Monday, May 17, 2021

COVID-19 - Deputation of IFS and IAS Officers Coordinating for Liquid Oxygen

COVID-19 - Deputation of IFS and IAS Officers to coordinate the logistics arrangements of the transportation of liquid Oxygen through Containers and Tankers from Kalinga Nagar and Rourkela.

 பத்திரிக்கைச்‌ செய்தி

16.05.2021

      மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ நிலவிவரும்‌ ஆக்ஸிஜன்‌ பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசிடம்‌ தெரிவித்ததன்‌ அடிப்படையில்‌ ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா நகர்‌, ரூர்கேலா ஆகிய இடங்களில்‌ நாள்‌ ஒன்றுக்கு 100 MT வீதம்‌ ஆக்ஸிஜன்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்‌ தற்பொழுது 110 MT தமிழ்நாட்டில்‌ பெறப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனை தமிழ்நாட்டில்‌ இரயில்கள்‌ மூலம்‌ தொடர்ந்து பெறுவதற்கு விமானங்கள்‌ மூலம்‌ டேங்கர்களை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி அங்கு அவற்றில்‌ ஆக்ஸிஜனை நிரப்பி பின்னர்‌ இரயில்கள்‌ மூலம்‌ தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.


      இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த கீழ்க்காணும்‌ இரண்டு அதிகாரிகள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

1. திரு. நிஷாந்த்‌ கிருஷ்ணா, இந்திய ஆட்சிப்பணி ரூர்கேலா நகரின்‌ ஒருங்கிணைப்பு பணிகளை கவனிப்பார்‌.

2. திரு .A. பெரியசாமி, இந்திய வனப்பணி, (வன பாதுகாவலர்‌) புவனேஸ்வர்‌ மற்றும்‌ கலிங்கா நகர்‌ ஆகிய இடங்களில்‌ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கவனிப்பார்‌.

இந்த அதிகாரிகள்‌ உடனடியாக ஒருங்கிணைப்புப்‌ பணிகளை மேற்கொள்ள ஒடிசா மாநிலத்திற்கு விரைந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


No comments :

Post a Comment