Wednesday, August 14, 2013

Chief Ministers Medal on The Occasion of Independence Day.



சுதந்திர தினத்தையொட்டி, இந்த ஆண்டு 8 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு முதலமைச்சரின் ஆணை! 

     புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குத் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :



திருவாளர்கள் 

1. எம்.குணசேகரன்,
காவல் ஆய்வாளர், கே.கே.நகர் காவல் நிலையம்,
திருச்சி மாநகரம்.

2. இரா.தனராசு,
 காவல் ஆய்வாளர், மத்திய குற்றப் பிரிவு,
 திருப்பூர் மாவட்டம்.

3. சி.ராஜக்குமார் நவராஜ்
 காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தூத்துக்குடி மாவட்டம்.

4. பி.ஆர்.சிதம்பர முருகேசன்
 காவல் ஆய்வாளர், திட்டக்குடி காவல் நிலையம்
 கடலூர் மாவட்டம்.

5. பா.குமார்
 காவல் ஆய்வாளர், விக்கிரவாண்டி காவல் நிலையம்
 விழுப்புரம் மாவட்டம் .

        இதேபோன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :

திருவாளர்கள் 

1. விஜேந்திரபிடாரி, இகாப.,
காவல் கண்காணிப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்.

2. பெ.கு. பெத்து விஜயன்
 காவல் துணை கண்காணிப்பாளர்,
 தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தலைமையிடம், சென்னை.

3. கி. ஸ்ரீதரன்
 காவல் உதவி ஆணையாளர்,
 நுண்ணறிவுப் பிரிவு ,
 திருச்சி மாநகரம்.

     விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

வெளியீடு: 
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

No comments :

Post a Comment