Showing posts with label CM Requested the Public to Follow the Instructions of the Government to Contain the Spread of COVID-19. Show all posts
Showing posts with label CM Requested the Public to Follow the Instructions of the Government to Contain the Spread of COVID-19. Show all posts

Monday, May 24, 2021

CM Requested the Public to Follow the Instructions of the Government to Contain the Spread of COVID-19

 Honble Chief Minister has requested the public to follow the instructions of the Government to contain the spread of COVID-19

செய்தி வெளியீடு எண்‌:144 

நாள்‌:24.05.2021

செய்தி வெளியீடு

இன்று (24.05.2027 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தமது சமூகவலைதளப்‌ பக்கங்களில்‌ பதிவிட்டுள்ள காணொலியில்‌, மாநிலத்தில்‌ தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்‌, கொரோனா பரவலைத்‌ தடுப்பதற்கான அரசின்‌ விதிமுறைகளைத்‌ தவறாமல்‌ கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌. அதன்‌ விவரம்‌ வருமாறு:

தமிழக மக்கள்‌ அனைவருக்கும்‌ என்னுடைய அன்பான வணக்கம்‌.


      தமிழகத்தில்‌ புதிதாக அரசு அமைந்து இரண்டு வாரங்கள்‌ தான்‌ ஆகி இருக்கிறது. இந்த இரண்டு வாரங்களில்‌ ஏராளமான திட்டங்களைத்‌ தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிக்‌ கொண்டு வருகிறோம்‌. கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய்‌, பெண்கள்‌ எல்லோருக்கும்‌ சாதாரண கட்டணப்‌ பேருந்துகளில்‌ கட்டணமில்லாத பயணம்‌, ஆவின்‌ பால்‌ லிட்டருக்கு 3 ரூபாய்‌ குறைப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்‌ இறந்தவர்கள்‌ குடும்பத்திற்கு அவர்கள்‌ தகுதிக்கேற்ற வேலைகள்‌, இழப்பீடுகள்‌, தூத்துக்குடி வழக்குகள்‌ திரும்பப்‌ பெறப்பட்டது, எழுவர்‌ விடுதலைக்காக குடியரசுத்‌ தலைவருக்குக்‌ கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது,  கொரோனா நோயாளிகளுக்கும்‌ முதலமைச்சரின்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தில்‌ செலவுத்‌ தொகையைப்‌ பெறலாம்‌ என்று அறிவித்திருக்கிறோம்‌, “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌” என்ற திட்டத்தின்படி பெறப்பட்ட மனுக்களின்‌ கோரிக்கைகள்‌ நிறைவேற்றம்‌.

      இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்‌ கொண்டு இருக்கிறேன்‌. இது அனைத்தையும்விட முக்கியமானது கொரோனா தடுப்பு பணிகள்‌ தான்‌. கடந்த இரண்டு வாரங்களில்‌ 17,000 புதிய படுக்கைகள்‌ மருத்துவமனைகளில்‌ அமைக்கப்பட்டிருக்கிறது. இதில்‌ 7,800 ஆக்சிஜன்‌ வசதி கொண்ட படுக்கைகள்‌, 30 இயற்கை மருத்துவ மையங்கள்‌ திறக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திற்கான ஆக்சிஜன்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்துவிட்டோம்‌. தினமும்‌ 1.7 லட்சம்‌ பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 2,100 மருத்துவர்கள்‌ நியமிக்கப்பட இருக்கிறார்கள்‌. 6000 செவிலியர்கள்‌ நியமிக்கப்பட இருக்கிறார்கள்‌. தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக்‌ கொண்டு வருகிறோம்‌. 

Click Here for Details.