Wednesday, July 31, 2013

CM Sanctions Additional Funds for Green House Scheme.

          வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. 

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின்படி சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 60,000 வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கினை நிர்ணயித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆணைக்கிணங்க 2011-2012 ஆம் ஆண்டு 1080 கோடி ரூபாய் செலவில் 60,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டிற்கான இலக்கான 60,000 வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளன. 



            இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை 2013-2014 ஆம் ஆண்டு முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகையில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டட பணிகளுக்கும், 30 ஆயிரம் ரூபாய் சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதற்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலக்கான 60,000 பசுமை வீடுகள் கட்டுவதற்காக 1260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்ஆணையிட்டுள்ளார்கள்.  அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். 

******
வெளியீடு: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 
நாள் 31 .7.2013

CM Conducted Inspection at Mudumalai Wildlife Sanctuary.


Statement of CM on Petrol Price Hike.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 31.7.2013 

    மக்களின் வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆண்டுக்கு இரு முறை என்ற அளவில் உயர்த்திக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாதத்திற்கு இரு முறை என்று மாற்றி, வாக்களித்த மக்களை வஞ்சித்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, “பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்” என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

     நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குபவை பெட்ரோல் மற்றும் டீசல் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, “அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி”, “சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு”, “நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்”, போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றை திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டி உயர்த்துவது என்பது “வேலியே பயிரை மேய்வது போல்” என்ற பழமொழிக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை அரசே சீரழிப்பது போல்உள்ளது.

      ஜூலை மாதம் 2-ஆம் தேதியன்று டீசல் விலையை லிட்டருக்கு 50 காசாகவும், 15-ஆம் தேதி அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசாகவும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்து இருந்தாலும், சர்வதேச அளவிலான பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 காசு உயர்த்தியுள்ளது. இதே போன்று, மாதாமாதம் சிறிதளவு டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி டீசல் விலையையும் இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது சாமானிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.



    இந்த விலை உயர்வின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். டீசல் விலை உயர்வு எல்லா வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாவதுடன் சாதாரண மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள்; சந்தைக்கு தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் சிறு வியாபாரிகள்; விற்பனைப் பொருட்களை பல்வேறு இடங்களிலிருந்துகொண்டு வருவோர்; வாடகை வாகனங்களில் பயணிப்போர்; இரு சக்கர வாகனம் வைத்திருப்போர், என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.இதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலையும் வாகனக் கட்டணமும் கணிசமாக உயரும். உற்பத்திச் செலவு உயர்வதால் எல்லாப் பொருட்களின் விலையும் உயரும். மக்களின் வாழ்வைப் பற்றி2கவலைப்படாமல் எண்ணெய் நிறுவனங்களின் வளத்தைப் பற்றியே மத்திய அரசு கவலைக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கது.

    இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 25 விழுக்காடு அளவுக்கான கச்சா எண்ணெய் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு, சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றின் அடிப்படையிலும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவின் அடிப்படையிலும்; விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த விலை உயர்வு பிரச்சனையே எழாது. அவ்வாறு செய்யாமல், பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான விலை மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ‘தொழில் சம நிலை விலை’ என்ற அடிப்படையில் விலை நிர்ணயிப்பது முற்றிலும் தவறானது. இது போன்ற விலை நிர்ணயக் கொள்கை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதுஎன்பது நியாயமற்ற செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தச் சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடிய இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவதை இனி மேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    வழக்கம் போல “செவிடன் காதில் ஊதும் சங்கு போல்” என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு செயல்படுமேயானால், மக்களும் அதற்கேற்ப மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, செ துறை, சென்னை-9 

Thursday, July 25, 2013

Admission Notification of Rashtriya Indian Military College.


Ambulance Services in Chennai.


Ambulance Services 102
AAA Ambulance Services
551/23, P.H. Road, 600106.
262891199999
Alfaa Ambulance Service
814, P.H. Road, Kilpauk, Chennai - 600 010.
26432680
Ambulance Service W V S
19, East Spur tank Road, Chetpet, Chennai - 600 031.
28264025
Annai Kasthuri Ambulance Service
43, Swamy Nkn St, Chennai - 600 002.
28535393
Babu Ambulance
29 (Old No:15) Millers Rd, Chennai - 600 010.
26428888
Bismi Ambulance Service
5/9, N Mada St, Vadapalani, Chennai - 600 026.
24816219
David Ambulance Service
41, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032.
22300837
Flying Squad Ambulance Service
69/48, Outer Circular Road, K G Clny, Chennai - 600 010.
26474100
G S Ambulance Service
466, 3rd Avenue, Indira Ngr, Adyar, Chennai - 600 020.
24912308
Helping Point
21, Dr Thirumurthy Ngr, 1st St, Chennai - 600 034.
28174444
K J Hospital
182, P.H.Road, Chennai - 600 084.
26411513
M J Ambulance Service
27/12, Vasu St, Kilpauk, Chennai - 600 010.
25324083
Robin & Robin Health Care
162/16, Mangalam Colony, 7th Avenue, Anna Ngr, Chennai - 600 040.
26223344
Sri Devi Ambulance Services
30, P.H.Road, Koyambedu, Chennai - 600 107.
24792401
Sri Kumaran Ambulance Service
10, T V Puram, 1st St, Chennai - 600 094.
23743348
St John Ambulance Association
18 Corporation Colony Rd, R.R.Puram, Chennai - 600 024.
24728452
Trauma Care
1, Raman St, T. Nagar, Chennai - 600 017.
28152754
Vinayaka Ambulance & Funeral Service
No.160, P.H. Road, Kilpauk, Chennai - 600 010.
28213049

Hospital Ambulance Services


Apollo Hospitals 1066
Aysha Hospital 26426930
Balaji Hospital 22345282
Bone & Joint 26212137,1026
Child Trust Hospital 28277487
CAN STOP 26284256
CSI Rainy Hospital 25951329
Doctor Rex's 26424656,6465
First Med Hospitals 1066
Hindu Mission Hospital 22262244
Frontier Lifeline 52017575
Jayadev Ambulance 26412317
Madras Medical Mission 26565961,1801
Malar Hospitals 24914737
SriM.J. Ambulance Service 25324083, 26420647, 26432181
Med India 28204757
MIOT 22492288,3636
National Hospital 25240130,31
Ragas General Hospital 24492177,88
Robin & Robin 26223344,26205252
Sri Sankara 22485340
Sampath Nursing Home 24980602
Sugam Hospital 25734310
Sundaram Foundation 26268844
Sri Ramachandra 24768402