Showing posts with label Statement of CM On Indira Ninaivu Kudyiruppu Thittam.. Show all posts
Showing posts with label Statement of CM On Indira Ninaivu Kudyiruppu Thittam.. Show all posts

Saturday, August 3, 2013

Statement of CM On Indira Ninaivu Kudyiruppu Thittam.

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு, கிராமப்புற மக்களின் நலனுக்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான வீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர, கிராமப்புறப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டும் திட்டத்தினை மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

              இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகை 45000 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசின் பங்கு 33750 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்கு 11250 ரூபாய் ஆகும். மேலும் கான்கீரிட் கூரைகளுக்கு என தனியாக மாநில அரசால் 30000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கீரிட் கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் தொகையினை 30000 ரூபாயிலிருந்து 55000 ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணையிட்டார்கள். இதன் மூலம் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகுத் தொகை 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

          இந்த ஆண்டு (2013-2014) முதல் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதில் மத்திய அரசின் பங்குத்தொகை 52500 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்குத் தொகை 67500 ரூபாய் ஆகும்.

          இந்த ஆண்டு (2013-2014) இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 88436 வீடுகள் தமிழ்நாட்டில் கட்டப்பட இலக்கு நிர்ணயித்துள்ளது. 88436 வீடுகளுக்கான மாநில அரசின் பங்குத் தொகையான 603 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

வெளியீடு : இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,சென்னை-9