Wednesday, January 8, 2014

Free Training Programme on Skill Development.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ATI, கிண்டி, சென்னையுடன் இணைந்து வழங்கும் இலவச திறன் எய்தும் பயிற்சித் திட்டம் 

இன்றைய தொழிற்வளார்ச்சியின் காரணமாக புதுயுக இயந்திரங்களை இயக்கும் திறன்பெற்றவார்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ATI, கிண்டி பயிற்சி நிலையத்துடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பின்வரும் குறுகியகால திறன் எய்தும் பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

1. ஆட்டோமொபைல் வாகன பGதுபார்த்தல்
2. சி.என்.சி மெதன் புரோகிராம் மற்றும் இயக்குதல்.
3. பற்றவைப்பு (வெல்டிங்).
4. எலெக்ட்ரிகல் மெதன் மற்றும் டிரான்ஸ்பார்மார் பராமரிப்பு
5. டார்னார், மில்லிங், கிரைண்டிங் இயந்திரங்களை இயக்குதல்.
6. தொழிற்சாலை கருவிகள் அளவெடுத்தல் மற்றும் கட்டுபாடு பற்றி அறிதல்.
7. வெப்ப சோதனை மற்றும் உலோகங்களை சோதித்தல்.

இத்திறன் எய்தும் பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும். பயிற்சி நேரம் தினசாரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ATI கிண்டி, சென்னையில் நடைபெறும். பயிற்சியின் முடிவில் திருப்திகரமாக பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளார்களுக்குஅரசு சான்றிதழ் வழங்கப்படும்.

 இப்பயிற்சிகளில் சேர 8ம் வகுப்பு தோர்ச்சி, 10ம் வகுப்பு தோர்ச்சி, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்விதகுதிகளுக்கு ஏற்ப தொழிற்பிரிவுகள் ஓதுக்கீடு செய்யப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவார்களின் வயது வரம்பு 18 முதல் 45க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.அரசு விதிகளின் படி இனசுழற்சி பின்பற்றப்படும். தங்குமிட வசதி விருப்பத்தின் போ¤ல் கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்து தரப்படும்.

விண்ணப்பதாரார்கள் தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச் சான்று, இருப்பிட முகவா¤க்கான சான்று மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் (passport size)ர் கொண்டு வர வேண்டும். மேலும், இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன், பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 08.01.2014, 09.01.2014 மற்றும் 10.01.2014 ஆகிய நாட்களில் அட்வான்ஸ்டு பயிற்சி நிலையம்(ATI), ஆலந்ழார் சாலை, திரு.வி.க.தொழிற் பூங்கா, கிண்டி, சென்னை - 32ல் வழங்கப்படும்.


 பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவார்கள் இயக்குநார், அட்வான்ஸ்டு பயிற்சி நிலையம்(ATI), (DGET, Ministry of Labour & Employment, Government of India), கிண்டி தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில், கிண்டி, சென்னை (தொலைபேசி எண்கள்: 044 - 22501460, 22500252, 22501211 இணையதள முகவா¤: www.atichennai.org.in) அவார்களை மேற்கூறிய தினங்களில் நோரில் அμகுமாறு முனைவார் பூ.முத்துவீரன் , இயக்குநார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அவடிகள் கேட்டுக் கொள்கிறார். 

Minister for Rural Industries participated in the 2nd Edition Tamil Nadu MSME summit of CII.

      மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு. ப. மோகன் அவர்கள் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்தில்...
• தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்கியவர்கள் 2.25 இலட்சம் நபர்கள்
• மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 2 1/2 ஆண்டு ஆட்சி காலத்தில் ரூ.228 கோடி மூலதன மானியம் வழங்கப்பட்டுள்ளது
• தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி



   மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில் செயல்படும் தமிழக அரசு அளித்துவரும் அனைத்து சலுகைகளையும் துய்த்து தொழில்வளம் செழிக்கச் செய்து வேலைவாய்ப்பினை பெருக்கி, பொருளாதாரத்தில் ஏற்றம் காண வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் திரு. மு. தனவேல், இ.ஆ.ப., CII கன்வீனர் ஜெயக்குமார் ராமதாஸ், CII கோ-கன்வீனர் திரு. மு.ஞ. கோபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Special buses for Pongal festival dated 8th January 2014.



        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சௌகரியமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 10.1.2014 அன்று 600 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 1325 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 1175 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 339 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். 14.1.2014 அன்று பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.



     இதே போன்று சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10.1.2014 அன்று 345 சிறப்புப் பேருந்துகளும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பேருந்துகளும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பேருந்துகளும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

     மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை 6,514 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையினை உறவினர்கள், நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிட வசதியாக, இதே அளவிலான சிறப்புப் பேருந்துகளை 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     பொங்கல் பண்டிகையை ஒட்டி 300 கி.மீ. தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு, இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், Online Ticket Reservation System www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

     இதுதவிர கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

      பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அரசின் மேற்காணும் மக்கள் நல நடவடிக்கைகள், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வழிவகை செய்யும்.

Friday, January 3, 2014

Extension of time for applying - Honble Chief Minister Kanini Tamil Award - 2013.

      தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’- 2013-ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

       தற்போது, விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20.1.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

      விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org)  இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விருதுக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

தமிழ் வளர்ச்சி இயக்குநர், 
தமிழ் வளர்ச்சி இயக்ககம், 
ஆல்சு சாலை, எழும்பூர், 
சென்னை – 600 008. 


PR From Tamil Nadu Arasu Cable TV Corporation Limited.