Thursday, June 10, 2021

Applications are invited for admission to Pre-Sea Training Course

    Tamil Nadu Maritime Academy, Thoothukudi, an institution approved by Directorate General of Shipping, Govt. of India offers Pre-Sea Training Course for General Purpose Ratings, which qualifies candidates to serve as Ratings onboard merchant navy ships (Indian and foreign ships).

 Applications are invited for admission to Pre-Sea Training Course for General Purpose Ratings.

Prospectus and application forms can only be downloaded from the Academy website www.tn.gov.in\tnma. The applications shall not be issued to the candidates in person. Duly filled in applications be sent either by Speed post, Registered post, Courier, Online/Email along with nonrefundable Demand Draft for Rs 750/- drawn on any Nationalized Bank in favour of Tamil Nadu Maritime Academy payable at Thoothukudi. Those who are willing to send applications through Online/E-mail, the amount of Rs.750/- may be made through online payment and receipt to be produced. 



The applications duly prescribing “Application for admission to GPR Course to be commenced from 01.07.2021” in the top of the envelope, should be sent so as to reach on or before 23.06.2021 by 05.00 pm. 

For Details About Course 

WHATSAPP Number to Provide Information about Disasters

 செய்தி வெளியீடு எண்‌. 246

 நாள்‌: 08.06.2021

செய்தி வெளியீடு

    பேரிடர்‌ காலங்களில்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ ஆபத்துகள்‌ குறித்தான தகவல்களை தெரிவிக்க தனி வாட்ஸ்‌ அப்‌ எண்‌. (WhatsApp) மற்றும்‌ இணைய வாயிலாக தகவல்‌ பதிவு - புதிதாக அறிமுகம்‌

     பேரிடர்‌ காலங்களில்‌ இவ்வசதியினை பொது மக்கள்‌ பயன்படுத்தி கொள்ள மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. இராமச்சந்திரன்‌ தகவல்

   ‌ பேரிடர்‌ காலங்களில்‌, பாதிப்பிற்குள்ளாகும்‌ மக்களுக்கு பேரிடர்‌ குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில்‌ தெரியப்படுத்தும்‌ ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும்‌. இந்திய வானிலை ஆய்வு மையம்‌, இந்திய தேசிய கடல்சார்‌ தகவல்‌ மையம்‌, மத்திய நீர்வள ஆணையம்‌ போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும்‌ கனமழை, வெள்ளம்‌, புயல்‌, நிலநடுக்கம்‌, சுனாமி போன்ற பேரிடர்கள்‌ குறித்தான எச்சரிக்கைத்‌ தகவல்கள்‌ TNSMART செயலி மூலமும்‌, TWITTER, FACEBOOK உள்ளிட்ட சமூக வலைதலங்கள்‌ மூலமும்‌, அச்சு மற்றும்‌ மின்னணு ஊடகங்கள்‌ வாயிலாகவும்‌ பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



     மேலும்‌, பேரிடர்கள்‌ மற்றும்‌ விபத்துக்களை தடுக்கும்‌ வகையில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள்‌ தகவல்‌ தெரிவிக்கவும்‌, படம்‌ எடுத்து அனுப்பும்‌ வகையிலும்‌ 24 மணி நேரமும்‌ இயங்கும்‌ மாநில அவசரக்‌ கட்டுப்பாட்டு மையத்தில்‌ பேரிடர்‌ முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்சப்‌ WHATSAPP எண்‌. 94458 69848 துவக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 775௯௦ மூலம்‌ வரப்பெறும்‌ பேரிடர்கள்‌ தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள்‌ தொடர்புடைய அலுவலர்கள்‌ / துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

>>More About Statement of the Honble Minister for Revenue and Disaster Management



Public Distribution System - On Extra Rice for Rice Card Holders

 செய்தி வெளியீடு எண்‌:250

  நாள்‌:08.06.2021

செய்தி வெளியீடு

    தமிழகத்தில்‌ 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ உள்ளனர்‌. அதில்‌ 18.64 லட்சம்‌ அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (AAY) மாதம்தோறும்‌ அதிகபட்சம்‌ 35 கிலோவும்‌, 93 லட்சம்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர்‌ ஒருவருக்கு தலா 5 கிலோவும்‌, எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) 20 கிலோ விலையில்லா அரிசியும்‌ வழங்கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ தேவைக்கு ஏற்ப, புழுங்கல்‌ அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்‌.

    கொரோனா பரவலின்‌ இரண்டாம்‌ அலையால்‌, மக்கள்‌ பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, மே மற்றும்‌ ஜுன்‌ மாதங்களில்‌, முன்னுரிமை மற்றும்‌ அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ நபர்‌ ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல்‌ வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதற்காக, மத்திய தொகுப்பில்‌ இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும்‌ சேர்த்து கூடுதல்‌ அரிசி வழங்கி வருகிறது.

