Honble Chief Minister has requested the public to follow the instructions of the Government to contain the spread of COVID-19
செய்தி வெளியீடு எண்:144
நாள்:24.05.2021
செய்தி வெளியீடு
இன்று (24.05.2027 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள காணொலியில், மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
தமிழகத்தில் புதிதாக அரசு அமைந்து இரண்டு வாரங்கள் தான் ஆகி இருக்கிறது. இந்த இரண்டு வாரங்களில் ஏராளமான திட்டங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், பெண்கள் எல்லோருக்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலைகள், இழப்பீடுகள், தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது, எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது, கொரோனா நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் செலவுத் தொகையைப் பெறலாம் என்று அறிவித்திருக்கிறோம், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின்படி பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம்.
இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது அனைத்தையும்விட முக்கியமானது கொரோனா தடுப்பு பணிகள் தான். கடந்த இரண்டு வாரங்களில் 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 30 இயற்கை மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டோம். தினமும் 1.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 2,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு வருகிறோம்.
Government is working with the vision to deliver all services online to the Citizens even in the remotest corner of the state through Arasu e-Sevai centres. Arasu e-Sevai centres are functioning with the objective of providing unified access to e-Services of different Government Departments on a common platform across the State.
The Arasu e-Sevai centres are run by agencies like Primary Agricultural Co-operative Societies (PACCS), Village Poverty Reduction Committee (VPRC), Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd (TACTV),TACTV Franchise, International Fund for Agriculture Development (IFAD) and Village Level Entrepreneurs (VLEs). Currently there are 12,649 Centres with 13,088 counters functioning across the State.
Services offered through e-Sevai
Revenue and Disaster Managment Department
Income Certificate
Revenue and Disaster Managment Department
Nativity Certificate
Revenue and Disaster Managment Department
Residence Certificate
Revenue and Disaster Managment Department
Community Certificate
Revenue and Disaster Managment Department
First Graduate Certificate
Revenue and Disaster Managment Department
Deserted Woman Certificate
Revenue and Disaster Managment Department
Family Migration Certificate
Revenue and Disaster Managment Department
Unemployment Certificate
Revenue and Disaster Managment Department
Widow Certificate
Revenue and Disaster Managment Department
Agricultural Income Certificate
Revenue and Disaster Managment Department
Certificate for Loss of educational records due to disasters
Revenue and Disaster Managment Department
No Male Child Certificate
Revenue and Disaster Managment Department
Unmarried Certificate
Revenue and Disaster Managment Department
Inter-caste Marriage Certificate
Revenue and Disaster Managment Department
Legal Heir Certificate
Revenue and Disaster Managment Department
Solvency Certificate
Revenue and Disaster Managment Department
License under Pawn Broker’s Act
Revenue and Disaster Managment Department
Money Lender's License
Revenue and Disaster Managment Department
Other Backward Community (OBC) Certificate
Revenue and Disaster Managment Department
Small / Marginal Farmer Certificate
Revenue and Disaster Managment Department
e-Adangal
Revenue and Disaster Managment Department
Indira Gandhi National Old Age Pension Scheme
Revenue and Disaster Managment Department
Indira Gandhi National Widow Pension Scheme
Revenue and Disaster Managment Department
Indira Gandhi National Disability Pension Scheme
Revenue and Disaster Managment Department
Differently abled Pension Scheme
Revenue and Disaster Managment Department
Destitute Deserted Wives Pension Scheme
Revenue and Disaster Managment Department
Unmarried Women Pension Scheme
Revenue and Disaster Managment Department
Destitute Widow Pension Scheme
Revenue and Disaster Managment Department
Tamil Nilam – Full Field Patta Transfer
Revenue and Disaster Managment Department
Tamil Nilam – Joint Patta Transfer
Revenue and Disaster Managment Department
Tamil Nilam – Subdivision
Revenue and Disaster Managment Department
Grievance Day Petition
Revenue and Disaster Managment Department
Tamil Nilam - Extract of A-Register
Revenue and Disaster Managment Department
Tamil Nilam – Extract of Chitta
Social Welfare and Nutritious Meal Programme Department
