Tuesday, November 3, 2015

தோட்டக்கலை மற்றும் இயற்கை உரம் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி


Tamil Nadu Government Multi Super Speciality Hospital - Guidelines and Protocols

வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்

Guidelines & Protocols

S.No Guidelines and Protocols
1

National Guidelines for Dengue Fever

2

Guidelines for Ebola Virus Disease(EVD)

3

Guidelines on categorization of Seasonal Influenza A H1N1 cases during screening for home isolation, testing, treatment and hospitalization

4

Operational Guidelines on Facility Based Management of Children with Severe Acute Malnutrition

5

Guidelines for Control of Iron Deficiency Anaemia

6

Operational Guidelines for Injection Vitamin K Prophylaxis at Birth

7

Guidelines for Enhancing Optimal Infant and Young Child Feeding practices

8

Standard Treatment Guidelines

9

Operational Guidelines for Optimal feeding of low birth weight infants

10

HOME BASED NEWBORN CARE - Operational Guidelines

11

Operational Guidelines for NATIONAL PROGRAMME FOR PREVENTION AND CONTROL OF CANCER, DIABETES, CARDIOVASCULAR DISEASES & STROKE (NPCDCS)

12

National Guidelines on Prevention , Management and Control of Reproductive Tract Infections including Sexually Transmitted Infections

13

Operational Guidelines for Use of Antenatal Corticosteroids in Preterm Labour

Sunday, November 1, 2015

CM on the Bonus payable to the employees of Government and State undertakings

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 1.11.2015

‘உழைப்பே உயர்வு தரும்’ ‘உழைப்பவர் வளம் பெறுவர்’ என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுமை அடையச் செய்யும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தான் அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


  •  தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத் தொகை தற்போது வழங்கப்படும்.
  •  லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு பாடநுhல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  • ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் அனைத்து தகுதியுள்ள பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
  •  தமிழ்நாடு ஜரிகை ஆலை நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.  மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.


அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Siddha Ayurveda and yoga U.G course Counseling Postponed

Single Window Counseling for Admissions to U.G.Courses in Siddha, Ayurveda, Yoga & Naturopathy, Unani and Homoeopathy systems of Medicine under Directorate of Indian Medicine and Homoeopathy was held between 25.10.2015 and 28.10.2015 and the selected candidates have been instructed to join the respective colleges on or before 30-10-2015. Now the Department of AYUSH, GOI have extended the cut off date for admission to UG/PG AYUSH courses from 31-10-2015 to 21-11-2015. Hence the joining time, for those who have selected during the above counseling has been extended uniformly upto 6th November 2015. Necessary instructions have been issued to the Principals of ISM&H colleges in this regard. Counselling for wait listed candidates originally scheduled for 31-10-2015 has been postponed to 17-11-2015 ( Tuesday)


Places of Selling Lowest Price Toor Dal in TN

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக 91 அங்காடிகளில் 1.11.2015 அன்று முதல் குறைந்த விலையில் இறக்குமதி துவரம் பருப்பு விற்பனை நடைபெறும்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெளிச்சந்தையில் உயரும் போது, விலைகளை கட்டுக்குள் வைக்கும் தீவிர நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது, துவரம் பருப்பு விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்துhர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பெருநகரங்களில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளின் 71 அங்காடிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் சென்னையிலுள்ள 20 பல்பொருள் அங்காடிகள் வாயிலாக, இறக்குமதி துவரம் பருப்பு 1/2 கிலோ ரூ.55, 1 கிலோ ரூ.110 என்ற அடிப்படையில் 1.11.2015 அன்று முதல் விற்பனை செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்டார்கள்.

குறைந்த விலையில் துவரம் பருப்பு விற்பனை சென்னை மாநகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அண்ணாநகர் மேற்கு, நந்தனம், அசோக்நகர், ஆர்.கே. மடம் ரோடு, இந்திராநகர், சி.பி.ஆர். சாலை, பெரியார் நகர், எம்.எம்.டி.எ.காலனி, கோபாலபுரம், அண்ணாநகர் மெயின், தம்பு சாமி ரோடு, அண்ணா நெடும்பாதை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, வி.எம்.தெரு, சாந்தி காலனி, திருவான்மியூர், ஆற்காடு சாலை, ஆவடி மற்றும் போரூர் அமுதம் அங்காடிகள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் தேனாம்பேட்டை, ஆர்.ஏ.புரம், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அசோக்நகர், இராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், பெரியார் நகர், மீனம்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் சுயசேவைப் பிரிவு விற்பனை நிலையங்கள், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அண்ணா நகர், செனாய் நகர் மற்றும் அரும்பாக்கம் விற்பனை நிலையங்கள், வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கொடுங்கையூர், பிராட்வே, மணலி மற்றும் எம்.ஆர்.எப். அங்காடிகள், வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலையின் இராயபுரம் மற்றும் பெரியார் நகர் அங்காடிகள், மாம்பலம் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையின் மேற்கு மாம்பலம் அங்காடி, அடையார் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் அடையாறு அங்காடி, கஸ்துhரிபாய் மகளிர் கூட்டுறவு பண்டகசாலையின் ஆதம்பாக்கம் அங்காடி, சென்னையில் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளான ஜார்ஜ்டவுன் (சௌகார்பேட்டை), பாரதியார் (புதிய வண்ணாரப்பேட்டை), தட்டான்குளம் (சூளை), ஐ.சி.எப்., தண்டையார் நகர் (தண்டையார் பேட்டை), வியாசர்பாடி ஆகிய விற்பனை நிலையங்களிலும், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நந்தம்பாக்கம், போரூர், மடிப்பாக்கம், தாம்பரம், செம்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை விற்பனை நிலையங்கள் ஆகிய 56 இடங்களிலும்,