    உதராணமாக, ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில்‌ ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்‌. மே மாதம்‌ வழங்க வேண்டிய இந்த கூடுதல்‌ அரிசி விநியோகம்‌ அடுத்த மாதம்‌ (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும்‌.

    எனவே, மத்திய அரசின்‌ கூடுதல்‌ அரிசியும்‌ சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில்‌ உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜுன்‌ மாதத்தில்‌ மொத்தமாக விநியோகிக்கப்படும்‌ அரிசி விவரங்கள்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ உள்ள விளம்பரப்பலகைகளில்‌ விளம்பரப்படுத்தப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups

 செய்தி வெளியீடு:249

 நாள்‌ 08.06.2021

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups 

      மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.ஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து, மகளிர்‌ திட்ட அலுவலர்கள்‌, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள்‌ மற்றும்‌ மண்டல மேலாளர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று (08.06.2021) சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாக கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

      தமிழகத்தில்‌ உள்ள மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ பெண்களுக்கு குறு நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வழங்குவதிலும்‌, கடனை திரும்ப வசூலிப்பதிலும்‌ எழுந்துள்ள சிக்கல்கள்‌ குறித்த விபரங்கள்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்ததால்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 19.05.2021 அன்று மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநருக்கும்‌ கடிதம்‌ வாயிலாக சுய உதவிக்‌ குழுக்களுக்கு கடன்‌ வழங்குவதிலும்‌, சுய உதவிக்‌ குழுக்கள்‌ கடனை திரும்பச்‌ செலுத்துவதிலும்‌ சலுகைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

     மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, 13.05.2021 அன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும்‌, 21.05.2021 அன்று நுண்நிதி நிறுவனங்களுடனும்‌, 25.05.2021 அன்று சிறு கடன்‌ வழங்கும்‌ வங்கிகளுடனும்‌ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ காணொலி மூலம்‌ கலந்துரையாடல்‌ மேற்கொண்டார்‌.

      இந்நிலையில்‌, சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வசூலிப்பதில்‌ கடுமையான போக்கினை கையாளுகின்றன என்ற விபரம்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்துள்ளதைத்‌ தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தல்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்கள்‌, இன்று (08.06.2021) சுய உதவிக்‌ குழு உறுப்பினர்களின்‌ பிரச்சனைகளை காணொலி வாயிலாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்‌.

>>Click Here For More


Tuesday, June 8, 2021

Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

 Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

செய்தி வெளியீடு எண்‌:243

நாள்‌:07.06.2021

செய்தி வெளியீடு

       வணிகத்தில்‌ ஈரூபடாத: சில அமைப்புகள்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அமைப்புகளையும்‌ வரி செலுத்தும்‌ நபராக பதிவு செய்து அதன்‌ மூலம்‌ சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல்‌, போலிப்‌ பட்டியல்கள்‌ மூலம்‌ பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்ரு வரி வரவை மாற்றுவது தமிழ்நாரு வணிகவரித்‌ துறைக்கு தெரிய வருகிறது.


         இந்த பயனாளர்கள்‌ இது போன்ற மாயையான பரிவர்த்தனைகளில்‌ உள்ளீட்ரு வரி வரவு எருப்பதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பருத்தி வருகின்றனர்‌.

போலிப்‌ பட்டியல்கள்‌ வழங்குதல்‌, போலிப்‌ பட்டியலகள்‌ வழங்குவதற்கு எவ்வகையிலேனும்‌ உடந்தையாக இருத்தல்‌ மற்றும்‌ போலிப்‌ பட்டியல்கள்‌ மீது உள்ளீட்ரு வரி வரவு எருத்தல்‌ ஆகியவை தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள்‌ வரை சிறைத்‌ தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்‌. மேலும்‌ மோசடியாக பெறப்பட்ட உள்ளீட்ரு வரி வரவு, அதற்குண்டான வட்டி மற்றும்‌ அபராதத்‌ தொகையுடன்‌ வசூலிக்கப்பரும்‌.

       எனவே மேலே கூறப்பட்ட குற்றங்களில்‌ ஈருபரும்‌ நபர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி கரும்‌ நடவடிக்கை எருக்கப்பரும்‌ என மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

மேலும்‌, இது போன்ற தவறுகளை கண்காணிக்கத்‌ தவறும்‌ வணிகவரித்‌ துறை அலுவலர்கள்‌ மீது துறை ரீதியாக நடவடிக்கை எருக்கப்பரும்‌ எனவும்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களால்‌ தெரிவிக்கப்பட்ருள்ளது.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9