Saturday, October 10, 2015

CM on the release of water for irrigation from Thirumurthi Dam

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்காகவும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்காகவும் 12.10.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்



No comments :

Post a Comment