்‌, அவற்றிற்கான சட்ட வழிமுறைகள்‌ பற்றியும்‌ முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப்‌ பரிந்துரைகளை அளித்திட ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌ அடங்கிய உயர்நிலைக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்‌.

    இந்த அறிவிப்பின்படி, ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கீழ்க்காணும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்ட குழுவினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (10-6-2021) உத்தரவிட்டுள்ளார்கள்‌ :


     இந்தக்‌ குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின்‌ நலனைப்‌ பாதுகாத்திடத்‌ தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள்‌ அரசுக்கு அளிக்கும்‌. இந்தப்‌ பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

No comments :

Post a Comment