Wednesday, June 23, 2021

Release of Water From Vaigai Dam For Drinking Purpose

 Statement of the Additional Chief Secretary to Government, Public Works Department on release of water from Vaigai Dam for drinking purpose.



Monday, June 21, 2021

Contacts of Agricultural Engineering Department

AED Contacts:
Head Quarters
Thiru. R.Murugesan, M.E (Ag),Ph.D., Thiru.T.Chandhirasekar,M.E (Ag),
Chief Engineer ( Agrl.Engg),
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510722
Chief Engineer - River Valley Project,
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510522
Phone : 044 - 29510922, 29510822, 29515322
Fax : 044 - 29510622
email : aedce.tn@nic.in  




Provision of Solar Powered Pumping Systems

தமிழ்நாடு அரசு வேளாண்மைப்‌ பாறியியல்‌ துறை

விவசாயிகளுக்கு மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தீ பம்பு செட்டுகள்‌ அமைத்துக்‌ கொடுக்கும்‌ தீட்டம்‌.

வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும்‌ நோக்கத்துடன்‌ 2013-14 ஆம்‌ ஆண்டு முதல்‌ சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ மோட்டார்‌ பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாய க்கு மானியத்தில்‌ அமைத்துக்‌ கொடுத்து வருகிறது.


சூரிய சக்தி பம்புசெட்டுகள்‌ மூலம்‌ மின்‌ இணைப்பு தேவையின்றி பகலில்‌ சுமார்‌ 8 மணிநேரம்‌ பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம்‌ பெற முடியும்‌.

மத்திய அரசு, பிரதம மந்தீரியின்‌ விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்‌ தீட்டத்தின்‌ (PM-KUSUM) கீழ்‌ தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தியால்‌ இயங்கும்‌ பம்புசெட்டுகளை வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ செயல்படுத்திட ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. இத்திட்டம்‌ தற்பொழுது 2020-21ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியம்‌ விபரம்‌

இத்திட்டம்‌ மத்திய அரசின்‌ 30 சதவீத மானியத்துடனும்‌ தமிழக அரசின்‌ 40 சதவீத மானியத்துடனும்‌ ஆக மொத்தம்‌ 70 சதவீத மானியத்தில்‌ செயல்படூத்தப்படவுள்ளது. மீதமுள்ள 3௦ சதவீதம்‌ விவசாயிகளின்‌ பங்களிப்பாகும்‌.

விலை விபரம்‌

இத்திட்டத்தின்‌ கீழ்‌ அமைக்கப்படவுள்ள பல்வேறு வகையான சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான விலை நீர்ணயம்‌ செய்தல்‌ மற்றும்‌ நீ! ல்‌ வ்கீகரித்தல்‌ ஆகியவை மத்திய அரசால்‌ கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டூள்ளது.

Phamplets of Solar Pumb Price

CM Handed Over Cash Incentive of Swordsman Ms.Bhavani Devi.

 Tamil Nadu Honble Chief Minister handed over cash incentive of the swordsman Ms Bhavani Devi who is qualified for the Olympics, Japan to her mother in the function held at TANGEDCO, Head Quarters, Chennai

செய்தி வெளியீடு எண்‌:306

நாள்‌: 20.06.2021

ஜப்பானில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்களுக்கு 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

தமிழகத்தைச்‌ சேர்ந்த செல்வி பவானி தேவி அவர்கள்‌, தமிழகத்தின்‌ பாரம்பரிய கலையான வாள்வீச்சில்‌ பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்‌. அவரின்‌ ஊக்கத்தினையும்‌, விடாமுயற்சியினையும்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தில்‌ "விளையாட்டு அலுவலர்‌" பதவி வழங்கப்பட்டுள்ளது.


செல்வி பவானி தேவி அவர்கள்‌ தற்போது ஐப்பான்‌ நாட்டின்‌, டோக்கியோ மாநகரில்‌ நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக்‌ போட்டியில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌. இவர்‌ இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்‌ வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்மணி ஆவார்‌. அவர்‌ தேவையான பயிற்சிகள்‌ பெற அனைத்து உதவிகளையும்‌ தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர்‌ தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில்‌ பயிற்சி பெற்று வருகிறார்‌. மேலும்‌ சில பயிற்சிகள்‌ பெற செல்வி பவானி தேவி அவர்கள்‌ தமிழ்நாடு அரசிடம்‌ 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி கோரியிருந்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, செல்வி பவானி தேவி அவர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இன்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, 5 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம்‌ வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. வி. செந்தில்‌ பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. தயாநிதி மாறன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ராஜேஷ்‌ லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு. தர்மேந்திர பிரதாப்‌ யாதவ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inspected Preparedness Measure to Counter Possible Third Wave

  Honble Chief Minister inspected the paediatric COVID-19 ward set up at the Institute of Child Health and Hospital for Children, Egmore, Chennai as a preparedness measure to counter a possible third wave.

செய்தி வெளியீடு எண்‌:309

 நாள்‌:20.06.2021

செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பல்வேறு தொடர்‌ நடவடிக்கைகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதன்‌ காரணமாக, மாநிலத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ தாக்கம்‌ வெகுவாகக்‌ குறைந்து, நோய்த்‌ தொற்று கட்டுப்பாட்டில்‌ உள்ளது.

இந்நிலையில்‌, கோவிட்‌ தொற்றின்‌ மூன்றாவது அலையைச்‌ சமாளிப்பதற்கான ஆயத்தப்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (20.6.2021) சென்னை எழும்பூரில்‌ உள்ள அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்‌ குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன்‌ கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero Delay) குழந்தைகள்‌ கொரோனா பராமரிப்பு மையம்‌ அமைக்கப்பட்டுள்ளதைப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும்‌ மருத்துவ சிகிச்சை வசதிகள்‌ குறித்து மருத்துவர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌.



இம்மையத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்‌ பிரிவையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌. இப்பிரிவுகளில்‌ குழந்தைகளுக்குத்‌ தேவையான அனைத்து மருத்துவக்‌ கருவிகளும்‌, ஆக்சிஜன்‌ வசதிகளும்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.என்‌. நேரு, மாண்புமிகு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு. க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு. எ.வ. வேலு, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. இ. பரந்தாமன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ திரு. ககன்தீப்‌ சிங்‌ பேடி, இ.ஆ.ப., மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌ டாக்டர்‌ நாராயண பாபு, குழந்தைகள்‌ நல மருத்துவமனை இயக்குநர்‌ டாக்டர்‌ எழிலரசி ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9