கோயம்புத்துhர் மாநகரில், கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கோவை வடக்கு, நுhலக கட்டடம் மற்றும் எஸ்.பி. காலனி அங்காடிகள்,  வேலாண்டிபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்க வேலாண்டிபாளையம் அங்காடி, சிங்காநல்லுhர் நகர கூட்டுறவு கடன் சங்க சிங்காநல்லுhர் அங்காடி, எஸ்.ஆர்.எஸ். கூட்டுறவு பண்டகசாலையின் பூ மார்க்கெட் விற்பனை நிலையம், பாப்பநாய்க்கன் புதுhர் கூட்டுறவு பண்டகசாலையின் பி.பி.புதுhர் அங்காடி, தமிழ்நாடு மாநில போக்குவரத்து தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலையின் சேரன் நகர் அங்காடி, குனியமுத்துhர் கூட்டுறவு பண்டக சாலையின் குனியமுத்துhர் அங்காடி, கோயம்புத்துhர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க ஆர்.எஸ்.புரம் அங்காடி ஆகிய 10 விற்பனை அங்காடிகளிலும்,

திருச்சி மாநகரத்தில் திருச்சி சிந்தாமணியின் புதுhர், என்.எஸ்.பி., சாலை, கைலாசபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் அங்காடிகள், திருச்சி அமராவதியின் பழைய சரக்கு வாகன சாலை கைலாசபுரம், பொன்மலை, சுப்பிரமணியபுரம் மற்றும் ஸ்ரீநிவாச நகர் அங்காடிகள், ஸ்ரீரெங்கநாத தொடக்க கூட்டுறவு பண்டகசாலையின் ஸ்ரீரங்கம் அங்காடி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் மங்கம்மாள் சாலை அங்காடி, தென்சென்னை மின்வாரிய ஊழியர்கள் கூட்டுறவு சங்க மன்னார்புரம் மற்றும் வாமடம் அங்காடிகள், திருவானைக்கோயில் கூட்டுறவு சங்க திருவானைக்கோயில் அங்காடி ஆகிய 14 விற்பனை அங்காடிகளிலும்

மதுரை மாநகரில் மதுரை பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அரண்மனை சாலை, திருநகர் மற்றும் அழகப்பன் நகர் அங்காடிகள், டி.வி.எஸ் கூட்டுறவு சங்கத்தின் டி.வி.எஸ் நகர் அங்காடி, மதுரா கோட்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொன்னகரம் மற்றும் கே.கே.நகர் அங்காடி, மதுரை பெண்கள் கூட்டுறவு சங்க ரேஸ் கோர்ஸ் காலனி அங்காடி, தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் பழங்காநத்தம் மற்றும் கே.புதுhர் அங்காடிகள், ஸ்ரீ மீனாட்சி மில் தொழிலாளர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் சுந்தரராஜபுரம் அங்காடி மற்றும் திருமங்கலம் மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்க திருமங்கலம் அங்காடி ஆகிய 11 விற்பனை அங்காடிகளிலும் ஆக மொத்தம் 91 விற்பனை அங்காடிகள் வாயிலாக இறக்குமதி துவரம்பருப்பு ஙூ கிலோ ரூ.55/- மற்றும் 1கிலோ ரூ.110/- என்ற அடிப்படையில் 01.11.2015 அன்று முதல் விற்பனை செய்யப்படும்.

குறைந்த விலையில் இறக்குமதி துவரம்பருப்பு விற்பனைத் திட்டம் துவங்கப்படும் தினமான 01.11.2015 ஞாயிற்றுகிழமை அன்றும் மேற்கண்ட 91 அங்காடிகளும் திறக்கப்பட்டு குறைந்த விலை இறக்குமதி துவரம்பருப்பு விற்பனை செய்யப்படும்.