AnnaiTerasaAmmaiyarNinaivu Orphan Girl Marriage Assistance Scheme
Social Welfare and Nutritious Meal Programme Department
Chief Minister’s Girl Child Protection Scheme- I
Social Welfare and Nutritious Meal Programme Department
Chief Minister’s Girl Child Protection Scheme-II
Social Welfare and Nutritious Meal Programme Department
Social Welfare and Nutritious Meal Programme Department
Dr.Muthulakshmi Reddy NinaivuIntercaste Marriage Assistance Scheme
Social Welfare and Nutritious Meal Programme Department
EVR ManiammaiyarNinaivu Widow Daughter Marriage Assistance Scheme
Social Welfare and Nutritious Meal Programme Department
MoovalurRamamirthamAmmaiyarNinaivu Marriage Assistance Scheme
Civil Supplies Department
Apply for New Card
Civil Supplies Department
Alterations to the Card- Addition of New Family Members, Change of Address / Card Type / Cylinder count / Family Head Member, Modify / Remove Family Member details, Beneficiary change of Photo
Civil Supplies Department
Card Surrender / Cancellation
Civil Supplies Department
New User Registration
Civil Supplies Department
Family Card Blocking/ Unblocking
Civil Supplies Department
Printing of Smart card
Police Department
Card Surrender / Cancellation
Police Department
New User Registration
Police Department
Family Card Blocking/ Unblocking
Police Department
Printing of Smart card
Police Department
CSR Status
Police Department
FIR Status
Police Department
Online Complaint Registration
Police Department
Status Viewing
Police Department
Vehicle Search
Police Department
View FIR
Police Department
Download Accident Case Document
Police Department
Lost Document Report
Adi-Dravidar& Tribal Welfare Department
GoI Post Matric Scholarship for SC Students
Adi-Dravidar& Tribal Welfare Department
GoI Post Matric Scholarship for ST Students
Adi-Dravidar& Tribal Welfare Department
State Special Scholarship for Post Matric Students
Adi-Dravidar& Tribal Welfare Department
Higher Education Special Scholarship Scheme
Adi-Dravidar& Tribal Welfare Department
Issuance of Post Matric Scholarship for BC Students
Adi-Dravidar& Tribal Welfare Department
Educational Assistance to BC students in Professional Courses
Adi-Dravidar& Tribal Welfare Department
Educational Assistance to BC Graduates
Adi-Dravidar& Tribal Welfare Department
Educational Assistance to BC Polytechnic Students
Tamil Nadu Welfare Board
Ulema Pension Schme
Health Department
Pre-Registration of Pregnancies (PICME)
Directorate of Boilers
Registration of License under Boilers Act
Directorate of Boilers
Renewal of Licence under Boilers Act
Directorate of Boilers
Application for Approval of Manufacture and renewal thereof
Directorate of Boilers
Application for approval of Erector and renewal thereof
Letter of the Honble Chief Minister to the Honble Union Minister for Defence to speed up the search of missing fishermen after a fishing boat capsized near Lakshadweep due to strong windstorm in view of cyclone Tauktae.
செ. கு. எண்:08
நாள்: 23.05.2021
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விரைவில் தேடிக் கண்டுபிடிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த திரு.சபிஷ், என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் IND-KL-07-MM-4989 ல் 05.05.2021 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பைபோர் (8ஸூ0ா9 மீன்பிடி துறைமுகத்திலிருந்து 16 மீனவர்களுடன் மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அந்த 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் 4 மீனவர்கள் மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். “டவ் தே” புயல் கடந்த பின்பு 16 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலாமலும் அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. இது தொடர்பாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காணாமல் போன மீனவர்கள் குறித்த தகவல் இதுவரை ஏதும் பெறப்படாதது அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமுதாய மக்களிடையேயும் பெரும் மனத்துயரத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Honble Minister for Agriculture and Farmers Welfare chaired a meeting on the sale of vegetables and fruits during the complete lockdown due to COVID-19
செய்தி வெளியீடு எண்: 137
நாள்:23.05.2021
செய்தி வெளியீடு
கோவிட் 19 முழு ஊரடங்கு 24.05.2021 முதல் 31.05.2021 வரை காய்கறி மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 23.05.2021 அன்று கோவிட் 19 முழு ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் கே. கோபால், இ.ஆ.ப., வேளாண்மை - உழவர் நலத்துறை இயக்குநர், திரு. வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் திரு. க.வீ. முரளிதரன், இ.ஆ.ப, மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி
காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை தினம் தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.
சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும்.
தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட
நின்சாகார்ட்,
வேகூல்,
பழமுதிர் நிலையம்,
தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம்,
அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் .
போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்போழுது சுமார் 3000 மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.
உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
Honble Chief Minister has sanctioned Relief Assistance to fishermen families during Fishing Ban Period.
செய்தி வெளியீடு எண்: 139
நாள்:23.05.2021
செய்தி வெளியீடு
தமிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கு (2021ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000- வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி (குதி) ஆகியவற்றைச் சேர்ந்த 1,46,598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 172,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
Complete Lockdown - Relaxation to Industries manufacturing essential commodities, medical supplies and Continuous Process Industries
செய்தி வெளியீடு
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, 24.5.2021 அன்று முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies) மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் (Continuous Process Industries) ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலை தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த ம்சாழிந்சலை பணியாளர்கள் பணிக்கு சென்று வர E - Registration முறையில்https://eregister.tnega.org/பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் (Buses, Vans, Tempos and Cars) ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள்
பணிக்கு சென்று வர 25.5.2021 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இத்தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை (Buses, Vans, Tempos and Cars) ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நான்கு சக்கர வாகனங்களை (E - Registration) முறையில் https://eregister.tnega.org/ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். E - Registration செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல் துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர்.
இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான E - Registration தானாகவே புதுப்பிக்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9
TN CMPRF accepts online contribution through this Portal. You can click the Make Contribution option and fill the online donation form. It will lead you to the payment gateway where you can pay through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI.
1. Online Donation through this portal: TN CMPRF accepts online contribution through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI. Receipt can be taken immediately after successful contribution and Receipt in PDF file as an attachment will be sent to the email of the contributor.
2. Donation can also be made using UPI-VPA as tncmprf@iob. Contributors can e-mail the details of transactions along with Name, Address, Mobile Number and E-mail Id to jscmprf[at]tn[dot]gov[dot]in for obtaining receipt.
3. Offline donation through Cheque / Demand Draft drawn in favour of “Chief Minister’s Public Relief Fund” to be sent to The Joint Secretary to Government and Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai – 600 009. Tamil Nadu. India along with Name, Address, Mobile No. and E-mail ID of the contributor.
Honble Chief Minister handed over appointment order on compassionate ground to the legal heirs of the victims in the incident of Sterlite Factory, Thoothukudi District.
செய்தி வெளியீடு எண்:122
நாள்:21.05.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஈப்பு ஒட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்திருந்தனர்.
தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஒட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை இன்று (21.5.202] மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், மாண்புமிகு மீனவளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்ட கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் 14.05.2021 அன்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Tamil Nadu Medical Services - Covid 19 exigencies - Appointment of 2100 Medical Officers Temporarily - On Contract Basis - For a Period of 6 Months in Government Medical College Hospitals and attached institutions - Sanctioned - Orders - Issued.
Honble Chief Minister conducted surprise inspection at a PHC in Magudanchavadi, Salem District and seen the vaccination work in progress.
செய்தி வெளியீடு எண்:109
நாள்:20.05.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.5.2021) சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணிநேர அவசர மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும் கொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். கார்மேகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Text of the letter of the Honble Chief Minister to the Honble President of India requesting to accept the recommendation of the State Government to remit the life sentence of the Rajiv Gandhi assassination convicts.
Honble Chief Minister redressed the grievances received under Ungal Thoguthiyil Muthalamaichar Thurai.
செய்தி வெளியீடு எண்: 95
நாள்:18.05.2021
செய்தி வெளியீடு
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை'” உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் துவக்கம் - மனுதாரர்களுக்கு பயன்களை வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்று (18.05.2021) வழங்கப்பட்டன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”? என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”? என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, 9-5-2021 அன்று அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 இலட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை (SMS) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (61/45) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.
