Monday, August 19, 2013

Sanction Of Funds For Government Hospitals.

Sanction of funds for the development of Government Hospitals

       தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சுகாதார பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகளை அளித்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.


        சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு, தசை, திசு இணைப்பு (Rheumatology Department) பிரிவு, தற்பொழுது ஒரு இணை பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் ஆகிய குறைந்த எண்ணிக்கையுள்ள மருத்துவர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. மூட்டு தசை, திசு இணைப்பு சம்பந்தமான நோயாளிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை பெற்றிட ஏதுவாக, இப்பிரிவுக்கென 2 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், இப்பிரிவுக்கென தனியாக 20 படுக்கைகளுக்கு ஒப்பளிப்பு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்பிரிவில் பணியாற்றுவதற்காக இணை பேராசிரியர் (Immunology) 1, உதவி பேராசிரியர் (Rheumatology) 1, உதவி பேராசிரியர் (ஆiஉசடிbiடிடடிபல) 1, செவிலியர் 10, பெண் செவிலியர் உதவியாளர் 1, ஆண் செவிலியர் உதவியாளர் 1, சமூக பணியாளர் 1, தட்டச்சர் 1, பிசியோதெரப்பிஸ்ட் 1, ஆய்வக மேற்பார்வையாளர் 1, ஆய்வக தொழில் நுட்பாளர் நிலை ஐ - 1, ஆய்வக தொழில் நுட்பாளர் நிலை ஐஐ - 1 என மருத்துவர் மற்றும் மருத்துவர் அல்லாத 21 பணியிடங்களை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 15 லட்சத்து 71 ஆயிரத்து 48 ரூபாய் செலவினம் ஏற்படும். இப்பிரிவிற்கென தனியாக தளவாடங்கள் வாங்குவதற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

         தேனி மாவட்டம், தேனி மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள பெரியகுளத்தில் இந்த கல்வியாண்டு முதல் புதியதாக செவிலியர் கல்லூரி ஒன்று துவங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இக்கல்லூரி 50 மாணவ, மாணவியர் சேர்க்கையுடன் துவக்கப்படும். இக்கல்லூரியில் பணியாற்ற முதல்வர் பதவி 1, துணை முதல்வர் பதவி 1, விரிவுரையாளர் 1 ((Reader in
Nursing), ஆசிரியர் 5 ((Lecturer in Nursing), செவிலியர் ட்யூட்டர் (Tutor)நிலை II - 16, நூலகர் 1, நிர்வாக அலுவலர் 1, அலுவலகக் கண்காணிப்பாளர் 1, உதவியாளர் 1, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 1, காவலர் 2, காப்பாளர் 1, சுகாதாரப் பணியாளர் 2 என 34 பணியிடங்களை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களின் சம்பளம், எரிபொருள், உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் சில்லரை செலவினங்களுக்காக தொடர் செலவினமாக ரூபாய் 2.15 கோடியும், தொடரா செலவினமாக இக்கல்லூரிக்கான சொந்தக் கட்டடம் கட்டுதல் மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 8.99 கோடியும், உபகரணங்கள், அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள், பத்திரிக்கைகள், எழுதுபொருள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக ரூபாய் 2.40 கோடியும் என மொத்தம் ரூபாய் 13.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

     200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (Intensive Care Unit), அவசரப் பிரிவு (Emergency Ward), மகப்பேறுப் பிரிவு (Maternity Ward) மற்றும் பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு (Neonatal Care) பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் புற ஆதார முறையில், 8 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் பணி செய்ய, 286 பாதுகாப்புப் பணியாளர்கள் (Security Personnel) மற்றும் 868 காவல் பணியாளர்களை (watchman) நியமனம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள் தொடர்புத்துறை,சென்னை-9

No comments :

Post a Comment