Sunday, September 20, 2015

Direct Recruitment for the Directorate of Tamil Etymological Dictionary Project


The Directorate of Tamil Etymological Dictionary Project is proposed to appoint following posts by direct recruitment. This Directorate comes under the administrative control of the Tamil Development and Information Department.

Sl.No. Name of the post and number Scale of Pay Minimum Educational Qualification Communal rotation of appointment
1. Record Clerk – 1 post Rs. 4,800-10,000 + Grade Pay 1,400 Must possess a completed S.S.L.C. Open Competition – Priority
2. Computer Operator – 1 post. Monthly Rs. 5,000/- Consolidated Pay S.S.L.C. Passed, Higher grade in Tamil & English typewriting and Certificate in DTP course Open Competition 

 Priority means Intercaste Marriage, Destitute Widows, Physically Handicapped, Ex-servicemen, etc., Maximum age limit is 30 for O.C., 35 for Scheduled Castes, 32 for Backward Communities and Most Backward Communities-Denotified Communities as on 1.7.2015. Age relaxation will be given as per Tamil Nadu Govt. rules.

 Those who are qualified and interested, can apply in White Paper contains Name, Date of Birth, Religion and Community, Priority Category with self attested Xerox copy of Certificates and affix a Passport size Photo. Duly filled up application must be sent by Regd. Post or in Person, on or before 06-10-2015 at 5.30 p.m. to the Director (Full Addl. Charge), Directorate of Tamil Etymological Dictionary Project, C-48, 1st Floor, T.N.H.B. Office Complex, 2nd Avenue, Anna Nagar, Chennai – 600 040. For further details contact 044-26215023 during Office hours.

 Director (Full Addl. Charge),
 Directorate of Tamil Etymological
 Dictionary Project, Chennai-6000 040.

Friday, September 18, 2015

Arasu Cable TV Corporation Ltd, Chennai on e-service

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பத்து ரூபாய் செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப்புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

From the Overseas Manpower Corporation Ltd., Chennai -  Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

செய்தி வெளியீடு

குவைத் நாட்டில், இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவைப்படுகிறார்கள்.


மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் 1பெற்று குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு இரண்டு வருடங்கள் முடிவுற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.

இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் ஜிசிசி (GCC) கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு தகுதியுடையவர் ஆவர். இருப்பினும், குவைத் நாட்டில் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரை அவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் 19.09.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு எண் 42, ஆலந்துhர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-22502267 /22505886/8220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.









Statement of CM on Release of Water from Amaravathi Dam for Irrigation

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 18.9.2015

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பிரதானக் கால்வாய் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 19.9.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Tuesday, September 15, 2015

Vinayakar Chathurthi Greetings message from CM


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “விநாயகர் சதுர்த்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி

“முன்னவனே யானை முகத்தவனே” என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடல் கருமம் ஆதலால்
 கணபதி என்றிடக் கவலை தீருமே”



என்ற திருமந்திரத்தில், கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய செயல்களைத் தொடங்கினால் வெற்றியுடன் முடியும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகர் பெருமான் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, முதன்மை கடவுளான விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

பிரணவப் பொருளாக திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமான், அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்