இதுவரை சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், பத்து (10) பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலத் திட்ட உதவிகளை இன்று வழங்கினார். ஆதம்பாக்கம், சென்னையைச் சேர்ந்த திருமதி. ராணி அவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், பரங்கிமலை, சென்னையைச் சார்ந்த திருமதி. N. நித்யா அவர்களுக்கு, விதவை உதவித் தொகையும், தியாகராயநகர், சென்னையைச் சார்ந்த திரு. U. சத்தியநாராயணன் அவர்களுக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகையும், சூளைமேடு, சென்னையைச் சேர்ந்த செல்வி. தாயாரம்மா அவர்களுக்கு முதிர் கன்னி உதவித் தொகையும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திருமதி. சுமதி அவர்களுக்கு தையல் இயந்திரமும், வில்லிவாக்கம், சென்னையைச் சேர்ந்த திரு. உதயகுமார் அவர்களுக்கு வாரிசு சான்றிதழும், ஆயிரம் விளக்கு, சென்னையைச்சேர்ந்த திருமதி நந்தினி அவர்களுக்கு காதுகேட்கும் கருவியும், இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டபாளையத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும், இராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு ஊராட்சியைத் சார்ந்த திரு. முத்துராமன் அவர்களுக்கு வீடு கட்ட உதவியும், இராணிப்பேட்டை மாவட்டம், சிறுவாளைத்தைச் சார்ந்த திரு. சுபாஷ் அவர்களுக்கு சொட்டுநீர் பாசன உதவி ஆகிய நலத் திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்று வழங்கப்பட்டன.
சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற நான்கு மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சம்பந்தப்பட்ட பின்வரும் துறைகளுக்கு வழங்கப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த திரு. M. முனுசாமி என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் கிராம ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டிடம் ரூ.10.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி ஆணையும், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த திரு. முருகன் என்பவரின் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.4.6 இலட்சத்தில் அனுமதி ஆணையும், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த திரு. குணசேகரன் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அசநெல்லிகுப்பம் கிராமம், சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.189 இலட்சத்தில் அனுமதி ஆணையும், இராணிப்பேட்டை மாவட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த திரு. புவனேஸ்குமார் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், எருக்கம்தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் அமைத்திட ரூ.1.1 இலட்சம் அனுமதி ஆணை ஆகிய நலத் திட்டங்களுக்கான ஆணைகள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.
இதேபோல், இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இத்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப., “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அதிகப்படியான நோய் தொற்று பரவல் மக்களிடையே இரண்டாம் அலையில் பேரழிவிற்குள்ளாக்கி வருவதால் பலர் தங்கள் உயிரை இழக்கின்றனர். கோவிட் - 19 இன் தாக்கம் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கிறது என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழக அரசு, குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதால், ஏற்கனவே மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகள் மூலம் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து, பொது மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட் ஆட்சியர் உட்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான பணிக்குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-
1. கோவிட்-19 காரணமாக இறந்த அனைத்து வயதுவந்தோரின் விவரங்களையும் சரிபார்த்து, பெற்றோர் இழந்த அல்லது கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை குழந்தைகள் நலக் குழுவின் முன் முன்னிலைப்படுத்துதல், குழந்தை நலக் குழுவானது இக்குழந்தைகளை தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு (Foster Care), நிதி ஆதாரத் திட்டம் (Sponsorship) போன்ற திட்டங்கள் மூலம் மறுவாழ்வு வழங்குதல் அல்லது குழந்தைகள் இல்லங்களில் சேர்த்தல் ஆகிய மறுவாழ்வு குறித்து முடிவு செய்யும். இவற்றில் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு),சட்டம் 2015-ன்படி, குழந்தைகளை இல்லங்களில் சேர்த்தல் என்பது கடைசி புகலிடமாக இருக்கும்.
2. பெற்றோர்கள் சிகிச்சையில் இருக்கும்போது குழந்தைகளை கவனித்துக்கொள்ள உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் தற்காலிகமாக குழந்தைகள் இல்லங்களில் தங்கவைத்தல்.
3. கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல்.
4. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிகிச்சை மையங்களுக்கு சரியான நேரத்தில் பரிந்துரைத்தல் மற்றும் கோவிட்-க்கு பிந்தைய சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதலை உறுதி செய்தல்.
5. ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு குழந்தைகள் இல்லத்தினை கண்டறிந்து அதனை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமாக கோவிட்-19 பராமரிப்பு மையமாக மாற்றுதல்.
மாவட்ட அளவிலான . பணிக்குழுவானது, கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் வாரத்திற்கு ஒருமுறை மற்றும் தேவையின் அடிப்படையில் கூடும்.
