Tuesday, October 8, 2013

Funds for Infrastructure Development of Schools in State.

    தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வியை அளித்து, தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாணாக்கர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கிரேயான், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.



     பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும். எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

    அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எடுத்து வருகின்றார்கள்.

    அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20' X 20') SMART CLASS ROOM ஆக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.

    ஒவ்வொரு பள்ளியிலும் SMART CLASS ROOM அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

Tuesday, October 1, 2013

Gandhi Adigal Police Medal 2014.

AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FOUR POLICE OFFICIALS

          The Hon’ble Chief Minister has ordered the award of Gandhi Adigal Police Medal to

(1) Thiru. T.P. Sureshkumar, Additional Superintendent of Police, Crime (i/c), Prohibition Enforcement Wing, Erode District.

(2) Thiru. A.V. Mathi, Deputy Superintendent of Police, Central Investigation Unit (South), Chennai.

(3) Thiru. S. Periyasamy, Inspector of Police, Central Investigation Unit, Salem Zone, Salem.

(4) Thiru. R. Devaraj, Head Constable, Appakoodal Police Station, Erode District for their outstanding work in curbing illicit liquor.



The Medals will be given by the Hon’ble Chief Minister on the occasion of Republic Day, 2014. A cash award of Rs.20,000/- to each of the awardees will also be presented along with the Medal.

 (NIRANJAN MARDI)
 PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Sunday, September 29, 2013

Medical Services Recruitment Board.

       The Medical Services Recruitment Board (MRB) under the Government of Tamil Nadu has been established with the objective of making appointments of various categories of staff in the Health and Family Welfare Department. Click Here For The Medical Services Recruitment Board.

Website Address: http://www.mrb.tn.gov.in



S.No Name of the Post
1. Radiographer
2. Assistant Surgeon
a.
Provisional Selection list of  Assistant Surgeon (General/Speciality)
b.
Provisional Selection list of  Assistant Dental Surgeon (General/Speciality)  
c.
Marks obtained by candidates in Assistant Surgeon Examination
d.
Marks obtained by candidates in Assistant Dental Surgeon Examination
e.
Schedule of Certificate Verification
f.


Certificate verification for Reserve List
7th October 2013 - Forenoon   Afternoon
8th October 2013  - Forenoon   Afternoon
9th October 2013 - Forenoon   Afternoon   
10th October 2013 - Forenoon   Afternoon
g
Provisional list of final selected candidates
Assistant Surgeon - General

Assistant Surgeon - Speciality
Assistant Dental Surgeon - General
Assistant Dental Surgeon- Speciality
3. Pharmacist - Selection List
a.
Provisional Selection list of Pharmacist
b.
Provisional Final Selection List of Pharmacist

Agricultural Engineering Department.

"In the process of "Grow More Food Programme" and "Green Revolutions", more importance was given to the Agricultural Engineering activities for increasing the agricultural production. With this objective, the erstwhile Agricultural Engineering wing was separated from the Department of Agriculture and the new "Agricultural Engineering Department" was formed in January 1981, headed by a Chief Engineer as the head of Department.



Functions

The Agricultural Engineering Department is actively engaged in the conservation, development and management of the agricultural land and the water resources. The main focus of the department is on watershed development, water management and agricultural mechanisation with an aim of achieving the following objectives;

Conserving soil fertility by controlling soil erosion.
Harvesting rain water.
Efficient use of available water.
Intensification of farm mechanisation.

About the Organization

Organization Set up of the Agricultural Engineering Department


Click Here for the Agricultural Engineering Department Website.



Thursday, September 26, 2013

Special Summary Revision of Electoral Rolls.

பொதுத் (தேர்தல்கள்-1) துறை செய்தி வெளியீடு 



       1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை கீழ் கண்ட அட்டவணைப்படி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்01-10-2013
பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த மனுக்கள் அளிக்க கால அவகாசம்01-10-2013 முதல்
31-10-2013 வரை
கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்களைச் சரிபார்த்தல்02-10-2013 மற்றும்
05-10-2013
மனுக்கள் பெற சிறப்பு முகாம் நாட்கள்06-10-2013 (ஞாயிற்றுக்கிழமை),
20-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
27-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்06.01.2014

   
      1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல்/திருத்தல்/ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றல் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்யப்படவேண்டியிருந்தால் பெயர் சேர்ப்புக்காக புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகிதப்படிவத்தில் நிரப்பி அளித்தோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட ஏதுவாக தனியார் இணையதள மையங்களோடு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

      வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2014 அன்று வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

      நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-க்கு முன்னோட்டமாக வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 58761-லிருந்து 60418-ஆக உயர்ந்துள்ளது.

       வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம், 2013-ன் இறுதிப்பட்டியல்கள் வெளியிடப்பட்ட 10.01.2013 அன்றுள்ளபடி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,15,69,062 (ஆண்கள் 2,58,56,061 ; பெண்கள் 2,57,10,567 மற்றும் இதரர் 2,434) ஆகும். 01.10.2013 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்போது தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.

      இன்று (25.092013) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துரையாடினார். அக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-ன் கால அட்டவணை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

        வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத பாகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகளை கண்டறிவதிலும் அவற்றை சரிசெய்வதிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களோடு இணைந்து செயலாற்றுவர். ஓவ்வொரு கட்சியும் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களின் விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும்.

 தலைமைத் தேர்தல் அதிகாரி
 தமிழ் நாடு