" District Level Task Force constituted for providing intervention programmes to care and protect children affected and infected by COVID-19 as well as children of COVID affected/infected parents."
Press Release
An unprecedented and unexpected wide spread rise in COVID -19 cases during the second wave had devastated the life of citizens and many had lost their life. The impact of COVID 19 especially affecting children is a serious concern. Since the Government of Tamil Nadu is having greater concern over the care and protection of children in the State, the State had already made a wide publicity among general public on the assistance available to children during the COVID pandemic through the District Child Protection Units.
The Government have constituted the District Level Task Force consisting of seven members including the District Collector of the concerned District as Chairperson for providing intervention programmes to care and protection of children affected and infected by COVID 19 as well as children of COVID affected /infected parents.
The District Level Task Force shall have the following duties and responsibilities:-
1. To check the details of all adult who have died due to COVID 19 and find out any children become orphan or children in need of care and protection and produce such children before the Child Welfare Committee which will decide their rehabilitation such as adoption, foster care, sponsorship etc, and institutionalization as the last resort as per the provision of Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015.
2. Placing of children in temporary shelters while parents are undergoing treatment and children are left without relative or guardian to take necessary care.
3. Psychological and counselling support to children infected / affected due to COVID 19 as well as children of COVID infected / affected parents.
4. Timely referral of children infected with COVID 19 to treatment centres and ensuring nutritional support during post treatment period.
5. Identifying and designating one registered child care institution in each district and making arrangement to make such institution as COVID care centre exclusively for children.
The District Level Task Force shall meet every week and as and when required for providing intervention programmes to care and protection of children affected and infected by COVID 19 as well as children of COVID affected /infected parents.
As per the instructions of the Honble Chief Minister, the Honble Minister for Hindu Religious and Charitable Endowments chaired a review meeting of the Department.
செய்தி வெளியீடு எண்:099
நாள்:19.05.2021
இந்து சமய அறநிலையத்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (18.05.2021) இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துறை அலுவலர்களுடன் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
1. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுதல்.
2. திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல்
Honble Chief Minister inaugurated the procedure of distributing Remdesivir to Private Hospitals on receiving requests online
செய்தி வெளியீடு எண்:097
நாள்:19.05.2021
செய்தி வெளியீடு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்போது, மருந்து விற்பனை செய்யப்படக்கூடிய இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப்படும் மருந்து தவறான முறையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், மருத்துவமனைகள் மூலமாக அதனை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 16-5-2021 அன்று ஆணையிட்டார்கள்.
இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து, ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிhttps://tnmsc.tn.gov.in/என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யும் மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.
இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் முதற்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பு. உமாநாத், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
"Honble Chief Minister has ordered for the production of oxygen, vaccine and life saving drugs in Tamil Nadu."
செய்தி வெளியீடு எண்: 91
நாள்:18.05.2021
"ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை - மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவு."
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும்" கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் (Joint Venture) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடபிருந்து விருப்பக் கருத்துகளை (Expression of Interest)31-5-2021-க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
The Micro, Small and Medium Enterprises (MSME) sector is the engine of growth in India and contributes substantially to employment generation, scaling up of manufacturing capabilities, balanced regional development and socio-economic empowerment. It is the biggest employer after agriculture in the Country. World over, MSMEs are the main vehicles for job creation. As per the Annual Report (2018-19) of the Ministry of MSME, Government of India, the share of MSMEs in the Country’s GDP is around 28.9%. MSMEs also contribute 48.1% of the total exports from India.
As per the National Sample Survey (NSS) 73rd round, conducted by the National Sample Survey Office, Ministry of Statistics & Programme Implementation, Government of India during the period 2015-16, Tamil Nadu has the third-largest number of MSMEs in the Country with a share of 8% and around five million enterprises. It also accounts for nearly 15.24% of India’s micro-enterprises and has the highest number of non-farm units.
Tamil Nadu enjoys a dominant position in the industrial sector as indicated by the Annual Survey of Industries (2017-18). Tamil Nadu has over 25 lakh persons engaged in the factory sector which is highest in the country. With 37,987 factories, the state accounts for the 4th highest nos of factories in the country. Tamil Nadu ranks 3rd in the amount of invested capital and in terms of total industrial output in the industrial sector.